audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, January 7, 2019

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]...! ! ! !

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).

*#147# – This lets you know whocalled you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – ProviderLock Status.
#pw+1234567890+2# – NetworkLock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM CardLock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLANadapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:

1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.

*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.

- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.

- This also helps you increase yourGPRS speed to some extent.

- It has drawback that your phonebattery will be consumed

*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life willincrease by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

*#4720* – used to deactivate HalfRate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet.

யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம்

யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.
1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!
இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.
ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்!

 தினமும் 3 நிமிடம்_தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும் 

தினமும்_3நிமிடம்_தோப்புக்கரணம் #உடலை_வலுவாக்கும் 
 
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
#தோப்புக்கரணம்_போடும்போது_காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
#தோப்புக்கரணம்_போட_விரும்பும்_ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
#பின்னர்_பயிற்சியானவுடன்_கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
#வலது_கை 
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.
#மூன்று_நிமிடங்கள்_தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்ல

வாடிக்கையாளர்களை கையாளும் முறை, வேலையாட்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாதது, கடையை வைத்திருக்கும் முறை, முதலாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்?

வாடிக்கையாளர்களை கையாளும் முறை,
வேலையாட்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாதது,
கடையை வைத்திருக்கும் முறை, முதலாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்?樂
தீர்வுகள்
ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு மிக மிக முக்கியமானவர்கள் வாடிக்கையாளர்களே.
இங்கு அனைவருமே, யாரோ ஒருவருக்கு வாடிக்கையாளர்களே
அந்த வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில்தான் நம் தொழிலின் வெற்றி இருக்கின்றது.
நம்மிடம் தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் வாடிக்கையான வாடிக்கையாளர்களை, முதலில் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் தேவை. (நாம் நினைக்கிற அப்பாவியின் ரீமேக் அவர்களே
