audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

மத அரசியல்1 3.............மத அரசியல் -16





மத அரசியல்-13: டாவோயிஸம்

By C.P.சரவணன் | 








டாவோயிஸம் (Taoism)

ஆரம்ப காலத்தில் டாவோ ஒரு மதமாக இருந்தது என சொல்வதை விட ஒரு தத்துவமாக இருந்தது எனச் சொல்லலாம். சீனாவின் பழமையான மதம் டாவோயிஸம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப் பழமையான மதம் இது.





லாவோட் ஸே

லாவோட் ஸே (Laozi) என்றால் ”வயதான எஜமான்” அல்லது வயதானவர் எனப் பொருள்படும். லாவோட்ஸே தன் வாழ்வின் பெரு பகுதியை சௌ பேரரசிலேயே கழித்தார். பேரரசின் வீழ்ச்சியை முன் கூட்டியே அவர் உணர்ந்து அங்கிருந்து விலகி எல்லைப் ப்குதிய்ல் வசித்தார். அங்கிருந்த சுக்கச் சாவடி அதிகாரியான “இன் ஷி’வேண்டுகோளின்படி கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டு டாவோ டே ஜிங் (Tao Te Ching) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இது ஒரு மனிதன் உயர்வை அடைவதற்கும், நல்ல தலைவானாக விளங்குதற்கும் என்ன மாதிரியான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான தத்துவ நூலாகும்.

சொர்க்கத்திற்கும், பூமிக்கும் முன்பாக என்ன இருந்தது அல்லது இருக்கிறது என்பதைப் பற்றிய ஒர் திறன்பெற்ற ஆய்வையும் அதில் விளக்கி இருந்தார். இவரது நூல் சமயம் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் இருந்தது அது பலரையும் ஈர்த்தது. எனினும் டாவோயிஸம் அப்போது நெறி முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கற்ற ரீதியிலேயே பின்பற்றப்பட்டு வந்தது.





ஸாங் டாவோலிங்

ஸாங் டாவோலிங் (Zhang Daoling ) என்பவர் கி.பி.142ஆம் ஆண்டில் டாவோ டே ஜிங் நூலைப் புனித நூலாக விளக்கினார். இது வெறும் தத்துவம் சார்ந்த நூல் மட்டுமல்ல, வானத்து தேவதைகளை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்தும் புனித நூல் என்பதைக் கண்டறிந்தார்.

ஆன்மீகத் தொடர்பினை அழகாகவும், ஆழமாகவும் இதில் விளக்கப்பட்டிருப்பதை நன்றாகப் புரிந்துணர்ந்தார். மேலும் மரணமற்ற நிலையைப் பற்றியும் மனிதர்கள் அறிந்து கொள்ள இது உதவுவதாகவும் கூறி, ஒரு ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட தீதியில் டோவோயிஸம் என்னும் மதத்தை உருவாக்கினார்.

கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இக்லிஷ் இருவரும் டாவோ டே ஜிங் நூலை நவீன மொழிபெயர்ப்பாக்கினர். இதன்பிறகே டாவோயிஸம் சார்ந்த நூல்கள் ஏராளமாக வெளிவந்து மக்கள் மத்தில் பரவலான எழுச்சியை ஏற்படுத்தியது. நிறைய பேர் இம்மத்தில் ஈடுபாடு வைத்து அவனைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர் டாவோயிஸம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் தன் சிறகை விரித்தது என்பது வரலாற்றுச் சுவடுகள் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.





எட்டு சாவாமையுள்ளவர்கள்

சாங் லிங் அதாவது சாங் தாவோ லிக் என்பவர் மேற்குச் சீனாவில் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தும் இரசவாத முறைய அறிமுகப்படுத்தினார். புத்த மதத்தின் தோற்றத்தினால் வந்த சவாலை சமாளிக்க தன்னை ஒரு மதமாக பிரபலப்படுத்திக் கொண்டது. அதன்பின் சாவாமையுள்ளவர்கள் எட்டு(Eight Immortals) தெய்வங்களை (பா ஷியான்) அடுப்படியின் தெய்வம் (சாஓ ஷென்) நகர தெய்வக:ள் (ஹெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர் வணங்கப்பட்டனர்.

ஒரு கூட்டத்தில் டாவோயிஸம் என்பது தத்துவம் மட்டுமே என்றும், சமயம் மட்டுமே என்றும் இருவேறு கோணத்தில் கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்து அறிவியலாளர்களும் தீவிரமான ஆய்வினை மேற்கொண்டனர். எனினும் முடிவில் இது இயற்கை, மனிதம் மற்றும் தெய்வீகம் ஆகிய அனைத்தையும் வலியுறுத்தி இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மட்டுமன்றி, ஒரு தலைவனாக இருந்து கொண்டு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்னும் அரிய வழிகாட்டுதலையும் இது நமக்கு அருளியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மூட நம்பிக்கைகளால், கி.பி.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் டாவோயிஸம் திட்டமிட்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இந்த மதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மீண்டும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது. அதன் அரிய தத்துவங்கள் அதன் வளத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இப்போது கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்தவர்களும் டாவோயிஸத்தின் மீது புதிய அக்கறை கொண்டு வருகின்றனர். முக்கியமாமக அவர்கள் இதனை மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்தினை வற்புறுத்தும் தத்துவம் சார்ந்த விஷயமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.

அக்யூபங்சர், மூலிகை, மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இதனை அணுகி வருகிறார்கள். டாவோயிஸம் எனபதில் இம்மாதியான மருத்துவம் ஒரு பகுதி என்பதே உண்மை.

டா என்றால் வழி அல்லது ‘பாதை’ என்று பொருள். இந்த அண்டமானது இயல்பாகவே ஒரு வழியைக் கொண்டிருக்கிறது. அந்த வழியை அறிந்து அதனுடன் மனிதன் ஒன்றிப்போகிறபோது அவன் முழுமையைப் பெறுகிறான். நிறைவை அடைகிறான். இப்படித்தான் போதிக்கிறது டாவோயிஸம்.

டாவோயிஸ நெறிகள் ‘மும்மணிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. கருணை, அடக்கம், பணிவு ஆகியவையே அந்த மும்மணகள். ஐசவ உணவு உண்பதே நல்லது என்றும் இம்மதம் வலியுறுத்துகிறது.

இயற்கையை வணங்குதல், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் போன்றவை டாவோயிஸட்டுகளால் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சீன இரசவாதம், ஜோதிடம், சமையல், போர்க் கலைகள், சீன மரபு வழி மருத்துவம், மூச்சுப்பயிற்சி போன்றவை டாவோயிஸத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது.

இம்மதம், சீனாவைத் தவிர தைவான், புருனே, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 20 கோடிப் பேரால் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் போகர் என்ற சித்தரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். அங்கு இவர் ‘போ யங்’ என்று அழைக்கப்படுகிறார்.

சீனாவில் டாவோயிஸம் உருவாகக் காரணமாக இருந்த லாவோட்ஸேயும், போகரும் ஒருவரே என்றும் சிலர் கூறுகின்றனர். பிறப்பால் இவர் ஒரு சீனர் என்றும் இவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.



தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475





மத அரசியல்-14: கன்பூசியனிஸம்

By C.P.சரவணன் | 










கன்பூசியஸ் (Confucianism)

சீனாவின் லூ நாட்டில் ஷான்டோங் மாநிலத்தில் சாங்பிங் மாவட்டத்தில் டிஸோ/ கு பூ என்னும் இடத்தில் லூவின் டியூக் ஷியாங்கின் இருபத்து இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.மு. 551ஆம் ஆண்டு செப்டம்பர் 28 கன்பூசியஸ் பிறந்தார். அவர் இயற்பெயர் குங்ஃபூ ட்ஸூ ( K'ung Fu-tzu). அவருடைய தாய் நிச்சியூ மலையில் பிள்ளை வரம் கேட்டு பிராத்தனை செய்ததன் விளைவாக பிறந்தார்.

பிறப்பின் சமயத்தில் அவருடைய தலையில் ஒரு புடைப்பு இருந்தது, அதன் காரணமாக அவர் “சியூ” (குன்று) என்றழைக்கப்பட்டார். கன்பூசியஸ் என்ற வார்த்தை “குவாக்-ஃபூ-ட்ஸே என்ற சீன வார்த்தையின் லத்தீன் எழுத்துப் பெயர்ப்பாகும். இவரது இயற்பெயர் குங்பூஸ. பெரும் தத்துவ மேதையான இவர் அநேகமாகக் கடவுளாகவே வணங்கப் பட்டு வருகிறார் இவரது கருத்துக்கள் ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு ‘கன்பூசியனிஸம்’ என்னும் மதமே உருவாகியது. அவரது நூல் ஆனலெக்ட்ஸ் இம்மதத்தின் புனித நூலாக விளங்கி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளிலும் இம்மதம் விரிந்து பரவி உள்ளது.

கன்பூசியஸின் தந்தை அவரது 70வது வயதில் மறுமணம் செய்தார். அந்த மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். இவருக்கு நான்கு வயதான போது தந்தை இறந்து போனார்.

தந்தையை இழந்த அந்தக் குடும்பம் வறுமையில் தள்ளாடியது. வாழ வழி தெரியாமல் தத்தளித்த அக்குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு இந்தப் பிஞ்சுச் சிறுவன் தலைமேல் வந்து வழுந்தது. எனவே படிப்பைத் துறந்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பல வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை. சிறு வயது முதலே சிரமங்களை அனுபவித்த காரணத்தை தலையெழுத்து என்றோ, விதி என்றோ சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிடாமல், மனிதனுக்குத் துன்பம் ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் தனது சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டது.
அறியாமை தான் முக்கியக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்ட கன்பூசியஸ், அறியாமைக்கு என்ன காரணம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வது தான் உண்மையான அறிவு என்ற புதிய தத்துவத்தைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டார். இச்சிந்தனையின் ஊடாக வரலாற்றைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் கட்டடக் கலையிலும் வல்லமை மிகுந்தவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.

முகச் சிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்த கன்பூசியஸ், தனது இருபதாவது வயதில் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார். குழந்தைகளைப் பண்புடனும், நறந்குணத்துடனும் வளர்த்தார்.

குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் சமூக நலனிலேயே அதிக அக்கறை கொண்டவராக இருந்தபோதிலும், குடும்பதம்திற்குத் தேவையான வருமானத்திற்காக வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இவரது அறிவாற்றல் சிறப்பானதாக இருப்பதை உணர்ந்த அரசாங்கம், உணவுப் பொருள் கிட்டங்கியைப் பராமரிக்கும் அதிகாரியாகப் பணிபுரிய வாய்ப்பளித்தது. அந்த வேலையிலும் தனது திறமையைக் காட்டினார். பற்பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இவரது அட்டகாசமான திறமையை அரசும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. மேலும் அரசின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆக்கமிகு கொள்கைகளை வகுத்துக் கொடுக்கவே, கன்பூசியஸின் மதிப்பும், மரியாதையும் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும் பொறுப்பை அரசு அவருக்கு வழங்கியது.

இவ்வாறாக அறிவில் ஈடிணையற்றவராக விளங்கி, பெரும் புகழ் சம்பாதிக்க அவர் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிமானது கல்வி மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்தார். எனவே பிரபல தத்துவஞானி அரிஸ்டாட்டிலைப் போலவே கல்விக் கழகம் ஒன்றை நிறுவினார். அரசு நிர்வாகம், சமூக முன்னேற்றம், ஒழுக்கம், பண்பு போன்றவற்றைப் பாடமாக மாணவர்களுக்குப் போதித்தார். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத் துவத்தை உணர்வதிலும், சுதந்தமிரமாகச் சிந்திக்கும் திறனை வலியுறுத்துவதிலும் கவனம் செலுத்தினார்.

இவரது இப்புதிய முயற்சி பெரும்பாலானவர்களைக் கவர்நதாலும், சிலருக்குக் கசந்தது. அதற்கு முக்கியக் காரணம் என்ன வென்றால், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அவர் பேசிவந்தது தான்.

மக்கள் மதச் சம்பிரதாயங்களில் மூழ்கி, மூடநம்பிக்கையில் உழன்று கிடக்கிறார்கள். மதம் என்பது அவர்களை முட்டாள்களாக்கி இருக்கிறது. அறியாமையின் காரணமாக மதவெறியோடு காணப்படுகிறார்கள். என்றெல்லாம் கன்பூசியஸ் பிரசங்கம் செய்துவந்தார். இவ்வாறு மதத்தின் மீதான தனது வெறுப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படையாக காண்பித்தார். வாழும் காலத்தின் மனிதன் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிப்பணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.

