audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 2, 2020

மது அருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியுமா.!? இதோ உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!








கொரொனா வைரஸிற்கு ஜெர்மன், அமெரிக்கா, இந்தியா என மருந்து கண்டுபிடித்துவிட்டதாய் அறிவித்த போதும் இன்னும் முதற்கட்டத்திலேயே இருக்கின்றது. மனிதர்களுக்கு பரிசோதனை செய்தார்களா? என்னானது என்பது இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அண்மை காலமாக மது அருந்தினால் கொரொனா வைரஸ் தாக்காது என்ற செய்தி வைரலானது.


இதனை நம்பி மக்கள் மது தேடி அலைந்தனர். ஆனால் இது குறித்த உண்மை தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆல்கஹாலுக்கு கொரோனா வைரஸ் அழியும் என்பதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கொரோனாவை அழிப்பதற்கு ஆல்ஹாலின் அளவு 99% வீதம் இருக்க வேண்டும். அது வெளியில் உயிர் வாழும் வரை தான்.





அதாவது கைகள், கால்களில் இருக்கும் வைரஸை அழிக்க மட்டுமே. ஆனால் நீங்கள் அருந்தும் மதுவில் 40 தொடக்கம் 60 வரையிலான ஆல்ஹால் அளவே இருக்கிறது. இது கை கால்களில் உள்ள வைரஸை அழிக்கவே போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உங்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மது அருந்தினால் குணமாகும் என்ற தவறான கருத்தில் இருந்து மீண்டு விடுங்கள். இது முற்றிலும் வதந்தியாகும் கொரொனா வைரஸில் இருந்து மீள வைத்தியசாலையை நாடுவதே சிறந்தது என தெரிவித்துள்ளதுடன் மது அருந்தினால் கொரொனா வைரஸ் அழியாது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளது…!!

No comments:

Post a Comment