இவர் எப்படியும் நம்மிடம்தான் வாங்குவார்கள் என சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், நம் தொழிலின் சறுக்கல் ஆரம்பம் ஆகிவிடும்.  எனவே இவர்கள் தான் நம்முடைய மினிமம் கேரண்டி லாபம் கொடுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்தது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற வாடிக்கையாளர்கள். ரெகுலராக வந்து கொண்டிருந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் திடீரென வரவில்லை என்றால், நிச்சயம் நம்மீது ஏதோ ஒரு குறையை அவர் கண்டுபிடித்துள்ளார் என்று அர்த்தம்.(புரிஞ்சுக்கிட்டா சரி)
எனவே அவர் நம்மை விட்டு விலகியது ஏன் என்பதை கண்டறிந்து, அந்த குறையை நிவர்த்தி செய்ததை அவரிடமே தெரிவித்து, மீண்டும் அந்த வாடிக்கையாளரை கவர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
சில வாடிக்கையாளர்கள் நம்மிடம் உள்ள குறையை நேரில் நம்மிடமே கூறி அதை சரிசெய்ய சொல்வார்கள். இவர்கள் ஒரு ரகம்.
இன்னொரு ரகம், நம்மிடம் ஏதாவது குறை இருந்தால், நம்மிடம் வருவதை குறைத்துக் கொள்வார்கள் அல்லது நிறுத்திக் கொள்வார்கள். உடனே நாம் சுதாரித்து, நம் குறையை சரிசெய்ய வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தானே, போனால் போகட்டும் என்று கவனக்குறைவாக இருந்துவிட்டால், நமது தொழிலுக்கு இறங்குமுகம் தான்.
நம்மிடம் உள்ள ஒரு நல்ல விஷயம் எப்படி புதுவகை வாடிக்கையாளர்களை நமக்கு கொடுக்கின்றதோ, அதே போல நம்மிடம் உள்ள ஒரு குறை, நமது ரெகுலரான வாடிக்கையாளர் பலரையும் நம்மை விட்டு நீங்கச் செய்துவிடும்.
வாடிக்கையாளர்கள் நம்மை இன்னும் தெரியாதவர்கள். புதுவகை விளம்பரங்கள் மூலம் தான் இவர்களை கவர வேண்டும். வாடிக்கையாளர்களை நம்மை நோக்கி இழுப்பது சாதாரணமான காரியம் இல்லை. அவர் வேறு ஏதாவது ஒரு கடையில் ரெகுலர் வாடிக்கையாளராக இருப்பார். ஏதாவது ஒரு முக்கிய பொருள், அவர் ரெகுலராக வாங்கும் கடையில் இல்லாத போது, அவர் நம்மை தேடி வருவார். அந்த நேரம் தான் நமக்கு சரியான நேரம், அவர் கேட்கும் பொருளை அவர் எதிர்பார்க்காத விலையில் கொடுத்து அசத்த வேண்டும். அப்போதுதான், வேறு பொருட்களையும் அவரை வாங்கச் செய்ய  முடியும்.
முக்கியமாக தொழில் செய்பவர்களுக்கு பொறுமை, இனிய புன்னகையான முகமலர்ச்சி அவசியம். சிலர் கடைகளில் வியாபாரம் செய்யும் போது எப்போதும் கடுகடுத்த முகத்தோடு இருப்பார்கள். வாங்கினால் வாங்கு, வாங்காவிட்டால் போ என துரத்துவார்கள். வாடிக்கையாளர்களை எப்போதும் வாடிக்கையாளர்களாக பார்க்காமல் ஒரு முதலாளிக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தால், எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் நம் வியாபாரத்தை யாராலும், அசைக்க முடியாது.
இதை பற்றி இன்னும் உள்ள போய் பாக்கலாம்.
மேலோட்டமாக பார்த்தால் இவ்வளவு தான அப்படின்னு போயிரும்
வாடிக்கையாளர்களை கையாளும் முறைகள்
வாடிக்கையாளர்கள்தான் நமது நிறுவனத்தின் கடவுள்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். (கொஞ்சம் ஓவராதான்  போறமோ? போவோம், போவோம்).
சிரித்த முகத்துடன் வாங்க என்று அழைக்க வேண்டும் (கடைக்காரரே என்ன குளோசப் விளம்பரத்துக்கு போறீங்களா? இப்படி பல்ல காட்றீங்க)
கண்டிப்பாக அக்கா, அண்ணன் என்று அழைக்க கூடாது, வாங்க சார் வாங்க மேடம், என்றுதான் அழைக்க வேண்டும், வாடிக்கையாளர் ஏழை பணக்காரன் என்று எல்லாரும் வருவார்கள். அவர்களை உடை நாகரீகம் பார்த்து கையாள கூடாது, நாம் அனைத்து வாடிக்கையாளர்களையுமே வாங்க சார் வாங்க மேடம் என்றுதான் அழைக்க வேண்டும் (சார் மேடம்னு சொன்னா, அவங்களுக்கே கிளுகிளுப்பா இருக்கும்