கன்பூசியஸின் இத்தகையப் போக்கு அரசு அதிகாரிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரைக் குறை கூறத் தொடங்கினர். இதனால் அரசாங்கப் பணியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலையை விட்டு வெளியே வந்த கன்பூசியஸ், பல நாடுகளுக்கும் சென்றார். அங்கெல்லாம் தமது எண்ணத்தையும், கருத்துக்களையும் பரப்பினார்.

அவரது முற்போக்கான கருத்துக்களால் கவரப்பட்ட குறுநில மன்னர்கள் சிலர், அவருக்கு உதவ முன்வந்தபோதும், ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கொடிய வறுமை அவரைப் பலமாக ஆட்கொண்ட போதும், இவ்வாறு உதவிகளை அவர் ஒதுக்கித் தள்ளியது பலரையும் வியப்பில் விழிவிரிய வைத்தது. அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கௌரவிக்க விரும்பியது. ஆனால் அதனையும் ஏற்க மறுத்து விட்டார்.

கடுமையான சிந்தனை, ஓயாத உழைப்பு, வறுமையின் பிணைப்பு போன்ற காரணங்களால் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தனது 70-வது வயதில் ஒய்வெடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தமது சீடர்களுடன் கடைசிக் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். சீடர்களுக்கு உபதேசங்கள் வழங்கிக் கொண்டே வசந்தமும் இலையுதிர்க் காலமும் என்னும் நூல் ஒன்றையும் எழுதினார்.

கன்பூஸியசின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது கருத்துக்கள் இன்னும் அதிக ஆதரவைப் பெற்றது. அவர் மீதான நன்மதிப்பு அதிகமானது. அவரது கொள்கைகள் தத்துவம் என்பதையும் தாண்டி மதமாக உருவெடுத்தது.

அதுவே ‘கன்பூசியனிஸம்’ என்ற பெயரில் அவரது கருத்துக்கள் அனைத்தும் மதமாக மாறியது. உலகில் மக்களிடையே ஏழை, பணக்காரர் என்கிற மாதிரியான எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றார் கன்பூசியஸ். ஆதரவற்றோர், முதியோர், ஏழை எளியவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்பதையும் அவர் வலியுறுதினார். கல்வியை வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்ற கன்பூசியஸ், இளைஞர்கள் சுதந்திரமாக சிந்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.



கன்பூசியஸ் ஒரு கடவுளாகவே மதிக்கப்படலானார். அவர் பிறந்த கு பூவில் அவருக்குக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோ 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் கன்பூசியஸ் பிறந்த வீடும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்பூசியஸ் கோயில் மற்றும் வீடு அமைந்துள்ள 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான வளாகத்தில், ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்துள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களும் அங்கே காணப்படுகின்றன. கடந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகளாக சீனாவை ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இந்த வளாகத்தைப் பாதுகாத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்பூசியஸ் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனத்தை மா சேதுங் கடைப்பிடித்து வந்தார். எனவே கம்யூனிஸ்ட் சீனாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் கன்பூசியஸ் தத்துவத்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் டமாவோவின் இறப்புக்குப் பின் கன்பூசியஸ் சித்தாந்தம் அரசின் ஆதரவுடன் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

மனித நேயம், நற்பண்பு, சுதந்திரமான செயல்பாடுகள், முழுமையான நிறைவு, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது கன்பூசியஸ் மத நெறி.



கன்பூசியனிஸம் (Confucianism)

இவருடைய தத்துவங்கள் கன்பூசியனிஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்புக்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார். நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.



ஐந்து இலக்கியங்கள்




1. ஷி ஜிங் (பாடல் நூல்)
சௌ காலத்தின் தினசரி வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் 305 பாடல்கள்
2. ஷூ ஜிங் (வரலாற்று நூல்)
பேரரசு காலத்திலிருந்து சீனர்களுன் 17 நூற்றாண்டு கால வரலாறு
3. ஈ ஜிங் ( மாற்றங்களின் நூல்)
ஆறு முழுமையான நேர்க்கோடுகளின் சேர்க்கையால் உருவாகக் கூடிய 64 சேர்மானங்களின் விளக்கங்கள் அடிப்படையிலான நூல்
4. லி ஜி (சடங்குகளின் நூல்)
சடங்குகள், சம்பிரதாயங்கள் பேரில் விதிமுறைகள் அடங்கிய நூல்
5. சுன்சியூ (இளவேனிற்கால நிகழ்ச்சிகள் நூல்)
கன்பூசியசின் சொந்த் ஊரான லூவின் வரலாறு


லி, சென்

சமுதாயத்தில் சீர்மிகுலைந்து போயிருந்த ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்ட அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே கடைபிடிக்க வேண்டிய கடமைகளை உணர்ந்ந்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். லி என்றால் ஒரு சமூகத்தில் மனிதன் ஒருவன் எவ்வாறு முறையாகச் செயல்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். இக்கோட்பாடுகளே “லி’ எனப்படும்.”சென்” ஐ கடை பிடித்தால் அனைவரையும் கனிவோடு நடத்த முடியும். ரென், இயி, இலி என்று இதன் அடிப்படை நெறிகளைச் சொல்வார்கள். ரென் என்றால் பிறர் மீதான மனிதநேயம் மற்றும் பொதுநலம் சார்ந்த கடமை உணர்வு என்று பொருள். இயி என்றால் நியாயத்தை நிலைநிறுத்த முயற்சித்தல், நன்மை செய்ய விழைதல் மற்றும் ஒழுக்க மனப்பான்மை ஆகியனவாகும்.

‘ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் முக்கியமான அறப்பண்புகளைக் காப்பதற்காக ஒருவன் தன் உயிரையும் தர வேண்டும் என்று கன்பூசியஸ் நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் சீனத்து பழமையான மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர் என்றாலும் கன்பூசியஸ் நெறியானது மனிதநேயம் சார்ந்ததாகவும், இறைசாரா நம்பிக்கை உடையதாகவுமே இருக்கிறது. கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாகக் காண்பதற்குப் பதிலாக பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறி என்று கூறுவோரும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியனிஸத்தை ஒரு சமயமாக அடையாளப்படுத்தி உள்ளது.



சீடர்கள்

இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான் (Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.



கன்பூசியஸின் நான்கு புத்தகங்கள்

1. தா ஷூஹ் (மஹா கல்வி)
கண்ணியவானின் கல்விக்கு அடிப்படைப் புத்தகம்
2. சுக் யுங் (நடுநிலைக் கோட்பாடு)
நடுநிலையோடிருந்து மனித இயல்பை முன்னேற்றுவிப்பதன் பேரில் ஆய்வு நூல்
3. லூன் யூ (இலக்கிய தொகுப்பு)
கன்பூசியசின் உபதேசங்கள் அடக்கிய ஒரு தொகுப்பு
4.மெங்-ட்ஸே (மென்ஸியசின் புத்தகம்
கன்பூசியசின் முக்கிய சீடரான மெங்-ட்ஸே என்பவரின் கருத்துகள் அடங்கிய நூல்



இறப்பு



Cemetery of Confucius, Qufu, Kina


கி.மு. 479-ஆம் ஆண்டு தமது 71-வது வயதில் கன்பூசியஸ் மரணத்தைத் தழுவினார். தனது மரணத்துக்குப் பிறகு சீடர்கள் தவிக்காமல் இருப்பதற்காக சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு என்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன.



தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475




மத அரசியல்-15: ஷின்டோயிஸம்

By C.P.சரவணன் | Published on : 17th September 2018 04:15 PM | அ+அ அ- | |








ஷின்டோ (Shinto)

ஷின்டோ என்பது ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். ஜப்பானியர்களின் தாய் மதமாக இருந்தது ஷிண்டோ மதம் ஆகும். ஷிண்டோயிசம் என்னும் இம்மதம் இயற்கை வழி என்றும், கலாச்சார வழி என்றும் இருபிரிவுகளாகக் காணப்படுகிறது. ஜப்பானின் மக்கள் தொகையில் முக்கால் பாகம் அதாவது 9,10,00,000-க்கு அதிகமானோர் அன்று சொல்லப்பட்டாலும், 3 சதவீதத்தினரே நம்பிக்கை வைத்திருப்பதாக சுற்றாய்வு காண்பிக்கிறது. நன்செய் நிலத்தில் நெல்பயிர் செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்தே, விவசாய சடங்குகள் என ஷின்டோ மதம் தோன்ற ஆரம்பித்தது என கொடன்ஷா என்சைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. உடலை விட்டு பிரிந்து போகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால், அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளைச் செய்தனர், பின்னாளில் இது மூதாதையர்கள் வழிபாடாக மாறியது.



வழிபாடு

அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக நம்பினர். முன்னொரு காலத்தில் ”இசனாகி” என்றொரு தெய்வம் இருப்பதாக ஷின்டோ புராணக் கதை கூறுகிறது. இப்பெயர் ஈசன் என்ற பெயர் போல விளங்குகிறது.

இயற்கை வழி என்பது சூரியன் மற்றும் சந்திர வழிபட்டை வலியுறுத்துகிறது. குறிப்பாக சூரியனையே இப்பிரிவினர் முழு முதற் கடவுளாக வணங்கினர். உலகின் உயிர் சூரியன் தான் என்றும் சூரியனின் அசைவைப் பொறுத்தே உலகில் ஆக்கமும், அழிவும் நடப்பதாகவும் இப்பிரிவினர் நம்புகின்றனர். சூரியனால் விளையும் தானியப் பயிர்களை வணங்கியதோடு, அதனை சூரியனுக்குப் படைத்தும் வந்தனர். சூரிய சக்தியால் விளையும் பயிர்களைப் பயன்படுத்துவதே மனிதனின் முக்கியக் கடமை என்று நினைத்து அதற்கு அதிக முன்னுரிமை வழங்கி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த இயற்கை வழிப் பிரிவு என்ன காரணத்தினாலோ மங்கி, மறைந்து போய்விட்டது. கலாச்சார வழிப் பிரிவு மட்டுமே தற்போது ஜப்பானில் உயிரோடு இருந்து வருகிறது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது ’யாயோரோசு-நோ-காமி” என்ற சொற்றொட்ரை உருவாக்கினர், அதன் பொருள் எண்பது லட்சம் தெய்வங்கள் என்பதாகும்.



புனிதமாக்கல்



ஷிண்டோ மதத்தில் புனிதம் என்பதே மிகமுக்கியமானதாக விளங்குகிறது. நன்மை செய்வது புனிதம் என்றும், தீமை செய்வது அருவறுக்கத்தக்கது என்றும் இம்மதம் கூறுகிறது. தீமைகளையும், தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்றும் ஷிண்டோயிசம் உபதேசிக்கிறது.

புனிதம் என்பதும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகப்புனிதம் மற்றொன்று புறப்புனிதம். அகப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைவது. அப்போது தான் கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும். புறப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைய வேண்டுமென்றால் உடலும், செயலும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். இதற்கு மேல் இன்னொன்றையும் இம்மதம் உபதேசிக்கிறது. அதாவது நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்திற்கு ஈடானவன் என்கிறது. தனை வலுவூட்ட “கோசிகி” மற்றும் “நிஹான்’ என்ற நூல்கள் தொகுக்கப்பட்டன.



புனிதமாக்கும் ஒனுசா



இதனை ஒரு தேசியக் கோட்பாடாகவே ஜப்பானியர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஷிண்டோ தர்மத்தின் படியே மன்னர்கள் வாழ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றளவிலும் ஜப்பானிய மன்னர் குடும்பத்தினர் ஷிண்டோ மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறினால் அவர்கள் தங்கள் அரச வம்சத்தையே இழந்துவிடுகிறார்கள்.



