audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, March 6, 2023

 விருந்தும் மருந்தும்.!!!!


எவ்ளோ  நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர்

வீட்டில்  விருந்தாளியாக இருக்கக்

கூடாது.!! அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு  அழகு.!!!!


.  நோய்வாய்பட்டால்3 நாள் மருந்து

சாப்பிட்டாலே குணம்  ஆக வேண்டும்.

அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு." விருந்தும் மருந்தும்

மூன்று நாளைக்குத்தான்" என பழமொழி இருக்கும் பொழுது மாதக்

கணக்கில்  மருந்து எடுத்துக்கொள்வது

சரியா.????


இந்த பழமொழியை  கேள்விப்படும் 

போதெல்லாம், ஒரு அருமையான கதை

நினைவில் வருகிறது..


ஒருத்தன் தன் தாயிடம் சென்று" அம்மா

என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள் .

போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான். தாயும் சரி என்று சொல்ல,

அம்மா எப்போ நான் திரும்பி வர என்று

 மகன் கேட்க,  அதற்கு அந்த தாய்,

" எப்பொழுது உன் முகம் உனக்கு 

தெரிகிறதோ அன்று வந்துவிடு.

அதற்கு மேல்  ஒரு நாள் கூட அங்கே 

தங்க வேண்டாம்"  னு சொல்லி

அனுப்பினாள்.!!!


தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும், மனைவியை 

அழைத்துக்கொண்டு விருந்துக்கு 

சென்றான். அங்கே தடல்புடலாய் 

விருந்து உபசரிப்பு.!!!!!


பெரிய தலை வாழை இலை போடப்பட்டு

விருந்து பரிமாறப்பட்டது.இலையில் 

வைக்க இடம் இல்லை.அத்தனை வகைகள்.!!!கோழி,மீன்,முட்டை,மட்டன்

என்று அனைத்தும் பரிமாறப்பட்டது.

அவனுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.!!!!


இரண்டாம் நாளும் எல்லாம் இருந்தது.

மட்டனை தவிர.அப்படியாக ஒவ்வொன்றாக ,ஒவ்வொரு ஐட்டமாக

ஒவ்வொரு நாளும் குறைந்தது .6ம் நாள்

உணவில் சைவ உணவு. சாம்பார் ஒரு

பொரியல்,ஒரு கூட்டு.!!!!


ஏழாம் நாள் இலையே இல்லை.தட்டில்

சோறு,சாம்பார். உடன் ஒரே ஒரு பொரியல்.8 ம் நாள் சாம்பார் சாதம்

மட்டுமே. இதை எல்லாம் பொருட்

படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான்.( காரணம் அந்தக்

காலத்தில் சின்ன வயதில் திருமணம் செய்து விடுவார்கள்.ஒரு மெச்சூரிட்டி

இருக்காது.!!!!)


  9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு,தொட்டுக்க  ஊறுகாய். பசியில்

அதையும் சாப்பிடுவதற்கு தலையை

குனிஞ்சா , அந்த கஞ்சி தண்ணியில்

அவன் முகம் தெரிந்தது.!!!!


அப்போ தான் அவன் அம்மா சொன்னது

நினைவுக்கு வந்தது.அவனும் இனிமேல்

இங்கே இருந்தா நமக்கு மரியாதை

இல்லை என்று உணர்ந்து, தன் வீட்டுக்கு

கிளம்பி விட்டான்.!!!!


( விருந்தும் மருந்தும் மூன்று நாள் )

No comments:

Post a Comment