வாங்க சார் மேடம் என்று அழைப்பதால் அனைத்து தரப்பு ஏழை நடுத்தர வசதி படைத்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நம்மை சார் மேடம் என்று அழைக்கிறார்கள் என்று முதல் ஆத்ம திருப்தி ஏற்படும் (ஆமா குழந்தைகள் வந்தால் எப்படி சின்ன சார் சின்ன மேடம் அப்படி.
கட்டாயம் அவர்கள் வாங்க விரும்பும் பொருள்களை டேஸ்ட் கொடுக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் கூட்டி வரும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். (எலி மருந்து கேட்டா என்ன செய்வது)
வயதில் சிறிய வாடிக்கையாளர் குழந்தையாக இருந்தாலும், வாங்க போங்க என்றுதான் அழைக்க வேண்டும்.(அவ்வ்...)
குழந்தைகள்தான் இனிப்பு கார உலகின் கடவுள்கள்,  குழந்தைகளைத்தான் அதிக ஆசையை தூண்டும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். (அய்யயோ புரிஞ்சுக்கோங்க. இப்ப இருக்கிற குழந்தை அப்படி இல்லை)
அதிகமான பேர் காரம் இனிப்பு வாங்க அவர்களின் குழந்தைகள்தான் காரணம்.
குழந்தைகள் கடைக்கு வந்தால் கண்டிப்பாக மேற் சொன்ன கட்டளைகளை பின் பற்ற வேண்டும் (be careful)
வாடிக்கையாளர்களைபார்த்தால் வசதி படைத்தவர், ஏழை என்று கணித்து விடலாம், வசதி படைத்த வாடிக்கையாளர்களிடம், என்ன வேண்டும்? எவ்வளவு வேண்டும்? என்று கூற வேண்டும், அவர் விலை கேட்டால் விலை கூற வேண்டும். விலையை முந்தி கொண்டு கூற கூடாது, நம்ம எப்படியும் வாங்க போறோம், இவன் விலை சொல்லி காட்டுறானேன்னு நெனைப்பாங்க. (இதெல்லாம் தெரியாம நம்ம இத்தன நாள் வெகுளியா இருந்துட்டோமே...)
அதே கொஞ்சம் ஏழை நடுத்தர வாடிக்கையாளர்களிடம் என்ன பொருள் எவ்வளவு என்று கேட்ட உடனேயே விலை சொல்லி விட வேண்டும், அவர்கள் கணித்து வந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப விற்பனை செய்ய வசதியாக இருக்கும், ஏழை  நடுத்தர வாடிக்கையாளர்களிடம் விலைய முன் சொல்ல வில்லை என்றால், விலை அதிகம் என்று வாங்கிய பொருளை திருப்பி தந்து விடுவார்கள்)
கஸ்டமர் அனைவரும் பாரிஸ் லண்டனில் இருப்பவர்கள் இல்லை, அனைவரும் ஊரக பின்புலத்தை கொண்டவர்கள், அவர்களுக்கு ஜிஎஸ்டி விலை பற்றிய புரிதல் இருக்காது, விலை அதிகம், வரி அதிகம் என்று சத்தம் போடுவார்கள், வேலை செய்பவர்கள் கோபப் படவே கூடாது. சிறு புன்னைகயுடன் கருணை வர வைக்கும் முகத்துடன், எந்த தயவும் இன்றி முதல் வார்த்தை சாரி அல்லது மன்னிப்பு கேட்டு விட்டு, ஜிஎஸ்டி பற்றி புரிய வைக்க வேண்டும். (இப்பவே கண்ணுகட்டுதே)
கஸ்டமர் பொருளை வாங்கி கொண்டு செல்லும் போது, தாங்யூ சார், மீண்டும் வருக சார், என்று வெட்க படாமல், வேறுபாடு இல்லாமல் கூற வேண்டும்
கடைக்குள் கஸ்டமர்கள் வந்த உடன், தற்பொழுது வெயில். பலர் சூட்டில் வருவார்கள் வந்தவுடன் காத்து ஓட்டமாக நிற்க ஆசை படுவார்கள், காத்தாடி ஓடுகிறதா? ஓடவில்லை என்றால் ஓடி போய் அதை போட்டு விட வேண்டும், மழை குளிர் காலங்களில் அவர்களிடம் கேட்டு அவர்கள் அமர்ந்து நிற்க்கும் இடத்தில் உள்ள காத்தாடியை அனைக்க வேண்டும். (பெட்டிகடைல என்னப்பா பண்றது?)
தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும், கஸ்டமர் கடைக்கு வரும் முன்னரும், பின்னரும் நிறைய பேர் தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீர் ஸ்டாக்கை கவனித்து ஊற்றி கொண்டே இருக்க வேண்டும். (எந்த தண்ணிய சொல்றீங்க. அய்யோ நம்ம வாய் வேற)
கஸ்டமர் நிற்கும் பொழுது, வேலையாட்கள் பர்சனலாக சத்தமாக பேசி கொள்ள கூடாது, பர்சனல் விசயங்கள் எல்லாம் உள் அறைக்குள் பேசி கொள்ள வேண்டும். (அரட்டைலாம் உள்ளேதான் வச்சிக்கணும்)