கோட்பாடுகள்

சகிப்புத் தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரத்துவம், உயர்வு தாழ்வற்ற சமூகம் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் ஷிண்டோ மதத்தில் இருந்து வருகின்றன. பிறப்பு, இறப்பு என்பவை விதிப்படி நடப்பவை என்பதை உறுதியாக நம்புகிறது. முன்னோர்களை அவமதிக்காமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கொள்கை இதில் காணப்படுகிறது. கருணையைக் கடவுள் வடிவமாகப் போற்றுகிறது. நீதியை நிலைநாட்டத் தவறுபவனை கோழை என்று இகழ்கிறது. அன்பு காட்டுபவன் இல்லத்துக்கு அழைக்காமலேயே செல்லும் உயரிய வழக்கத்தை ஷிண்டோ மதம் கொண்டுள்ளது. வானத்தை உங்கள் தந்தையாகக் கருதுங்கள், பூமியை உங்கள் தாயாக நேசியுங்கள், மற்ற அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளாக நினையுங்கள். அப்போது துவேஷம், துன்பம் போன்றவற்றில் இருந்து இன்பம் என்னும் மோட்சத்தை அடைய முடியும் என்று போதிக்கிறது இம்மதம்.

தமிழர்கள் மதத்தைப் போலவே மனிதனும் தெய்வமாகலாம் என்று ஷிண்டோ மதமும் உபதேசிக்கிறது. அற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் பட்டியலிடுகிறது.

1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களின் சொற்படிக் கேட்டு நடக்க வேண்டும்.
2. விவேகத்துடன் மட்டும் இல்லாமல் விவுவாசத்தோடும் பணியாற்ற வேண்டும்.
3. எப்போதும், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மை தவறவே கூடாது.
4. பொய்மையை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்.
5. நன்றாகக் கற்று அறிவைப் பெருக்கி ஞானத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
6. தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடித்தால் கடவுள் அம்சத்தை அடைந்து தெய்வத்திற்கு நிகராக மாற முடியும் என்கிறது ஷிண்டோயிசம்.

பண்டைய காலத்தில் இது அரசர்களால் அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய மதமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை ஜப்பானின் முதன்மை பெற்ற மதமாக விளங்கிய இது பின்னர் தனது செல்வாக்கை இழந்துவிட்டது. சிவலிங்கத் திருவுருவத்திற்கு பெருமதிப்புத் தரும் இம்மதத்தை சுமார் ஐந்தே கால் கோடிப் பேர் பின்பற்றி வருகின்றனர். இம்மதம் இந்து மதத்தைப் போலவே பல கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. கடவுள்களை இவர்கள் ‘காமி” என்கின்றனர். நாம் தமிழில் ‘சாமி’ என்று அழைப்பதை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இறந்த பின்னர் மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘சாமி’ ஆகிவிடுகிறார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. மிருகங்களை கடவுளின் தூதர்களாக நம்பும் இவர்கள், மலை, காற்று, உணவு போன்ற அனைத்தையுமே கடவுள் என்கின்றனர். இயற்கையைக் கடவுள் என்று வழிபடும் இவர்கள் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்று நம்புகிறது. இந்துக்கள், கடவுள் தூணிலும் உருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவதை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம். ஜப்பானில் பரவலாக ஷிண்டோ கோயில்கள் காணப்படுகின்றன. அதன் நுழைவாயிலில் வித்தியாசமான தோரி என்று அழைக்கப்படும் ஒரு விதமான கதவு உள்ளது.

கடவுளும், பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதான் நம்பிக்கை ஜப்பானியரிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்து ஆவிகளை வணங்கி இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். தங்கள் மூதாதையர்கள், மன்னர்களை கடவுகளுக்கு இணையாக வணங்கிப் போற்றுவது உண்டு. அதாவது இவர்களை ‘சாமி’ என்றே வழிபடுகின்றனர். ஷின்டோக்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுத்தம், தூய்மை. எனவே எப்போதும் இவர்களின் கோயில்கள் சுத்தமாகவே இருக்கும். இங்கு செல்லும் போது கைகளையும், வாயையும் நன்றாகக் கழுவிய பிறகே செல்ல வேண்டும்.

இதற்காகக் கோயிலின் முகப்பில் ஒரு தொட்டி நிறைய நீர் நீரப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள தொண்டி மூலம் கை, கால்களை கழுவிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். ஷின்டோ கோயில்களில் சிறப்பான ‘சாமிக்கள் நிறைய காணப்படுகின்றனர். புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது இவர்களின் வழக்கம். அதேபோல சங்கடமான துன்பச் சூழல் ஏற்படும் காலக்கட்டங்கலும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள்.



பண்டிகைகள்

ஷின்டோ பண்டிகைகள் மதம். இவர்கள் வருடம் முழுதும் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்,

• ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை-ஜனவரி 1-3
• செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக் கொண்டே வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் விதைகளை வீசுவது-பிப்ரவரி 3
• ஹினா மட்சுரி, மார்ச்-3, சிறுமிகளுக்கான பொம்மைப் பண்டிகை
• கோய்-நோபோரி-கெண்டை மீன் கொடிகளை பறக்கவிடும் பண்டிகை மே-5
• ட்சுகிமி-நிலவினை ரசித்துக் கொண்டு, சிறிய வட்ட வடிவிலான பலகாரங்களை காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் சாகுபடியை அரசர் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• நிய்யிணமி-புதிதாக விளைந்த நெல்லை அரச குடும்பம் ருசி பார்க்கும் பண்டிகை நவம்பர்
• ஷிச்சி-கோ-சான், இதன் பொருள் ஏழு-ஐந்து-மூன்று, வண்ண வண்ண ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்கின்றனர் நவம்பர்-15

புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் மாலையில் இருந்தே மக்கள் கோயில்களுக்கு வந்துவிடுகின்றனர். கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக உள்ளே செல்ல அனுமதிக்ப்படுகின்றனர். கோயிலுக்குள் சென்ற பிறகு வேண்டிய அளவு அங்கேயே இருந்து இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சந்நதிக்கு நேர் எதிரே நெருப்புக் குண்டம் காணப்படுகிறது. அதிலிருந்து வரும் புகையை கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர். கோயிலுக்குள் நிறைந்த அமைதி நிலவும் மதக் குருக்கள் ஒதும், அலய மணியோசை ஒலிக்கும் குரல் மட்டுமே கோயிலுக்குள் கேட்கின்றன. பிறப்பின்போதும், திருமணம் போன்ற முக்கிய விசேட நிகழ்வின்போதும் சடங்குகள் செய்வது ஷின்டோக்களின் வழக்கம். இந்து மதத்திலும் இத்தகைய சடங்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.



யூடாடேஷின்ஜி சடக்கு (Yutateshinji ceremony)



பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும் காமிகளுக்குப் படையல் செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகள் மூலமும் கெட்ட ஆவிகளை விலக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பழமையான மதங்களுக்கே உரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோ மதத்தில் நிறைய உள்ளன.

நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம், கல்வி, வெற்றிகரமான வியாபாரம் போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்ற பொருட்கள் இவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தங்கள் இல்லங்களில் மாடங்களை அமைத்து வழிபடுவது இவர்களின் வழக்கம். சகுனம் பார்ப்பதும் உண்டு. முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அமர்ந்திருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகின்றனர்.

ஷின்டோ மதத்தை யாரும் உருவாக்கியதாக அறியப்பட வில்லை. இதற்கென வழிகாட்டும் புனித நூல் எதுவும் கிடையாது நேர்மறை சிந்தனை கொண்ட மதமாக விளங்கும் இது, அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்றும், கெட்ட ஆவிகளால்தான் தீயவை நடப்பதாகவும் நம்புகின்றனர்.

கோயில்களில் சீட்டுக்கட்டி விடுவது, பொம்பை செய்து வைப்பது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் தமிழர்களிடம் இருப்பதைப் போலவே ஷின்டோ மதத்திலும் உள்ளது. திருஷ்டிப் பூசணி வடிவில் சிகப்பு நிறத்தாலான சிறிய மற்றும் ஆளுயரத்திலான பெரிய பொம்மைகள் விற்பனை ஜப்பானில் பிரசித்தம். கண்கள் மட்டும் வரையப்படாத இந்தப் பொம்மைகளை வாங்கி வந்து, விருப்பத்தை மனதில் நினைத்து, பொம்மைக்குக் கண்களை வரைகிறார்கள். பின்னர் அதைத் தங்கள் வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் வரும் புத்தாண்டுக்குள் நிறைவேறியதும் இந்தப் பொம்மையை கோயிலில் கொண்டுவந்து வைத்துவிடுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள்கிழமை அன்று ‘செஜின் நோ’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருபது வயதான ஆண்களும், பெண்களும் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் விழா இது. அன்றைய தினத்தில் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையான கிமோனோவிலும், ஆண்கள் புத்தம் புதிய சூட், கோட் சகிதமாகவும் கோயிலுககுச் செல்வது வழக்கம். ஜப்பானில் உள்ள புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.

ஷிண்டோக்களின் கடவுளான காமிகளை புத்தரின் வடிவாகவும் கருதுகின்றனர். ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் புத்தர் கோயிலுகளிலும் நடைபெறுகின்றன. அதேபோன்று புத்த மதம் சார்ந்த திருவிழாக்கள் ஷின்டோ ஆலயங்களிலும் நடை பெறுகின்றன.



தேவைக்கேற்ப மாறுகிறது

பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பண்டிகைகளயும், சடங்குகளையும் அவர்கள் மறந்துவிடவில்லை.



ஜின்குஜி



புத்த மதப் பரவலில் இரு மதங்களும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதோடு ஜின்குஜி (Jinguji) என்ற கோயில்கள் கட்டப்படுவதற்கு வழி நடத்தியது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

மத அரசியல்-15: ஷின்டோயிஸம்

By C.P.சரவணன் | 







ஷின்டோ (Shinto)

ஷின்டோ என்பது ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். ஜப்பானியர்களின் தாய் மதமாக இருந்தது ஷிண்டோ மதம் ஆகும். ஷிண்டோயிசம் என்னும் இம்மதம் இயற்கை வழி என்றும், கலாச்சார வழி என்றும் இருபிரிவுகளாகக் காணப்படுகிறது. ஜப்பானின் மக்கள் தொகையில் முக்கால் பாகம் அதாவது 9,10,00,000-க்கு அதிகமானோர் அன்று சொல்லப்பட்டாலும், 3 சதவீதத்தினரே நம்பிக்கை வைத்திருப்பதாக சுற்றாய்வு காண்பிக்கிறது. நன்செய் நிலத்தில் நெல்பயிர் செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்தே, விவசாய சடங்குகள் என ஷின்டோ மதம் தோன்ற ஆரம்பித்தது என கொடன்ஷா என்சைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. உடலை விட்டு பிரிந்து போகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால், அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளைச் செய்தனர், பின்னாளில் இது மூதாதையர்கள் வழிபாடாக மாறியது.



வழிபாடு

அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக நம்பினர். முன்னொரு காலத்தில் ”இசனாகி” என்றொரு தெய்வம் இருப்பதாக ஷின்டோ புராணக் கதை கூறுகிறது. இப்பெயர் ஈசன் என்ற பெயர் போல விளங்குகிறது.

இயற்கை வழி என்பது சூரியன் மற்றும் சந்திர வழிபட்டை வலியுறுத்துகிறது. குறிப்பாக சூரியனையே இப்பிரிவினர் முழு முதற் கடவுளாக வணங்கினர். உலகின் உயிர் சூரியன் தான் என்றும் சூரியனின் அசைவைப் பொறுத்தே உலகில் ஆக்கமும், அழிவும் நடப்பதாகவும் இப்பிரிவினர் நம்புகின்றனர். சூரியனால் விளையும் தானியப் பயிர்களை வணங்கியதோடு, அதனை சூரியனுக்குப் படைத்தும் வந்தனர். சூரிய சக்தியால் விளையும் பயிர்களைப் பயன்படுத்துவதே மனிதனின் முக்கியக் கடமை என்று நினைத்து அதற்கு அதிக முன்னுரிமை வழங்கி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த இயற்கை வழிப் பிரிவு என்ன காரணத்தினாலோ மங்கி, மறைந்து போய்விட்டது. கலாச்சார வழிப் பிரிவு மட்டுமே தற்போது ஜப்பானில் உயிரோடு இருந்து வருகிறது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது ’யாயோரோசு-நோ-காமி” என்ற சொற்றொட்ரை உருவாக்கினர், அதன் பொருள் எண்பது லட்சம் தெய்வங்கள் என்பதாகும்.



புனிதமாக்கல்



ஷிண்டோ மதத்தில் புனிதம் என்பதே மிகமுக்கியமானதாக விளங்குகிறது. நன்மை செய்வது புனிதம் என்றும், தீமை செய்வது அருவறுக்கத்தக்கது என்றும் இம்மதம் கூறுகிறது. தீமைகளையும், தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்றும் ஷிண்டோயிசம் உபதேசிக்கிறது.

