audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 2, 2020

மது அருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியுமா.!? இதோ உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!








கொரொனா வைரஸிற்கு ஜெர்மன், அமெரிக்கா, இந்தியா என மருந்து கண்டுபிடித்துவிட்டதாய் அறிவித்த போதும் இன்னும் முதற்கட்டத்திலேயே இருக்கின்றது. மனிதர்களுக்கு பரிசோதனை செய்தார்களா? என்னானது என்பது இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அண்மை காலமாக மது அருந்தினால் கொரொனா வைரஸ் தாக்காது என்ற செய்தி வைரலானது.


இதனை நம்பி மக்கள் மது தேடி அலைந்தனர். ஆனால் இது குறித்த உண்மை தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆல்கஹாலுக்கு கொரோனா வைரஸ் அழியும் என்பதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கொரோனாவை அழிப்பதற்கு ஆல்ஹாலின் அளவு 99% வீதம் இருக்க வேண்டும். அது வெளியில் உயிர் வாழும் வரை தான்.





அதாவது கைகள், கால்களில் இருக்கும் வைரஸை அழிக்க மட்டுமே. ஆனால் நீங்கள் அருந்தும் மதுவில் 40 தொடக்கம் 60 வரையிலான ஆல்ஹால் அளவே இருக்கிறது. இது கை கால்களில் உள்ள வைரஸை அழிக்கவே போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உங்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மது அருந்தினால் குணமாகும் என்ற தவறான கருத்தில் இருந்து மீண்டு விடுங்கள். இது முற்றிலும் வதந்தியாகும் கொரொனா வைரஸில் இருந்து மீள வைத்தியசாலையை நாடுவதே சிறந்தது என தெரிவித்துள்ளதுடன் மது அருந்தினால் கொரொனா வைரஸ் அழியாது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளது…!!

தும்மல் , இருமல் , மட்டும் இன்றி நுண்துளிகள் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு பரவும் கொரோனா வைரஸ்..! எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பானிய ஆய்வாளர்கள்…!!



இருமல் , தும்மல் , தவிர்த்து நுண்துளிகள் மூலமும் கொரொனா வைரஸ் பரவுவதாக ஜப்பானிய மருத்துவ ஆய்வாளர் இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது வரை இரண்டு முறையினால் அதாவது இருமல், மற்றும் தும்மலின் மூலம் மட்டுமே நேரடியாக தடைகளை மீறி கொரோனா தாக்கும் வாக்கு இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில்..
இன்றைய தினம் மூன்றவதாக நுண்துளிகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக ஜப்பானிய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தும்மல் மற்றும் இருமலை விட நுள் துளிகள் மூலம் பரவும் வேகமும் பலமும் அதிகம் என் கூறியுள்ள ஆய்வாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர் எதிரில் நின்று பேசும் போது நுண்துளிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை வெளிவருகின்றன.
காற்றில் கொரோனா வைரஸ் பரவாத நிலையில் நுண்துளிகளால் வைரஸ் சில மணி நேரங்கள் உயிர் வாழக் கூடியவை. அவை குறித்த இடத்திலேயே உயிருடன் இருக்கின்றன. இதனால் தும்மல் இருமலை விட நுண்துளிகள் மூலம் வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த முறையில் வைரஸ் பரவினால் யாராலும் தடுக்க முடியாமல் போகும் என ஜப்பானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப் பட்டால் தயவு செய்து வைத்தியர்களை நாடுங்கள். உண்மை அறிகுறிகளை கூறி அரசுக்கு உதவுங்கள். எங்கள் கையை மீறி போகிறது இழப்புகள், ஜாதி, மதம் என்பதை மறந்து விடுங்கள். தயவு செய்து யாராவது பாதிக்கப் பட்டால் நீங்களாக மருத்துவமனை செல்லுங்கள். நாடு நம் ஒவ்வொருவர் கையில் உள்ளது. தயவு செய்து ஆபத்தை உணருங்கள்…!!