கஸ்டமர்கள் தரத்தைத்தான் எதிர் பார்ப்பார்கள், தலையில் கட்டாயம் கேப், கையில் கட்டாயம் குளோஸ் அணிந்து தான், ஒவ்வொரு பொருளையும் தொட வேண்டும். கஸ்டமர்கள் முன்பு, எந்த பொருளையும் குளோஸ் இல்லாமல் தொட கூடாது (நாங்க ஆப்ரேஷன் தியேட்டர்லயா இருக்கோம், தொப்பி கையுறை போடுறதுக்கு)
டிஸ்பிளே கிளாஸ் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், கஸ்டமர் வந்த உடன் அதுதான் முதல் பார்வை, எனவே கஸ்டமர் வந்து கை வைத்தால் கண்ணாடி பூத்து, வெள்ளழுக்கு படும். கஸ்டமர் சென்ற உடன், உடனேயே அடிக்கடி அதை துடைக்க வேண்டும்
வேலையாட்கள் கடை பிடிக்க வேண்டிய கட்டாய நடைமுறைகள் :
வேலையாட்கள் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், எந்த மற்ற கோபம் வர அளவுக்கு, அதிகமான சிரிப்பு இல்லாமல் சிறு புன்னகையுடன் இருக்க வேண்டும். (சிரிச்சுகிட்டே இருந்தா பைத்தியம்ன்னு சொல்லுவாங்க பாஸ்)
தலையில் கேப், கையில் குளோஸ் இல்லாமல் புட்டிங் ஏரியாவுக்குள் இருக்க கூடாது, கேப் குளோஸ் அணிந்தே இருக்க வேண்டும்
கையில் நகம் அறவே இருக்க கூடாது
தன் மத சார்ந்த எந்த அடையாளமும் இருக்க கூடாது எந்த மத வேலையாட்களாக இருந்தாலும், திருநீரூ பூசி இருப்பது குங்குமத்தை பூசி இருப்பது கூடாது, காற்றில் உணவு பொருட்களில் விழும் எனவே எந்த மத அடையாளத்தையும் கஸ்டமர்களிடம் வேலையாட்கள் காட்டி கொள்ளவே கூடாது, கஸ்டமர்கள் கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள் என்று சில கோட்பாடுகளுடன் வருவார்கள், எனவே அதை வேலையாட்கள் சில பல விசயங்களை அறை உள் அறைகளில் விட்டு விட வேண்டும், கையில் கயிர் கட்டி இருப்பது கூடாது, ஒரு வேலை கட்டி இருந்தால், கை பகுதியில் படாமல் இருக்கும்வாறு ஏத்தி கட்டி இருக்க வேண்டும், பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்து கொள்ளலாம் (ரொம்ப பெரிய மனசு)
பார்லரில் இருக்கும் அனைத்து பொருள்களின் பெயரும், விலைகளின் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்)
கஸ்டமரை முதலில் எவர் பார்க்கிறாரோ, அவர் வரவேற்க வேண்டும், அவன் வரவேற்கட்டும் இவன் வரவேற்கட்டும்னு இருக்க கூடாது, அப்பொழுது வேறு வேறு வேலையை பார்த்து கொண்டு இருப்பார்கள், எனவே கஸ்டமரை முதலில் பார்ப்பவர் கட்டாயம் வரவேற்க்க வேண்டும் (வாங்க சார், வாங்க சார்...)
கஸ்டமர் வந்து எந்த ஸ்டேசனில் நிற்கிறாரோ, அந்த ஸ்டேசன் லேபரிடம் முதலில் பார்த்தவர் கஸ்டமர் நிக்குறாங்க பாருனு சொல்லனும், ஏன்னா அந்த ஸ்டேசன் வேலையாள் வேறு வேலை ஏதாவது செய்து கொண்டு இருப்பார், இல்லை கீழே குனிந்து, அமர்ந்து இருப்பார்
கஸ்டமருக்கு முன்னால் கையை வாயில் வைப்பது, மூக்கில் கை வைப்பதை, கண்ட இடங்களில் கை வைக்க கூடாது (செல்லாது, செல்லாது)
கஸ்டமருக்கு முன் எந்த பொருளையும் வெறும் கையால் தொட கூடாது, கஸ்டமருக்கு முன் எந்த பொருளையும் திங்க கூடாது. அப்படி திங்க வேண்டும என்றால், கஸ்டமர் கண்ணில் பாடாதவாறு, கஸ்டமர் இல்லாத போது, பொருளை எடுத்து உள் அறையில் வைத்து கொண்டு உண்ணுங்கள (எனக்கு கொஞ்சம் குடுங்கன்னு கேப்பாங்க).
கஸ்டமருக்கு முன் வேலையாட்கள், சக வேலையாட்களை மாமா மாப்ளே என்று அழைக்க கூடாது, அண்ணன், தம்பி என்பது கூட சக வேலையாட்களை அழைக்கலாம், கஸ்டமர் முன்பு சக வேலையாட்களை நட்பின் காரணமாகவோ, இல்லை உறவு முறை காரணமாகவோ, மாமா மாப்ளௌ என்று அழைக்கவே கூடாது, வயதில் சிறிய வேலையாட்களாக இருந்தால் வா போ  என்றும், பெரியவர்களாக இருந்தால் வாங்க போங்க என்று அழைத்து, பொருள் விலை, சம்பந்தமாகத்தான் பேச வேண்டும்