புனிதம் என்பதும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகப்புனிதம் மற்றொன்று புறப்புனிதம். அகப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைவது. அப்போது தான் கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும். புறப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைய வேண்டுமென்றால் உடலும், செயலும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். இதற்கு மேல் இன்னொன்றையும் இம்மதம் உபதேசிக்கிறது. அதாவது நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்திற்கு ஈடானவன் என்கிறது. தனை வலுவூட்ட “கோசிகி” மற்றும் “நிஹான்’ என்ற நூல்கள் தொகுக்கப்பட்டன.



புனிதமாக்கும் ஒனுசா



இதனை ஒரு தேசியக் கோட்பாடாகவே ஜப்பானியர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஷிண்டோ தர்மத்தின் படியே மன்னர்கள் வாழ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றளவிலும் ஜப்பானிய மன்னர் குடும்பத்தினர் ஷிண்டோ மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறினால் அவர்கள் தங்கள் அரச வம்சத்தையே இழந்துவிடுகிறார்கள்.



கோட்பாடுகள்

சகிப்புத் தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரத்துவம், உயர்வு தாழ்வற்ற சமூகம் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் ஷிண்டோ மதத்தில் இருந்து வருகின்றன. பிறப்பு, இறப்பு என்பவை விதிப்படி நடப்பவை என்பதை உறுதியாக நம்புகிறது. முன்னோர்களை அவமதிக்காமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கொள்கை இதில் காணப்படுகிறது. கருணையைக் கடவுள் வடிவமாகப் போற்றுகிறது. நீதியை நிலைநாட்டத் தவறுபவனை கோழை என்று இகழ்கிறது. அன்பு காட்டுபவன் இல்லத்துக்கு அழைக்காமலேயே செல்லும் உயரிய வழக்கத்தை ஷிண்டோ மதம் கொண்டுள்ளது. வானத்தை உங்கள் தந்தையாகக் கருதுங்கள், பூமியை உங்கள் தாயாக நேசியுங்கள், மற்ற அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளாக நினையுங்கள். அப்போது துவேஷம், துன்பம் போன்றவற்றில் இருந்து இன்பம் என்னும் மோட்சத்தை அடைய முடியும் என்று போதிக்கிறது இம்மதம்.

தமிழர்கள் மதத்தைப் போலவே மனிதனும் தெய்வமாகலாம் என்று ஷிண்டோ மதமும் உபதேசிக்கிறது. அற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் பட்டியலிடுகிறது.

1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களின் சொற்படிக் கேட்டு நடக்க வேண்டும்.
2. விவேகத்துடன் மட்டும் இல்லாமல் விவுவாசத்தோடும் பணியாற்ற வேண்டும்.
3. எப்போதும், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மை தவறவே கூடாது.
4. பொய்மையை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்.
5. நன்றாகக் கற்று அறிவைப் பெருக்கி ஞானத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
6. தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடித்தால் கடவுள் அம்சத்தை அடைந்து தெய்வத்திற்கு நிகராக மாற முடியும் என்கிறது ஷிண்டோயிசம்.

பண்டைய காலத்தில் இது அரசர்களால் அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய மதமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை ஜப்பானின் முதன்மை பெற்ற மதமாக விளங்கிய இது பின்னர் தனது செல்வாக்கை இழந்துவிட்டது. சிவலிங்கத் திருவுருவத்திற்கு பெருமதிப்புத் தரும் இம்மதத்தை சுமார் ஐந்தே கால் கோடிப் பேர் பின்பற்றி வருகின்றனர். இம்மதம் இந்து மதத்தைப் போலவே பல கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. கடவுள்களை இவர்கள் ‘காமி” என்கின்றனர். நாம் தமிழில் ‘சாமி’ என்று அழைப்பதை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இறந்த பின்னர் மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘சாமி’ ஆகிவிடுகிறார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. மிருகங்களை கடவுளின் தூதர்களாக நம்பும் இவர்கள், மலை, காற்று, உணவு போன்ற அனைத்தையுமே கடவுள் என்கின்றனர். இயற்கையைக் கடவுள் என்று வழிபடும் இவர்கள் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்று நம்புகிறது. இந்துக்கள், கடவுள் தூணிலும் உருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவதை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம். ஜப்பானில் பரவலாக ஷிண்டோ கோயில்கள் காணப்படுகின்றன. அதன் நுழைவாயிலில் வித்தியாசமான தோரி என்று அழைக்கப்படும் ஒரு விதமான கதவு உள்ளது.

கடவுளும், பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதான் நம்பிக்கை ஜப்பானியரிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்து ஆவிகளை வணங்கி இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். தங்கள் மூதாதையர்கள், மன்னர்களை கடவுகளுக்கு இணையாக வணங்கிப் போற்றுவது உண்டு. அதாவது இவர்களை ‘சாமி’ என்றே வழிபடுகின்றனர். ஷின்டோக்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுத்தம், தூய்மை. எனவே எப்போதும் இவர்களின் கோயில்கள் சுத்தமாகவே இருக்கும். இங்கு செல்லும் போது கைகளையும், வாயையும் நன்றாகக் கழுவிய பிறகே செல்ல வேண்டும்.

இதற்காகக் கோயிலின் முகப்பில் ஒரு தொட்டி நிறைய நீர் நீரப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள தொண்டி மூலம் கை, கால்களை கழுவிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். ஷின்டோ கோயில்களில் சிறப்பான ‘சாமிக்கள் நிறைய காணப்படுகின்றனர். புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது இவர்களின் வழக்கம். அதேபோல சங்கடமான துன்பச் சூழல் ஏற்படும் காலக்கட்டங்கலும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள்.



பண்டிகைகள்

ஷின்டோ பண்டிகைகள் மதம். இவர்கள் வருடம் முழுதும் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்,

• ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை-ஜனவரி 1-3
• செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக் கொண்டே வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் விதைகளை வீசுவது-பிப்ரவரி 3
• ஹினா மட்சுரி, மார்ச்-3, சிறுமிகளுக்கான பொம்மைப் பண்டிகை
• கோய்-நோபோரி-கெண்டை மீன் கொடிகளை பறக்கவிடும் பண்டிகை மே-5
• ட்சுகிமி-நிலவினை ரசித்துக் கொண்டு, சிறிய வட்ட வடிவிலான பலகாரங்களை காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் சாகுபடியை அரசர் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• நிய்யிணமி-புதிதாக விளைந்த நெல்லை அரச குடும்பம் ருசி பார்க்கும் பண்டிகை நவம்பர்
• ஷிச்சி-கோ-சான், இதன் பொருள் ஏழு-ஐந்து-மூன்று, வண்ண வண்ண ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்கின்றனர் நவம்பர்-15

புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் மாலையில் இருந்தே மக்கள் கோயில்களுக்கு வந்துவிடுகின்றனர். கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக உள்ளே செல்ல அனுமதிக்ப்படுகின்றனர். கோயிலுக்குள் சென்ற பிறகு வேண்டிய அளவு அங்கேயே இருந்து இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சந்நதிக்கு நேர் எதிரே நெருப்புக் குண்டம் காணப்படுகிறது. அதிலிருந்து வரும் புகையை கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர். கோயிலுக்குள் நிறைந்த அமைதி நிலவும் மதக் குருக்கள் ஒதும், அலய மணியோசை ஒலிக்கும் குரல் மட்டுமே கோயிலுக்குள் கேட்கின்றன. பிறப்பின்போதும், திருமணம் போன்ற முக்கிய விசேட நிகழ்வின்போதும் சடங்குகள் செய்வது ஷின்டோக்களின் வழக்கம். இந்து மதத்திலும் இத்தகைய சடங்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.



யூடாடேஷின்ஜி சடக்கு (Yutateshinji ceremony)



பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும் காமிகளுக்குப் படையல் செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகள் மூலமும் கெட்ட ஆவிகளை விலக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பழமையான மதங்களுக்கே உரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோ மதத்தில் நிறைய உள்ளன.

நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம், கல்வி, வெற்றிகரமான வியாபாரம் போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்ற பொருட்கள் இவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தங்கள் இல்லங்களில் மாடங்களை அமைத்து வழிபடுவது இவர்களின் வழக்கம். சகுனம் பார்ப்பதும் உண்டு. முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அமர்ந்திருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகின்றனர்.

ஷின்டோ மதத்தை யாரும் உருவாக்கியதாக அறியப்பட வில்லை. இதற்கென வழிகாட்டும் புனித நூல் எதுவும் கிடையாது நேர்மறை சிந்தனை கொண்ட மதமாக விளங்கும் இது, அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்றும், கெட்ட ஆவிகளால்தான் தீயவை நடப்பதாகவும் நம்புகின்றனர்.

கோயில்களில் சீட்டுக்கட்டி விடுவது, பொம்பை செய்து வைப்பது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் தமிழர்களிடம் இருப்பதைப் போலவே ஷின்டோ மதத்திலும் உள்ளது. திருஷ்டிப் பூசணி வடிவில் சிகப்பு நிறத்தாலான சிறிய மற்றும் ஆளுயரத்திலான பெரிய பொம்மைகள் விற்பனை ஜப்பானில் பிரசித்தம். கண்கள் மட்டும் வரையப்படாத இந்தப் பொம்மைகளை வாங்கி வந்து, விருப்பத்தை மனதில் நினைத்து, பொம்மைக்குக் கண்களை வரைகிறார்கள். பின்னர் அதைத் தங்கள் வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் வரும் புத்தாண்டுக்குள் நிறைவேறியதும் இந்தப் பொம்மையை கோயிலில் கொண்டுவந்து வைத்துவிடுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள்கிழமை அன்று ‘செஜின் நோ’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருபது வயதான ஆண்களும், பெண்களும் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் விழா இது. அன்றைய தினத்தில் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையான கிமோனோவிலும், ஆண்கள் புத்தம் புதிய சூட், கோட் சகிதமாகவும் கோயிலுககுச் செல்வது வழக்கம். ஜப்பானில் உள்ள புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.

ஷிண்டோக்களின் கடவுளான காமிகளை புத்தரின் வடிவாகவும் கருதுகின்றனர். ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் புத்தர் கோயிலுகளிலும் நடைபெறுகின்றன. அதேபோன்று புத்த மதம் சார்ந்த திருவிழாக்கள் ஷின்டோ ஆலயங்களிலும் நடை பெறுகின்றன.



தேவைக்கேற்ப மாறுகிறது

பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பண்டிகைகளயும், சடங்குகளையும் அவர்கள் மறந்துவிடவில்லை.



ஜின்குஜி



புத்த மதப் பரவலில் இரு மதங்களும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதோடு ஜின்குஜி (Jinguji) என்ற கோயில்கள் கட்டப்படுவதற்கு வழி நடத்தியது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

மத அரசியல்-16: பார்சி மதம்

By C.P.சரவணன் | 








பார்சி மதம் (PARSI)

சொராஸ்டிரியம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக உருவானது என்பர். 17-ஆம் நூற்றாண்டு வரை இந்திய ஜோரோஸ்ட்ரிய உரைகளில் "பார்சி" என்ற சொல் சேர்க்கப்படவில்லை. அச்சமயம் வரையில் அதைப் போன்ற வார்த்தைகளுக்கு நிலையாக ஜர்தோஸ்தி (Zarthoshti), "ஜோரோஸ்ட்ரியன்" (Zoroastrian) அல்லது பெஹ்தின் (Behdin) என்ற இரண்டினுள் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு முறையே "நல்ல இயல்புடைய" அல்லது "நல்ல பிரதேசமுடைய" என்பது பொருளாகும்.

