audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, June 30, 2022

பயம் மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?

 

  • இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.
  • தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.
  • நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.
  • காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.
  • அவர் அதை தட்டி விட்டார்.
  • பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.
  • அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.
  • இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.
  • அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர்‌ மீது அமர்ந்தது.
  • அவர் பதட்டப்படவில்லை.
  • நிதானித்தார்.
  • உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
  • அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.
  • அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
  • அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?
  • அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.
  • நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.
  • பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.
  • சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.
  • எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.

No comments:

Post a Comment