வேலையாள் தவறு செய்தால் கஸ்டமருக்கு முன் திட்ட கூடாது, கஸ்டமரிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பிய உடன் உள் அறையில் வைத்து திட்ட வேண்டும் (உள்ள கூட்டிட்டு போயி குமுறுகுமுறுனு குமுறுங்க)
வேலையாட்களுக்குள் நக்கல் நையாண்டி, நகைச்சுவை எல்லாம், உள் அறை்குள் தான் இருக்க வேண்டும்
வேலையாட்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், தாடியும் தம்பட்டையுமாக இருக்க கூடாது, மூன்று நாளைக்கு ஒருமுறையாவது கிளீன் சேவ் செய்ய வேண்டும், இல்லை ஐந்து நாள் கூட சரிதான், வளர்ந்த தாடியை தடவினால் முடி கொட்டும் அதை தவிர்க்கவே, 3,5 நாளுக்கு ஒரு முறை சேவ் செய்ய வேண்டும்
கழிவறை, எதற்க்கு சென்றாலும், வரும்போது கையை அதற்கான கெமிக்கல் பயன்படுத்தி கையை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்
கையை அடிக்கடி கழுவ வேண்டும், புட்டீங் ஏரியாவை விட்டு, வெளியே சென்று, சுவரை தொடுவோம், நோட் பேனா எல்லாவற்றிலும் கிருமி இருக்கும். எனவே கையை சுத்தமாக கழுவுதல் நல்லது
கல்லாவில் இருப்பவர் தயவுசெய்து உணவுப்பொருளில் கை வைக்கக்கூடாது, ஏன் என்றால், சில்லரை காசுகள், நோட்டு  காசுகளே அதிக கிருமிகளை கடத்தும், கழிவறை கூடங்கள், பிச்சைகாரன் தட்டுகள், பிணத்தின் காசுகள் சவ காசுகள் என்று பலரிடமும் இருந்து வரும், எனவே கிரீமிகள் எளிதில் பரவும், உணவு கெடும் எனவே கல்லாவில் இருப்பவர்கள் கையை கழுவி பிறகுதான் உணவை தொட வேண்டும்.பொருள்கள் அனைத்தையும் மூடியே வைத்திருக்க வேண்டும்.
இதை அனைத்தையும் தாரக மந்திரமாக வேலையாட்கள் கடைபிடித்தால், நிறுவனம் சிறப்பான இடத்தை மக்கள் மனதில் பெறும், தரமான பொருள்களை தரமாக தருகிறோம் என்ற சிறப்பான நற்பெயரை பெறும்
கடையை வைத்திருக்கும் முறை :
கடைக்கு  கண் கவர்ச்சி, மிக மிக தேவை கடை எப்போதும் கஸ்டமர் பார்வைபடும்படி இருக்க வேண்டும், எப்போதும் புதிது போலவே தோற்றமளிக்க வேண்டும், நாம் நிறைய ஹோட்டல்கள் பார்த்திருப்போம். அனைத்துமே மாறி மாறி போய் இருக்கும், அதற்கு காரணம் பழசு போல் பார்வை படும். அதனாலயே பல ஹோட்டல்கள் காணாமல் போய் இருக்கும், எனவே கடையின் உள்ளும் வெளியிலும் எப்பொழுதுமே சுத்தமாக புதிது போல் பேண வேண்டும்
கஸ்டமர் கண்ணில் படும்படி எந்த மத அடையாளங்களும், குறிப்பாக பேக்கரி போல் உணவகங்களில் அதை பின்பற்ற கூடாது, கடவுள் போட்டோக்களும் இருக்க கூடாது, கஸ்டமர்கள் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று வருவார்கள். கடவுளுக்கு முன்பு நெய்வேத்தியம் பண்ணுவது போல், பலகாரங்கள் சாம்பிராணி, சூடம் அகல்விளக்கு, இது எல்லாம் இருப்பது, அவர்களுக்கு மன சங்கடத்தை தரும். எனவே அதை தவிர்ப்பது நலம். அதே போலவே பார்லருக்குள் எந்த மதத்தை பின்பற்றினாலும், மத நம்பிக்கை கடவுள் போட்டோக்களை கஸ்டமர் பார்வைகளில் வைக்க கூடாது. உள் அறைக்குள் வைத்து பூஜை புணஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
ஹட்சன் குழுமம் தமிழகத்தை சேர்ந்த சந்திர மோகன் குழுமம் அவர்களுடையது தான். ஆரோக்கியா, ஹட்சன், அருண் ஐஸ்கிரீம், ஐபாக்கோ எல்லாக், அவர்கள் ஆச்சாரமான இந்து. ஆனால் எந்த ஒரு சின்ன கடையிலும் பார்லர்களிலும், மத நம்பிக்கை கடவுள் போட்டோக்களை முன்பு கஸ்டமர் பார்வையில் வைத்தது இல்லை. அனைத்து தரப்பு மக்களும் ஹட்சனை ஆதரிக்க இது மிக முக்கிய காரணம்.