12 ஆம் நூற்றாண்டின் பதினாறு சுலோகங்களில் (Sixteen Shlokas) சமஸ்கிருத வார்த்தையில் பாரிசியர்களைப் பற்றிய வாக்கியங்களும் பின்னர் இந்துக்கள் மூலமாக தெளிவாக எழுதப்பட்டதே (பார்சி புராணக்கதையான cf. Paymaster 1954, p. 8 இல் ஜோரோஸ்ட்ரிய அர்ச்சர்கர்களுக்கு தவறான உரையைக் கற்பிக்கிறது) பண்டைய கால இந்திய ஜோரோஸ்ட்ரியர்களுக்கான அடையாளச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேர்மை, வாய்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறான் இந்த இறைவன் என்பது அம்மதத்தினரின் நம்பிக்கை. உலகில் நல்ல சக்தி என்றும், தீயசக்தி என்று இரு வேறு சக்திகள் இருப்பதாக சொராஸ்டர்கள் நம்புகின்றனர். இவ்விரு சக்திகளுமே இணையான பலம் பொருந்தியவை என்றும், எனினும் தங்களின் நீண்டகால அனுபவத்தில் நல்லசக்தியே இறுதி வெற்றியைப் பெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். தீயசக்தியை ‘அங்ரா மைன்யூ’ என்று அழைக்கின்றனர். நன்மையை ஆதரிப்பதோ, தீமையை ஆதரிப்பதோ அவரவர் விருப்பம் என்று பரிபூர்ண ஜனநாயகத்தைப் பறைசாற்றுகிறது இச்சமயம். மறுவாழ்வு உண்டு என்பதை சொராஸ்டிரியமும் நிச்சயமாக நம்புகிறது.

துறவறம், மணத்துறவு ஆகிய இரண்டையும் இம்மதம் கண்டிக்கிறது. அதற்கு ஆதரவு இங்கே இல்லை. இம்மதப் போதனையைப் பரப்பியபோது சொராஸ்டருக்கு எதிர்பபு அதிகமாக இருந்தது. எனினும் தமது நாற்பதாவது வயதில் போதனையைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க வெற்றி அவருக்குக் கிட்டியது. ஈரான் தேசத்தின் இரு மண்டலத்து மன்னரான விஷ்டபா எனபவரைத் தமது சமயத்திற்கு மாற்றினார். இதன்பின்னர் இம்மன்னர் சொராஸ்டரின் மிக நெருங்கிய நண்பராக மாறினார். ஆத்துடன் சொரியாஸ்டிரிய மதத்தின் பாதுகாவலராக இருந்து மத வளர்ச்சிக்குப் பாடுபட்டர்.

எனினும் இம்மதம் அன்றைய காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பரவியதாக வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சொராஸ்டர் மறைவுக்குப் பிறகு இவர் வாழ்ந்த வடக்கு ஈரான் பகுதிகள் பாரசீகப் பேரரசில் த கிரேட் சைரஸால் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் இம்மதம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினர்கள். எனவே இது அங்கு கொடி கட்டிப் பறந்தது என்றே சொல்லலாம். கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளில் அலெக்சாண்டர் இப்பகுதியை வெற்றி கொண்டதை அடுத்து, இம்மதம் மோசமான வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட அழியும் நிலையை அது அடைந்தது என்பதே உண்மை.



1000 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் 'பார்சி'களின் நெருப்புக் கோயில்



இந்தியாவில் பார்சீக்கள்

1728 ஆம் ஆண்டில் நவ்ரோஸ் (நவ்ரோஜி) பம்பாய் பார்சி பஞ்சாயத்தை நிறுவினார். இதன் மூலம் பார்சியர்களுக்கு புதிதாய் வரும் சமயம், சமூகம், சட்ட மற்றும் நிதி விசயங்களுக்கு உதவியளிக்கப்பட்டன. 18வது நூற்றாண்டின் மத்தியில் மெனெக் செத் குடும்பம் அவர்களது மிகப்பெரிய மூலங்களைப் பயன்படுத்தி அவர்களது நேரம், சக்தி மற்றும் பார்சி சமுதாயத்திற்கு நிதிசார்ந்த மூலங்களின் முக்கியமற்ற தன்மையை கொடுத்தது பார்சியர்களுக்கு பஞ்சாயத்தின் மேல் உள்ள நம்பிக்கையை வளர்த்தது. நகர்சார்ந்த வாழ்க்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சமுதாயத்தின் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் கருவியாகவும் இந்த பஞ்சாயத் அங்கீகரிக்கப்பட்டது.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பார்சியர்கள் "கல்வி, தொழில்துறை மற்றும் சமுதாயம் போன்ற விசயங்களில் இந்தியாவில் முதன்மையாக விளங்கும் மக்களாக இருந்தனர். இயக்கத்தின் வளர்ச்சி, பெருமளவில் திரட்டப்பட்ட அதிர்ஷ்டங்கள் மற்றும் தாராள பண்பு ஆகியவற்றுடன் வந்தது அறப்பணியில் மிகப்பெரிய தொகைகளை அளிக்க வைத்தது". 19 ஆம் நூற்றாண்டிற்கு அருகில் குடியேற்ற இந்தியாவில் உள்ள பார்சியர்களின் எண்ணிக்கை 85,397 ஆகும். அதில் பம்பாயில் மட்டும் 48,507 வசித்தனர். நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் இது 6% ஆகும் .





நவ்ஜோட் சடங்கு

ஒரு நபர் ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் மாறுவதால் மட்டும் பார்சி இனத்தவராக மாறிவிட முடியாது "பார்சி இனத்தவர் பின்வரும் நிலைகளைப் பெற்றிருக்க வேண்டும்:

a) உண்மையான பெர்சிய குடியானவர்களிடம் இருந்து மரபைப் பார்சிகள் பெற்றிருக்க வேண்டும், ஜோரோஸ்ட்ரிய பெற்றோர்கள் இருவருக்கும் பிறந்திருக்க வேண்டும் மற்றும் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றிருக்க வேண்டும்;
b) பெர்சியாவில் உள்ள ஈரானியர்கள் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றுள்ளனர்;
c) வேற்றினத் தாய்க்கும் பார்சி தந்தைக்கும் பிறக்கும் குழந்தை சரியான முறையில் சமயத்தினுள் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்"
ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் ஏற்றுக்கொள்வதற்கான சடங்கு நவ்ஜோட் சடங்கு ஆகும்.



கலாச்சாரம்

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.



பார்சி நாட்காட்டி

1745 ஆம் ஆண்டில் சூரத்தை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த பார்சியர்கள் அவர்களது மதகுருக்களின் பரிந்துரையின் பேரில் கட்மி அல்லது கடிமி நாட்காட்டிக்கு மாறினர். பண்டைய காலத்தில் 'தாயகத்தில்' பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியே சரியானது என அவர்கள் தங்களது மக்களை நம்பவைத்தனர். மேலும் அவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியை "முடியரசுக் கோட்பாடு சார்ந்திருப்பதாக" பேசினர்.

1906 ஆம் ஆண்டில் இரண்டு வகைகளையும் ஒன்றாக மூன்றாவதாக ஒரு நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் முயற்சி நடந்தது: ஃபாஸிலி , அல்லது பாஸ்லி நாட்காட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் வரும் மிகுந்த நாட்களைக் கொண்டிருந்தது. மேலும் இளவேனிற் புள்ளியுடைய தினத்தில் புத்தாண்டும் அனுசரிக்கப்பட்டது. பருவங்களுடன் இணக்கமான நாட்காட்டியாக எப்போதும் இது மட்டுமே இருந்தாலும் பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் இதை புறக்கணித்தனர். இது ஜோரோஸ்ட்ரிய மரபை கட்டளைகளுடன் வெளிப்படுத்துவதாக இருந்தது.

இன்று பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியின் பார்சி பதிப்பையே கடைபிடிக்கின்றனர். சூரத் மற்றும் பவுரச்சில் வாழும் பல பார்சி சமுதாயத்தினர் கட்மி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றனர். ஃபாஸ்லி நாட்காட்டி பார்சி இனத்தவர்கள் பலருள் முக்கிய இடம் பிடிக்கவில்லை. ஆனால் தரத்தில் பாஸ்தானி நாட்காட்டியை (பாஸ்லி நாட்காட்டியாக அதே சிறப்புடைய ஈரானிய உருவாக்கம்) ஒப்பிடுகையில் ஈரானின் ஜோரோஸ்ட்ரியர்கள் பலருள் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.



ஜாஷன் சடங்கு ( jashan or jashne Ceremony)



இச்சடங்கால் இல்லம் தூய்மையாகிறது என்று பார்சீக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இலிம்-இ-ஷ்னோம் (Ilm-e-Kshnoom)

இலிம்-இ-ஷ்னோம் என்பது 'பரவச அறிவியல்' அல்லது 'பேரின்பம்' பொருளாகும். இதுசமயம் சார்ந்த நூல்களின் பொருள் விளக்கத்தைக் காட்டிலும் இரகசியம் மற்றும் மறைபொருளாகக் கற்பவை சார்ந்த பார்சி-ஜோரோஸ்ட்ரிய தத்துவப் பள்ளியாகும். சமய உட்பிரிவு ஆதரவாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாஹேப்-இ-திலான் அதாவது 'இதயத்தின் குருக்கள்' என அழைக்கப்படும் 2000 தனிநபர்களின் இனம் மூலமாக காக்கப்பட்ட ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையின் ஆதரவாளர்கள் ஆவர். அவர்கள் காகசஸின் (Caucasus) மலைகள் நிறைந்த சரிவுகளில் முழுவது தனித்து வாழ்பவர்கள் ஆவர் பார்சியர்கள் ஷ்னோமைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம் என்று சில தெளிவான குறிப்புகளும் உள்ளன. குஸ்தி இறைவழிபாடுகள் பாஸாலி கள் மூலம் பயன்படுபவை போன்றே இருந்தாலும் பார்சி சமுதாயத்தில் எஞ்சியவர்கள் ஷ்னோம் ஆதரவாளர்கள் என அவர்கள் அனுசரிக்கும் நாட்காட்டியுடன் தொடர்புபடுத்தி பிரித்தரியப்படுகின்றனர். நீண்ட இறைவழிபாடுகளில் சில பிரிவுகளை மீண்டும் கூறுதல் போன்ற பொது வழிபாட்டுமுறையில் அவர்களது ஒப்புவித்தலில் சிறிது மாறுபாடுகளும் உள்ளன. எனினும் ஷ்னோம் அவர்களது கொள்கையில் மிகவும் பழமையானதாக உள்ளது. மேலும் பிற பார்சியர்களுக்கு தொடர்புபடுத்துவதுடன் தனித்திருத்தலையும் தெரிவிக்கிறது.

பம்பாயின் புறநகர் பகுதியான ஜோகேஷ்வரியில் ஷ்னோம்களின் ஆதரவாளர்களின் மிகப்பெரிய சமுதாயம் வாழ்கின்றனர். அங்கு அவர்களுக்கு என சொந்தமாக தீ கோவிலும் (பெஹ்ராம்ஷா நவ்ரோஜி ஷெரோஃப் தாரேமெஹர்), குடியிருப்பு வசதிகளும் (பெஹ்ரம் பாக்), செய்தித்தாளும் (பார்சி புக்கர் ) உள்ளன. சூரத்தில் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இங்கு சமய உட்பிரிவு நிறுவப்பட்டது.

இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தல்





கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி

இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன. பருந்துகளைப் பார்க்கவே முடிவதில்லை. அருகிப் போய் விட்டது. இதனால் உடல்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர் பார்சி சமூகத்தினர்.



தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

மத அரசியல்-17: பஹாய் மதம்

By C.P.சரவணன் | 







1844-ஆம் ஆண்டு பாரசீக நாட்டில் உதித்த பஹாய் மதம் இன்றைய அளவில் வேறு சில நாடுகளிலும் பரவியிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இதை பின்பற்றி வருகின்றனர்.



பகாவுல்லா (Bahá'u'lláh)



பகாவுல்லா

பகாவுல்லா, நவம்பர் 12, 1817 அன்று பிறந்தவர். பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் “மிர்சா உசேய்ன் அலி”. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்துல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.

முறையாகக் கல்வியறிவு பெறவில்லை என்றாலும், சமயப் பெருமக்களின் வழியாக இறையறிவை நிரம்பப் பெற்றார். பதினெட்டு வயதில் திருமணம் நடந்து, பல குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். 1844ஆம் ஆண்டு ஷிராஸ் நகரில் சயீத் அலி முகமது என்றும், பாப் என்றும் அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தன்னை கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். தமக்குப் பின்னால் வரப்போகும் இறைத்தூதரின் வருகையை அறிவிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்தார். இந்த பாப் என்பாரை பஹாவுல்லா தாமே முதலில் அறிந்து ஏற்றுக்கொண்டார்.