அனைத்து பொருளுக்கும் நேம் டேக் இருக்க வேண்டும். நேம் பொருள் இருந்து நேம் டேக் இல்லை என்றால், வெண்மையான தாளில் டார்க்கான ஸ்கெட்சில் எழுதி ஒட்ட வேண்டும் நேம் டேக் வரும் வரை, நேம் டேக் இருந்து பொருள் நம்மிடம் இல்லை என்றால், அந்த ட்ரேயில் வேறு ஒரு பொருள் வைப்பாம், எனவே அந்த பழைய நேம் டேக்கை எடுத்து விட்டு, என்ன பொருளோ, அந்த பொருளை வைத்து அதற்க்கு உண்டான நேம் டேக்கை வைக்க வேண்டும்.
கண்ணாடிகள், பொருள் இருக்கும் பாக்ஸ், உக்காரும் சேர் டேபில், பக்க சுவர்கள் சுத்தமாகவும் புதிது போலவும் வைத்திருக்க வேண்டும்
அடிக்கடி எம்டி, மாப் போட்டு, தண்ணி மாப் போட்டு, தரையை சுத்த படுத்தி கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக கஸ்டமர் இல்லாத போது (note this point).
எந்த பொருளையும் நம்மிடம் இல்லை என்றால் அந்த  பொருள் இப்போதான் முடிஞ்சுச்சு, வேறு பொருள் அது ரிலேட்டடா சஜசன் பண்ணனும். இல்லாத பொருள் எப்போது வரும் என்பதை கஸ்டமரிடம் கூற வேண்டும்
அனைவரும், குழுவாக இருக்க வேண்டும். காலையிலேயே ஒரு டார்கெட், முதல் நாள்  செய்த தவறு, நல்லதுகளை பேசி, அதை இந்த நாளில் கடை பிடிக்க வேண்டும், தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்.
காத்தாடிகள், லைட்டுகள்  பார்லருக்குள் ஓடி கொண்டே எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
தினம் தினம் சுத்த படுத்துவது, மணிக்கு ஒரு முறை சுத்த படுத்துவது, வாரத்திற்க்கு இரண்டுமுறை சுத்த படுத்துவது, வாரத்திற்க்கு ஒருமுறை சுத்தபடுத்துவது, மாதத்திற்க்கு ஒரு முறை சுத்தபடுத்தும் பொருட்களை வகைபடுத்தி, கட்டாயம் சுத்தபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். கடை புதிது போலவே இருக்கும். என்னென்ன கெமிக்கல் எது? எதற்க்கு? பயன்படுத்தி துடைக்க வேண்டும், என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
முதலாளி கடைபிடிக்க வேண்டியவை :
எங்க முதலாளி நல்ல முதலாளி வெள்ள மனம் நல்ல உள்ளம் கொண்ட முதலாளி இப்படி பாடனும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா நம்ம முதலாளி இப்படி பாடுற மாதிரியா நடந்துக்குவாங்க.
முதலாளி என்பவர் தொழிலாளி கிட்ட அன்பா நடந்துக்கனும்
தொழிலாளிக்கு ஒரு கஷ்டம்னா, அந்த கஷ்டத்துல பங்கு எடுத்து, அத தீர்த்து வைக்கனும்
நான் முதலாளி, நீ எங்கிட்ட சம்பளம் வாங்கி வேலை செய்ற தொழிலாளி என்ற எண்ணம் வரக்கூடாது.
முதலாளி தொழிலாளிகிட்ட சகஜாம பழகணும்.
முதலாளி என்பவர் தொழிலாளியையும், தனது நிறுவனத்தையும், சரியான முறையில் நடத்தி செல்ல வேண்டும்
தனக்கு கிடைக்கும் லாபத்தில் தொழிலாளிக்கும் சிறிய தொகை தர வேண்டும்.
தொழிலாளிக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு என்று எண்ண வேண்டும்.
சிரிச்ச முகத்தோட இருக்கனும். சிடுசிடுன்னு இருக்க கூடாது.
சம்பளம் கரெக்டா குடுக்கணும். கரடுமுரடா குடுக்கக் கூடாது.
தொழிலாளி வருவதற்கு முன் வரவேண்டும். அவர்கள் சென்றவுடன் செல்ல வேண்டும்.
முதலாளி திட்டம் தீட்ரவரா இருக்கணும். திட்டிதிட்டி தீர்ப்பவரா இருக்கக் கூடாது.
அனைத்து தொழிலாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்பவரே சிறந்த முதலாளியாக இருக்க முடியும்.
கருத்து,
சொல்லியே ஆகணும்ப்பா? என்ன சொல்றது? என்ன என்னத்த சொல்றது
முதலாளி நல்லா இருந்தா தொழிலாளி நல்லா இருப்பாங்க, தொழிலாளி நல்லா இருந்தா, முதலாளி நல்லா இருப்பாங்க. இருவரும் நாணயத்தில் உள்ள இருபக்கமும் போல. ஒண்ணு இல்லாம மற்றொன்று இல்லை.
அதேபோல் கடைக்காரர் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களை, ஏமாற்றக்கூடாது.