இதனால் அங்கு மிகப் பெரிய கிளர்ச்சிகள் நடைபெற்று 750 ராணுவ வீரர்களால் பாப் மரண தண்டனையை அடைந்தார். இவர்களுடன் சேர்ந்து பஹாவுல்லாவும் கைது செய்யப்பட்டு டெஹ்ரான் நகரில் பிரசித்தி பெற்ற சிய்யாச்சால் என்னும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளானார்.

அச்சிறையில் பஹாவுல்லாவிற்கு அவருடைய உயர்ந்த ஸ்தானத்தை இறைவன் அறிவித்தார். இறைவனைப் பல நேரங்களில் பலவிதமாகவும் உணர்ந்தார். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பஹாவுல்லா பாக்தாத் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்தும் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட அவர், இறுதியில் தற்போதைய பாலஸ்தீனத்திலேயே பெரும்பாலான நாட்களைக் கழித்தார்.

1863-ஆம் ஆண்டு துருக்கிக்குச் செல்லும் வழியில் டைகிரிஸ் நதிக் கரையில் ரித்வான் என்னும் பூங்காவில் பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் முதன்முதலாகத் தன்னை இறைவனின் அவதாரம் என்று பகிரங்கமாக அறிவித்தார். உலகில் இனி கடவுளின் ஆட்சியே நடக்கும் என்றும் நம்பிக்கையோடு அழுத்தமாகத் தெரிவித்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் பஹாவுல்லாவின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. ‘உலக ஒற்றுமைக்காக உழைக்குமாறும், மக்கள் தங்கள் இஷ்டம்போல் நடந்தால் அழிவும் அராஜகமுமே மிஞ்சும் என்றும் எச்சரித்தார். நிறைய எழுதினார் போதித்தார். இவற்றை அனைத்தும் தொகுத்தால் நூறு நூல்கள் கிடைக்கும். பெரும்பாலானவை மொழியாக்கம் செய்யாமல் இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.



பஹாய் நம்பிக்கை

உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையைவிட இனிமையான ஒன்று வேறெதுவும் இல்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நிஐலதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்னை என்பது இறைவனுடன் உரையாடல் செய்வதாகும். மிக உயர்ந்த நிஐலயை அடையவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவதுதான். அது ஆன்மீகத்தை தோற்றுவிக்கிறது. தெய்வீக உணர்வுகளையும் விழிப்புணர்ச்சியையும் தோன்றுவிக்கிறது. மேலுலக ராஜ்யத்தின் புதிய கவர்ச்சியை பெற்றுத்தருகிறது. சிறந்த மதிநுட்பத்தை நமக்கு மிகவும் எளிதில் ஏற்படுத்துகிறது.

கடவுளின் நாமம் மொழியப்பட்டு அவரது புகழ் பாடப்படும் ஸ்தலமும், இல்லமும் இடமும், நகரமும், இதயமும், மலையும் புகலிடமும், குகையும், பள்ளத்தாக்கும், தேசமும், கடலும், தீவும், புள்வெளியும் ஆசிபெற்றதாகும்.



பஹாய் புனித நூல்

பஹாய் சமயத்தின் புனித நூலாக கித்தாப்-இ-அக்தாஸ் (Kitab-i-Aqdas) விளங்குகிறது.

பாலஸ்தீனத்தின் கடற்கரை நசகரமான ஆக்கோ சிறையில் அடைக்கப்பட்ட பஹாவுல்லா, பின்னர் அங்குள்ள மாஸ்ராயே என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்க்பட்டார். அங்கேயே தனது கடைசி காலம் வரைக் கழித்தார். 1892-ஆம் ஆண்மு மே மாதம் 29-ஆம் தேதி அன்று அதிகாலை பஹாவுல்லா இறைவனடி சேர்ந்தார்.

அதன்பிறகு பஹாவுல்லாவின் விருப்பமத்திற்கு இணங்க அவரது மகன் அப்துல் பஹா இச்சமயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் பஹாய் மதம் இரண்டாவது பெரிய மதமாக இன்றளவும் இருந்தது வருகிறது.





பஹாய் தலைமையகம்,இஸ்ரேல்

மனித ஒற்றுமை, உண்மையை தனித்துவமாக ஆய்வு செய்தல், சமயங்கள் அனைத்தும் ஒன்றே, சமயமும், அறிவியலும் ஒன்றோடொன்று ஒத்துழைத்து இயக்க வேண்டும், ஆண் - பெண் சமத்துவம் அவசியம், துவேஷங்களை நீக்க வேண்டும், உலகளவில் கட்டாயக் கல்வி அவசியம் என்பன போன்ற சமூக நியதிகளை உள்ளடக்கியதாக பரிமளிக்கிறது பஹாய் மதம்.



தாமரைக் கோயில் (Lotus temple)



தாமரைக் கோயில் என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய் கோயிலாக கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் உலக அமைதியைக் கண்டிப்பாக வலியுறுத்துகிறது இம்மதம்.





பகாவுல்லா நினைவாலயம், இஸ்ரேல்

பஹா ஹுல்லா பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மே 29, 1892 அன்று மறைந்தார்.



தொடரும்...

C.P. சரவணன், வழக்கறிஞர் 9840052475


மத அரசியல் -அத்தியாயம் 11:- அத்தியாயம் (12)


மத அரசியல்-11: இந்தியாவில் இஸ்லாம்

By C.P.சரவணன் |








கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture…. என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments என்ற நூலில் எழுதியுள்ளார்.

கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்கு பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.





சேரமான் பெருமாள்

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபு கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.




சேரமான் தர்கா, ஓமன்

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.





சேரமான் ஜும்மா பள்ளிவாசல், கொடுங்கல்லூர், எர்ணாகுளம், கேரளா

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

References:
1. திருக் குர்ஆன்_IFT வெளியீடு
2. இஸ்லாமியத் தத்துவ இயல்_ராகுல் சாங்கிருத்யாயன்
3. இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்_எம்.என்.ராய்
4. தமிழகத்தில் முஸ்லீம்கள்_எஸ்.எம்.கமால்
5. சேரமான் பெருமாள் தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்_CMNசலீம்



தொடரும்...
_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு : 
_____________________________ 

*சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம்*

சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம் (Zarathustra / Zoroaster) என்ற பெயர் இச்சமயத்தை உருவாக்கிய சாரதுராஷ்டிரர் பெயரால் அமைந்ததாகும். இது உருவாகிய நாட்டின் பெயரால் பார்சி சமயம் என்றும் அழைக்கப்படுகிறது.
*சாரதுஷ்டிர முனிவர்*
பாரசீக நாட்டின் ரே அல்லது ரா என்றழைக்கப்படும் நகரில் அந்நாட்டு இளவரசன் பௌருஷஸ்பா என்பவருக்கும் அவர் மனைவி துக்தொவாவாவுக்கும் சாரதுஷ்டிரர் பிறந்தார். இவர் கி.மு 12-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு 10-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்தார் என்பது சிலர் கருத்து. ஸ்பிதமெ என்பதே சாரதுஷ்டிரருக்கு பெற்றோர் சூட்டிய பெயராகும். 

ஸ்பிதமெ பிறக்கும் போதே பாரசீக கொடுங்கோல் மன்னர்கள் அனைவரும் தீய கனவுகளையும் தீய நிமித்தங்களையும் கண்டு மருட்சியடைந்தனர். அதனால் ஸ்பிதமெவைக் கொல்ல திட்டமிட்டனர். அதனைக் கேள்வியுற்ற பௌருஷஸ்பா குழந்தையை அதன் தாயோடு, அவளது தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அந்நாளைய பாரசீக வழக்கப்படி ஸ்பிதமெ தனது பதினைந்தாம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.  ஆனால் அவரது மனம் இறை சிந்தனையை நோக்கியே சென்றது. அவர் துறவியானார்.

இடைவிடாத தியானத்தில் இருந்தார். அப்பொழுது, கெட்ட ஆவிகளை உண்டாக்கக்கூடிய அங்ரமன்யு (அஹ்ஹிமன்) அவருக்கு பல இடையூறுகளைச் செய்தான். அச்சமயத்தில் ஸ்பிதமெவுக்கு முன்னாஅல் அஹூர மஜ்தா தோன்றினார். அஹுந-வர்யு மந்திரத்தையும் கற்பித்தார். 

மேலும் இறைவன் ஸ்பிதமெவுக்கு தங்க ஒளிமயமான இறகுகள் கொண்ட முதியவனும் பறவையும் கலந்த வடிவமாக காட்சியளித்தார். ஸ்பிதமெவையும் அவ்வாறே மாற்றினார், அன்றிலிருந்து சாரதுராஷ்டிர முனிவர் என்று அழைக்கப்பட்டார்.

சாரதுராஷ்டிர முனிவர் பாரசீகம் முழுதும் வீடு வீடாகச் சென்று தனது கொள்கைகளை போதித்தார். அந்நாட்டு மன்னர்களும் சமயத் தலைவர்களும் சாரதுராஷ்டிர முனிவரைக் கடுமையாக எச்சரித்ததோடு, அவரைப் பின்பற்றுவோர் கடுமையான தண்டணைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தனர். அதனால் சாரதுராஷ்டிர முனிவரின் சித்தப்பா ஆராஸ்தி என்பவரின் புதல்வன் மைதியொயிமாங்க என்பவரைத் தவிர யாரும் பின் தொடரவில்லை.

சாரதுராஷ்டிர சமயம் முதலில் வீஷ்தாஸ்ப மன்னனின் நாட்டில் பரவி, பாரசீகம் மற்றும் அண்டை நாடுகளில் பரவ ஆரம்பித்தது.

*அஹூர மஜ்தா (Ahura Mazda)*

நக்ஷ்-எ-ரஸ்டம் (Naqsh-e Rustam) என்பது பெர்சோபொலிஸின் (Persepolis) வடமேற்கில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஒரு பழங்கால கல்லறை அமைப்பு ஆகும்.

சாரதுராஷ்டிரர்களின் கடவுள் அஹூர மஜ்தா ஆவார். இவரே பூமியையும் மற்ற அனைத்தையும் படைத்தவர்.


*பார்சி இன மக்கள் புலப் பெயர்வு*

பாரசீகத்தை கி.பி. 651-ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இஸ்லாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குஜராத்து கடற்கரை பகுதிகளில் 775-ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். 

பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்

*இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள்*

இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள் அவர்களின் தாய் நாடான பாரசீகத்தின் பெயரால் பார்சிக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சௌராஷ்டிரர் சமயத்தினர், தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், அம்ரேலி மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், போடாட் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.

1024-1025 இல் கஜினி முகமது சௌராஷ்டிர தேசத்தினையும், சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலையும் சூறையாடிய பின், அங்கு வாழ்ந்த சௌராஷ்டிரர்களின் பெரும் பகுதியினர், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் தலைமையகமான காம்பாலியம் நகரத்தில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பின், தற்போதைய மகாராஷ்டிரத்தில் உள்ள தேவகிரியில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் கபூர் தேவகிரியை 1307ல் கைப்பற்றியபின்பு, இந்துக்களின் புகழிடமாக விளங்கிய விஜயநகரப் பேரரசில் 1312ல் குடியேறினர். விஜயநகரப் பேரரசு, பாமினி சுல்தான்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர் சௌராட்டிர சமூக மக்கள் 1575-க்குப் பின்பு தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ்நாட்டின், மதுரை, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், பரமக்குடி போன்ற பகுதிகளில் குடியேறினர்.

அலாவுதீன் கில்ஜி மற்றும் கஜினி முகமது போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் கொலை வெறியாட்டத்திற்கும், கட்டாய இஸ்லாமிய மத மாற்றத்திற்கு அஞ்சியும், சௌராஷ்டிர தேசத்து சௌராஷ்டிரர்கள் கி.பி. 1025 முதல் புலம்பெயர்ந்து, பல்லாண்டுகள் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியாகத் தமிழகத்தை தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர்.

*சௌராஷ்டிர மொழி*

இவர்கள் பேசும் மொழி, சமஸ்கிருதத்தின் பேச்சு மொழியான பிராகிருதம் என்ற குடும்ப மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழியான ’சௌரஸேனி’ மொழியாகும். இந்த ‘சௌரஸேனி’ மொழியைத் தான் சௌராட்டிரர்கள் தேசத்தில் இருந்தபோது பேசினர். இந்த மொழி குறித்து 1861 மற்றும் 1907 ஆகிய ஆண்டுகளில் டாக்டர். ராண்டேல் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியவர்கள் ஆய்வு செய்து, தமிழ்நாட்டு சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி ‘சௌரஸேனி” என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழியிலிருந்து வளர்ந்தவைகள்தான், ”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’, மற்றும் ’மஹராஷ்ட்ரீ’ மொழிகள். ’சௌரஸேனி’ மொழியிலிருந்து வளர்ந்தவைகள்  இன்றைய குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மொழிகள்” என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி சௌராஷ்டிரம் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் சௌராஷ்டிர மொழி எழுத்து வடிவத்தை மதுரை போராசிரியர் தொ.மு. இராமராய் (1852-1913) என்ற சௌராஷ்டிர மொழி அறிஞர், வட மொழி பேராசிரியரான சதுர்வேதி இலக்குமணாச்சாரியர் என்பவரின் உதவியுடன், சௌராட்டிர மொழி எழுத்துக்களை சீர்திருத்தி, புதிய வடிவில் சௌராஷ்டிரா மொழியில் பல பாடநூல்கள் அச்சிட்டு வெளிட்டுள்ளார். இம்மொழிக்கான இலக்கணத்தை மதுரை, தொ. மு. இராமராய் மற்றும் சேலம், புட்டா. ந. அழகரய்யர் ஆகியவர்கள் செம்மைப்படுத்தி புதிய இலக்கண நூல்கள் அச்சிட்டு வெளியிட்டனர்.

*(தொடரும்)*
[07/07, 11:22 p.m.] +91 99413 30202: *மத அரசியல் - அத்தியாயம் (13)*
______________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : ராமகிருஷ்ணன்
______________________________

*டாவோயிஸம் (Taoism)*
ஆரம்ப காலத்தில் டாவோ ஒரு மதமாக இருந்தது என சொல்வதை விட ஒரு தத்துவமாக இருந்தது எனச் சொல்லலாம். சீனாவின் பழமையான மதம் டாவோயிஸம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப் பழமையான மதம் இது.

*லாவோட் ஸே*

லாவோட் ஸே (Laozi) என்றால் ”வயதான எஜமான்” அல்லது வயதானவர் எனப் பொருள்படும். லாவோட்ஸே தன் வாழ்வின் பெரும் பகுதியை சௌ பேரரசிலேயே கழித்தார். பேரரசின் வீழ்ச்சியை முன் கூட்டியே அவர் உணர்ந்து அங்கிருந்து விலகி எல்லைப்பகுதியில் வசித்தார். அங்கிருந்த சுக்கச் சாவடி அதிகாரியான “இன் ஷி’வேண்டுகோளின்படி கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டு டாவோ டே ஜிங் (Tao Te Ching) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இது ஒரு மனிதன் உயர்வை அடைவதற்கும், நல்ல தலைவானாக விளங்குதற்கும் என்ன மாதிரியான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான தத்துவ நூலாகும்.

சொர்க்கத்திற்கும், பூமிக்கும் முன்பாக என்ன இருந்தது அல்லது இருக்கிறது என்பதைப் பற்றிய ஒர் திறன்பெற்ற ஆய்வையும் அதில் விளக்கி இருந்தார். இவரது நூல் சமயம் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் இருந்தது அது பலரையும் ஈர்த்தது.  எனினும் டாவோயிஸம் அப்போது நெறி முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கற்ற ரீதியிலேயே பின்பற்றப்பட்டு வந்தது.

*ஸாங் டாவோலிங்*

ஸாங் டாவோலிங் (Zhang Daoling ) என்பவர் கி.பி.142ஆம் ஆண்டில் டாவோ டே ஜிங்  நூலைப் புனித நூலாக விளக்கினார்.  இது வெறும் தத்துவம் சார்ந்த நூல் மட்டுமல்ல, வானத்து தேவதைகளை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்தும் புனித நூல் என்பதைக் கண்டறிந்தார்.

ஆன்மீகத் தொடர்பினை அழகாகவும், ஆழமாகவும் இதில் விளக்கப்பட்டிருப்பதை நன்றாகப் புரிந்துணர்ந்தார். மேலும் மரணமற்ற நிலையைப் பற்றியும் மனிதர்கள் அறிந்து கொள்ள இது உதவுவதாகவும் கூறி, ஒரு ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட தீதியில் டாவோயிஸம் என்னும் மதத்தை உருவாக்கினார்.

கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இக்லிஷ் இருவரும் டாவோ டே ஜிங்  நூலை நவீன மொழிபெயர்ப்பாக்கினர். இதன்பிறகே டாவோயிஸம் சார்ந்த நூல்கள் ஏராளமாக வெளிவந்து மக்கள் மத்தியில் பரவலான எழுச்சியை ஏற்படுத்தியது. நிறைய பேர் இம்மத்தில் ஈடுபாடு வைத்து அவனைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர் டாவோயிஸம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் தன் சிறகை விரித்தது என்பது வரலாற்றுச் சுவடுகள் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

*எட்டு சாவாமையுள்ளவர்கள்*

சாங் லிங் அதாவது சாங் தாவோ லிக் என்பவர் மேற்குச் சீனாவில் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தும் இரசவாத முறையை அறிமுகப்படுத்தினார். புத்த மதத்தின் தோற்றத்தினால் வந்த சவாலை சமாளிக்க தன்னை ஒரு மதமாக பிரபலப்படுத்திக் கொண்டது. அதன்பின் சாவாமையுள்ளவர்கள் எட்டு(Eight Immortals) தெய்வங்களை (பா ஷியான்) அடுப்படியின் தெய்வம் (சாஓ ஷென்) நகர தெய்வகள் (ஹெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர் வணங்கப்பட்டனர்.

ஒரு கூட்டத்தில் டாவோயிஸம் என்பது தத்துவம் மட்டுமே என்றும், சமயம் மட்டுமே என்றும் இருவேறு கோணத்தில் கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்து அறிவியலாளர்களும் தீவிரமான ஆய்வினை மேற்கொண்டனர். எனினும் முடிவில் இது இயற்கை, மனிதம் மற்றும் தெய்வீகம் ஆகிய அனைத்தையும் வலியுறுத்தி இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மட்டுமன்றி, ஒரு தலைவனாக இருந்து கொண்டு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்னும் அரிய வழிகாட்டுதலையும் இது நமக்கு அருளியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மூட நம்பிக்கைகளால், கி.பி.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் டாவோயிஸம் திட்டமிட்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இந்த மதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மீண்டும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது.  அதன் அரிய தத்துவங்கள் அதன் வளத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இப்போது கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்தவர்களும் டாவோயிஸத்தின் மீது புதிய அக்கறை கொண்டு வருகின்றனர். முக்கியமாக அவர்கள் இதனை மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்தினை வற்புறுத்தும் தத்துவம் சார்ந்த விஷயமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.

அக்யூபங்சர், மூலிகை, மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இதனை அணுகி வருகிறார்கள்.  டாவோயிஸம் எனபதில் இம்மாதியான மருத்துவம் ஒரு பகுதி என்பதே உண்மை.

டா என்றால் வழி அல்லது ‘பாதை’ என்று பொருள். இந்த அண்டமானது இயல்பாகவே ஒரு வழியைக் கொண்டிருக்கிறது.  அந்த வழியை அறிந்து அதனுடன் மனிதன் ஒன்றிப்போகிறபோது அவன் முழுமையைப் பெறுகிறான்.  நிறைவை அடைகிறான். இப்படித்தான் போதிக்கிறது டாவோயிஸம்.

டாவோயிஸ நெறிகள் ‘மும்மணிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.  கருணை, அடக்கம், பணிவு ஆகியவையே அந்த மும்மணிகள். சைவ உணவு உண்பதே நல்லது என்றும் இம்மதம் வலியுறுத்துகிறது.

இயற்கையை வணங்குதல், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் போன்றவை டாவோயிஸட்டுகளால் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சீன இரசவாதம், ஜோதிடம், சமையல், போர்க் கலைகள், சீன மரபு வழி மருத்துவம், மூச்சுப்பயிற்சி போன்றவை டாவோயிஸத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது.

இம்மதம், சீனாவைத் தவிர தைவான், புருனே, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 20 கோடிப் பேரால் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் போகர் என்ற சித்தரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இவர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்.  அங்கு இவர் ‘போ யங்’ என்று அழைக்கப்படுகிறார்.

சீனாவில் டாவோயிஸம் உருவாகக் காரணமாக இருந்த லாவோட்ஸேயும், போகரும் ஒருவரே என்றும் சிலர் கூறுகின்றனர். பிறப்பால் இவர் ஒரு சீனர் என்றும் இவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

*(தொடரும்)*

பாசிசம்



By C.P.சரவணன் | 






பாசிசம் (Fascism)



பெனிடோ முசோலினி



இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி (Benito Mussolini) கருதப்படுகிறார். 1922-ஆம் ஆண்டு முசோலினையும் அவரது பாசிசக் கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வருவதோடு பாசிசக் கோட்பாடும் ஆரம்பமாகிறது. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் (Adolph Hitler) முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazism) என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார்.

பாசிசம் என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.

பாசிச தத்துவத்தின் மூலகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக நீட்சேயின் (Nietzsche) அதிமானுடன் (Superman) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும் சொரல் (Sorel) இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும் ஹெகல் (Hegel) இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களாலும் முசோலினி கவரப்பட்டிருந்தார்.

பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods) என்பதாகும். பாசிசம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் (Axe) சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.



தோற்றமும் பின்னனியும்

முதலாம் உலகப் போரில் பாசிசம்

ஆகஸ்ட் 1914 ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, இத்தாலிய அரசியல் இடதுகள் போரில் அதன் நிலைப்பாட்டை கடுமையாக பிரித்தனர். இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி (PSI) போரை எதிர்த்தது, ஆனால் பல இத்தாலிய புரட்சிகர சிண்டிகலிஸ்டுகள் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியோருக்கு எதிராக போருக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் பிற்போக்குத்தன ஆட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.

ஏஞ்சலோ ஒலிவியேரோ ஒலிவேட்டி அக்டோபர் 1914-ல் சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் என்றழைக்கப்படும் ஒரு சார்பு-தலையீடு குழுவை அமைத்துள்ளார். பெனிட்டோ முசோலினியின் ஜெர்மனிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக PSI இன் பத்திரிகையான அவந்தியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். "பாசிசம்" என்ற வார்த்தை முதன் முதலில் 1915-இல் முசோலினியின் இயக்கமான சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது. 1917 அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றினர். இது பாசிசத்தின் வளர்ச்சியை பெரிதும் அதிகரித்தது.1917-ல், முசோலினி, புரட்சிகர நடவடிக்கை பாசிச தலைவர், அக்டோபர் புரட்சியை பாராட்டினார். ஆனால் பின்னர் அவர் லெனினுடன் ஒத்துப் போகவில்லை, அவரை ஜார் நிக்கோலஸின் ஒரு புதிய பதிப்பாக மட்டுமே கருதினார்.

நாம் சோசலிசத்திற்கு எதிரான போரை அறிவிக்கின்றோம், ஏனென்றால் அது சோசலிசம் என்பதற்காக அல்ல, மாறாக அது தேசியவாதத்தை எதிர்க்கிறது என்பதற்காகவே. சோசலிசம் என்னவென்பது பற்றி விவாதிக்கலாம் என்றாலும், அதன் வேலைத்திட்டம் என்ன, அதன் தந்திரோபாயங்கள் என்னவென்றால், ஒன்று தெளிவாக உள்ளது: அதிகாரபூர்வ இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி பிற்போக்குத்தனமாகவும் முற்றிலுமாகப் பழமைவாதமாகவும் உள்ளது. அதன் கருத்துக்கள் நிலவியிருந்தால், இன்றைய உலகில் நம் உயிர் பிழைத்திருப்பது சாத்தியமற்றது.

முதலாம் உலகப் போரின் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியடைந்த ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே வெர்சைல்ஸ் (Versailles) உடன்படிக்கை ஏற்பட்டது. இவ் உடன்படிக்கை வெற்றி பெற்ற நாடுகளுக்கு சாதகமாகவும் தோல்வியடைந்த நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இவ் உடன்படிக்கை இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய நலன் தேசிய கௌரவம் போன்றவற்றிற்கு பெரும் சவாலாக மாறியது.

வெர்சையில் உடன்படிக்கையினைப் பயன்படுத்தி நேசநாடுகள் இத்தாலியையும் ஜெர்மனியையும் பல கூறுகளாகப் பிரித்ததுடன் பல பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டன. இத்தாலி மற்றும் ஜெர்மனியின் குடியேற்றங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் பெருந்தொகைப் பணத்தினை நஷ்ட ஈடாக நேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியது.