ஒரு குட்டிக்கதை

கிராமத்தில் இருந்து வரும் பெரியவர் தன்னிடம் உள்ள முருங்கையை கொடுத்து, அதற்கு பதிலாக பருப்பு வாங்கி கொண்டு செல்வார்.
அதாவது 10 கிலோ முருங்கை குடுத்து, 10 கிலோ பருப்பு வாங்கிச் செல்வார்...
ஒரு நாள் கடைக்காரருக்கு சந்தேகம் வந்தது. அந்த முருங்கை காயை எடை போட்டு பார்த்தார். 9 கிலோ தான் இருந்தது.கடைகாரருக்கு பயங்கர கோவம். இப்படி தான் என்னை ஏமாற்றுகிறாரா என்று.பெரியவர் வந்தவுடன் எதுவும் சொல்லாமல் எதுக்கு இப்படி ஏமாத்துன என்று கூறி திட்டி, பெரியவரை அடித்தும் விட்டார்.அந்த பெரியவர் என்னான்னு சொல்லுங்க. சொன்னாத்தானே தெரியும், என்று கடைகாரரிடம் கேட்டார். அந்த கடைக்காரர் என்னிடம் நீ 10 கிலோ பருப்பு வாங்கி கொண்டு, 9 கிலோ முருங்கையை கொடுத்து ஏமாத்தி இருக்கிறீர் என்றார்.அதற்கு அந்த பெரியவர் ஐயா என்னிடம் தராசு கிடையாது நீங்கள் குடுத்த 10 கிலோ பருப்பை வைத்துத்தான் நான் முருங்கையை எடை போடுவேன் இதில் என்னுடைய தவறு கிடையாது. நான் நேர்மையா தான் இருக்கிறேன், என்று கூறி சென்று விட்டார். அப்போது தான் கடைக்காரர் தன் தவறை உணர்ந்தார். 
ஏமாற்றியது பெரியவர் அல்ல, 
கடைக்காரர் இந்த மாதிரி கடைக்காரர் ஏமாத்தாம, தன்கிட்ட வாடிக்கையாளர்கிட்ட நேர்மையா, எடை போட்டு குடுத்தாலே போதுங்க. 
வேற ஒன்றும் பண்ண வேண்டாம்*

அவனவன் எண்ணம் போலவே முதலாளி, தொழிலாளி, வேலையாட்கள்,  வாடிக்கையாளர்கள் அனுபவிப்பார்கள்.

Sunday, February 18, 2018

වස්තු – vastū- பொருட்கள்



1
නානකාමරය
குளியலறை
2
ඇඳ 
படுக்கை
3
නිදනකාමරය
படுக்கைஅறை
4
සීලිම
உட்கூறை

5
පුටුව
நாற்காலி

6
රෙදි
துணிகள்

7
කබාය
மேற்சட்டை

8
කෝප්පය
கிண்ணம்

9
 මේසය
மேசை/ 

10
ඇඳුම
உடை

11
බිම
தரை

12
ගෑරැප්පුව
கவைமுள் /முட்கரண்டி
13
ගෘහ භාණ්ඩ
அறைகலன்
14
වීදුරු
கண்ணாடி
15
තොප්පිය
தொப்பி
16
නිවස
வீடு
17
තීන්ත
மை
18
ජැකට්ටුව
சிறியசட்டை






முருங்கை



முருங்கை ☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்  போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨✨✨✨✨

Thursday, January 18, 2018

கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

‘கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.
கோக்க கோலா மட்டுமன்றி சர்க்கரையுடன், கேபைன் எனப்படும் மூலப்பொருளும் கலந்த பானங்களை நாம் பருகும்போது..,
முதல் பத்து நிமிடம்:
நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது.
இருபதாவது நிமிடம்:
உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பி அமோக உற்பத்தியை தொடங்கி விடுகிறது. இதையடுத்து, கிடைக்கக்கூடிய சர்க்கரையை எல்லாம் நமது கல்லீரல் கொழுப்பாக மாற்றி, உடலுக்குள் தேக்கி வைத்து கொள்கிறது.
நாற்பதாவது நிமிடம்:
கேபைன் எனப்படும் வேதியல் கரைசலை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன. இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.
நாற்பத்தைந்தாவது நிமிடம்:
நமக்கு ஊக்கத்தையும், பேரின்பத்தையும் ஏற்படுத்தவல்ல மூளையின் மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ‘ஹெராயின்’ உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கும் ஊக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கு இணையானதாக கருதப்படுகிறது.
அறுபதாவது நிமிடம்:
இதில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ கால்சியம், மேக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துகள் நமது சிறுகுடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் விளைவாக இரத்த ஓட்டம் கூடுகிறது. சிறுநீர் கழித்தே தீர வேண்டிய கட்டாய உணர்வு ஏற்படுவதுடன், சிறுநீர் வழியாக உடலில் உள்ள கால்சியம் சத்தும் வெளியேறி விடுகிறது.
கட்டாயமாக சிறுநீர் கழிப்பதன் வாயிலாக நமது எலும்புகள் சக்திபெற ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்ட கால்சியம், மேக்னீசியம், துத்தநாகம், மற்றும் சோர்வுத்தன்மையை நீக்கும் ‘எலக்ட்ரோலைட்’ திரவம், நீர் ஆகிய சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகின்றன. இவை யாவும் வெளியேறிய பின்னர், மீண்டும் சர்க்கரைக்காக உங்கள் இரத்தம் ஏங்கத் தொடங்கும்.எரிச்சல், களைப்பு ஆகியவை தோன்றி மீண்டும் இதைப்போன்ற குளிர் பானங்களை நாட வேண்டிய உந்துதலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உங்கள் வகுப்பிலும் அவன் இருக்கலாம்


வழமையான ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் மிஸஸ் தொம்ஸன். அவருக்கு ஒரு வழக்கம்  இருந்தது.அதுதான்  வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் மிஸஸ் தொம்ஸன் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் ஒப்பதிற்காக அனுப்பப்பட்டது. ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் மிஸஸ் தொம்ஸனுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது  பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார். உடனே மிஸஸ் தொம்ஸன் 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விடயம்கூட இல்லை!' என்றார்.

உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை மிஸஸ் தொம்ஸனுக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் மிஸஸ் தொம்ஸன்.

மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் மிஸஸ் தொம்ஸன்.

நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கென்சர் நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவன் பெறுபேறுகளில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய்  வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் மிஸஸ் தொம்ஸன் தலைமை ஆசிரியரைப்பார்த்து  சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

அடுத்த திங்கள் காலை மிஸஸ் தொம்ஸன் வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது  அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…

அவ்வாண்டின் பாடசாலை இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென  பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொதி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. மிஸஸ் தொம்ஸனுக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் போத்தல் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் மிஸஸ் தொம்ஸன் அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.

மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி  சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட்  இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது. மிஸஸ் தொம்ஸனின் மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. மிஸஸ் தொம்ஸன் ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டொக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Thomson,
‘I have seen many more people in my life. But you are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore PhD…..

அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன. மிஸஸ் தொம்ஸனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் போத்தல் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு church இற்குப்புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் மிஸஸ் தொம்ஸனை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
மிஸஸ் தொம்சன் பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த மிஸஸ் தொம்ஸனாய் இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! எம்மாலும் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.