யுத்தத்தின் தோல்வியினால் அவமானமும் வெட்கமும் அடைந்திருந்த இவ்விருநாடுகளுக்கும் வெர்சையில் உடன்படிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பன பெரும் பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்தன. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நிலையில் இந்நாடுகளின் அரசாங்கங்கள் காணப்படவில்லை.

ஆட்சியாளர்கள் நேச நாடுகளின் கைப்பொம்மைகளாகவே காணப்பட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள், படை வீரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டது. இக்காலத்தில் இவ்விரு நாடுகளிலும் சோசலிஸ்ட்டுகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இச்சூழ்நிலையினை முசோலினையும் ஹிட்லரும் நன்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களாலோ சோசலிஸ்ட்டுகளாலோ முடியாது என பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். முசோலினியின் பிரச்சாரம் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு முசோலினி மீது நம்பிக்கையினை ஏற்படுத்தத் தொடங்கியது. முசோலினிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் எழுச்சியை முறியடிக்க ஏனைய வர்க்கத்தினர் முற்பட்டனர்.

சகல பிரிவினரது ஆதரவைப் பெற்றுக் கொண்ட முசோலினி இத்தாலியின் பண்டைய பெருமைகளையும் வரலாறுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் கலாசார மேன்மைகளுக்கு புத்துயிரளிக்கப் போவதாக உறுதியளித்தார். தமது முன்னோர்களின் வீரதீர செயல்களை விளக்கி தேசிய உணர்வுகளை மக்களுக்கு ஊட்டினார். ஓருதலைப்பட்சமான வெர்சையில் உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும். நேச நாடுகள் வஞ்சம் தீர்க்கப்படல் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார். தாம் அனுபவித்து வந்த பல்வேறு விதமான பிரச்சினைகள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட விரும்பிய மக்கள் முசோலினியை தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் மக்கள் அபிப்பிராயங்களையோ சர்வதேச நியதிகளையோ மதிக்காத சர்வாதிகாரியாக இவர் பின்னர் மாறினார்.

பாசிசத்தின் இயல்புகள்

பாசிசம் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும் அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகும். இது அகிம்சை, சமாதானம், சோசலிசம், ஜனநாயகம், தனிமனித வாதம் என்பவற்றை நிராகரிக்கின்றது. பொய், பகட்டு, அடக்குமுறை, சந்தர்ப்ப வாதம், அதிகார ஆசை, போர் வெறி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டதோர் தத்துவமாகும்.

பாசிஸ்ட்டுக்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு தெளிவான விளக்கங்களை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டிலேயே நம்பிக்கை கொண்ட இவர்கள் செயற்பாட்டினை நியாயப்படுத்த கோட்பாட்டை உருவாக்குபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கோட்பாட்டையும் செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொள்பவார்கள்.. நம்பு, கீழ்ப்படி, போர்புரி என்பதே இவர்களின் உபதேசமாகும். மிகவும் உறுதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம், எதிர்க் கட்சியில்லாமை, விமர்சனம் இல்லாமை, தேசத்தின் எல்லா விடயங்கள் மீதான கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புத் தேசியவாத உணர்வு, கம்யூனிச எதிர்ப்பு போன்ற பண்புகள் இவர்களிடம் காணப்படுகிறது.

பாசிசம் அரசை மேன்மைப்படுத்தும் தத்துவமாகும். 'அரசுக்காக மக்களேயன்றி மக்களுக்காக அரசு இல்லை' என இவர்கள் கூறுகின்றார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. பாசிசம் தனியொரு கட்சியை கொண்ட ஒரு ஆட்சி முறையாகும். பாசிசவாதிகள் தமது கட்சி அங்கத்தவர்களை இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

பாசிசம் சர்வ அதிகாரங்களும், சர்வ வல்லமையும் கொண்ட தனியொரு ஸ்தாபனமாக அரசை உருவாக்குகின்றது. முசோலினி தனது பாசிசக் கோட்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “எல்லாம் அரசிற்குள்ளேயே இருக்கிறது. அரசிற்கு எதிராக அரசிற்கு உள்ளேயும், வெளியேயும் எதுவும் இல்லை. பாசிச அரசில் வெகுஜன தொடர்பு சாதனங்கள், கல்வி முறைமைகள் அனைத்தும் அரசின் பூரண கட்டுப்பாட்டிலிருக்கும். இவைகளினூடாக பாசிசம் தனது பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளும். பாசிசத்தில் பலாத்காரம் என்பது நிரந்தரமானதாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகளை ஒழிப்பதற்கும், பலாத்காரமே தேவையாகும். இரகசிய போலிஸ் பிரிவின் மூலம் எதிரிகளை இனம் கண்டு இராணுவ நீதிமன்றங்களுடாக கடுமையான தண்டனை வழங்கி பலாத்கார ஆட்சி நடத்தப் படவேண்டும்.

பாசிசம் தனிமனிதனையோ சமூகங்களையோ மதிப்பதில்லை. தனிமனிதன் அரசிற்கு அடிபணிய வேண்டும். தனிமனிதன் தனது உரிமைகளை வலியுறுத்தாமல் சமூகக் கடமைகளில் அக்கறை காட்ட வேண்டும். தனிமனிதனை அறிவாளியாகவோ ஆற்றல் மிக்கவனாகவோ ஆளத்தகுதியானவனாகவோ பாசிசம் கருதுவதில்லை. இதன் மூலம் பாசிசம் உயர்குழாம் ஆட்சியை வலியுறுத்துகிறது. மாக்ஸிசம் கூறும் இருவர்க்கக் கோட்பாட்டிற்கு மாறாக பலவர்க்கக் கோட்பாட்டினை முன்வைத்து சமுதாயத்தில் பல வர்க்கங்கள் உள்ளன என கூறுகிறது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவுகள் தவிர்க்க முடியாது நிலை பெற்றுள்ளது எனப் பாசிசம் கூறுகிறது.

பாசிச அரசு இனவாதத்தை முதன்மைப்படுத்தும் ஒன்றாகவுள்ளது. நோர்டிக் எனப்படும் கலப்பற்ற தூய ஆரிய இனத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆரிய இனத்தின் தனித்துவமும் கலாசார மேன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவனை மதிப்பீடு செய்வதற்கு அவன் பிரதிநிதித்துவம் செய்யும் இனமே தகுந்த அளவு கோல் ஆகும். ஆரிய இனமே உலகில் தலை சிறந்த இனம். அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். ஏனைய இனங்கள் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். யூத இனத்தை கலப்பு இரத்தத்தில் உருவாகியவர்கள் என பாசிசம் இழிவுபடுத்துகிறது. ஆரிய இனத்தின் தூய்மையினையும் மகிமையினையும் பேணும் நோக்கில் யூதர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் எனப் பாசிசம் கூறுகிறது.

சர்வதேச மட்டத்தில் ஏகாதிபத்திய கோட்பாட்டை பாசிசவாதிகள் ஏற்றுக் கொண்டார்கள். ஏகாதிபத்திய இலக்கினை அடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதற்காக யுத்தத்தினையும் பலாத்காரத்தினையும் நம்பினார்கள். போர் பிரியர்களாகிய இவர்கள் வரலாற்றில் எதுவுமே இரத்தம் சிந்தாமல் வெல்லப்படவில்லை என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகும். முசோலினி இது தொடர்பாக கூறும் போது சமாதானமாக வாழ்நாள் முழுவதும் வாழ்வதை விட போர்க்களத்தில் செலவிடும் ஒரு நிமிடம் மேலானது. ஏகாதிபத்தியம் என்பது வாழ்வின் நிலையானதும் மாற்ற முடியாததுமான விதியாகும் என்கின்றார். சமாதானத்தினை நிராகரிக்கின்ற இவர்கள் சமாதானம் என்பது நிலையானதோ நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்கிறார்கள். உலக சமாதானம் ஒரு கோழையின் கனவு எனக் கூறும் இவர்கள் பிறநாடுகளை படைபலத்தால் கைப்பற்றி ஏகாதிபத்தியக் கொள்கையினை நிலைநாட்டுவதிலேயே தமது தனித்துவம் தங்கியிருக்கிறது என்கிறார்கள்.

-பெனிட்டோ முசோலினி.



பாசிஸ்டுகளின் அறிக்கை

1919 ஆம் ஆண்டில், அல்கெஸ்ட் டி ஆம்பிரீஸ் மற்றும் ஃபுயூச்சரிஸ்ட் இயக்க தலைவர் ஃபிலிப்போ டோமாசோ மரினெட்டி ஆகியோரால் இத்தாலிய காம்பாட் படையின் அறிக்கை (பாசிச அறிக்கை) உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையானது ஜூன் 6, 1919 அன்று பாசிச செய்தித்தாள் Il Popolo d'Italia இல் வழங்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பிராந்திய அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான உலகளாவிய வாக்குரிமை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்த அறிக்கை ஆதரித்தது. தொழில், போக்குவரத்து, பொது சுகாதாரம், தகவல்தொடர்புகள் போன்றவை உட்பட, அந்தந்த பகுதிகளில் சட்டமியற்றும் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நடத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களாலும் வர்த்தகர்களிடமிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்களின் "தேசிய கவுன்சில்களின்" ஒரு கூட்டு நிறுவன அமைப்பு மூலம் அரசாங்க பிரதிநிதித்துவம். மற்றும் இத்தாலிய செனட்டின் ஒழிப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை ஆதரித்தது.



சிவப்பு ஆண்டுகள்

1920-ல், தொழில்துறைத் தொழிலாளர்கள் மேற்கொண்ட போர்க்குணமிக்க வேலைநிறுத்தம் இத்தாலியில் உச்சத்தை அடைந்தது; 1919 மற்றும் 1920 ஆகியவை "சிவப்பு ஆண்டுகள்" என்று அறியப்பட்டன. முசோலினி மற்றும் பாசிஸ்டுகள் ஆகியோர் நிலைமைகளைப் பயன்படுத்தி தொழிற்துறை தொழிலதிபர்களுடன் இணைந்து, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இத்தாலியில் உள்ள ஒழுங்கு மற்றும் உள்நாட்டு சமாதானத்தை காப்பாற்றுவதாகக்கோரி தாக்கினர்.

முதலாம் உலகப் போரில் தலையிட்டதை எதிர்த்த இடதுசாரிகளின் பெரும்பான்மையான சோசியலிஸ்டுகளை பாசிசவாதிகள் தங்கள் முக்கிய எதிரிகளாக அடையாளம் கண்டனர்.பாசிஸ்டுகளும் இத்தாலிய அரசியல் உரிமையும் பொதுவான நிலையைக் கொண்டிருந்தன: இருவரும் மார்க்சிசத்தை அவமதித்தனர், வர்க்க நனவை கருத்தில் கொள்ளவில்லை மற்றும் பிரமுகர்களின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.



முசோலினி அதிகாரத்தில் பாசிச இத்தாலி​

இத்தாலியின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், முசோலினி ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் பாசிஸ்ட்டுகள் இத்தாலிய பாராளுமன்றத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. முசோலினியின் கூட்டணி அரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரத் தாராளவாத கொள்கைகளை பொருளாதார மந்திரி அல்பர்ட்டோ டி ஸ்டீபனி (மையக் கட்சியின் உறுப்பினர்) தலைமையின் கீழ் தொடர்ந்து கொண்டது. இதில் பட்ஜெட் சமநிலைப்படுத்தப்பட்டது உட்பட உள்நாட்டுச் சேவைக்கு ஆழமான வெட்டுக்கள் இருந்தன. ஆரம்பத்தில், அரசாங்க கொள்கைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது, அடக்குமுறையான போலிஸ் நடவடிக்கைகள் குறைவாக இருந்தன.

பாசிஸ்டுகள் இத்தாலியில் பாசிசத்தை ஏசர்போ சட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கினர், இது நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி பட்டியலில் 25% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது என்று வாக்குறுதி அளித்தது. கணிசமான பாசிச வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம், பெரும்பாலான வாக்குகள் பாசிஸ்டுகளுக்கு செல்வதற்கு பல இடங்களை அனுமதித்தன. 3 ஜனவரி 1925 அன்று, முசோலினி பாசிச மேலாதிக்க இத்தாலிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மற்றும் அவர் என்ன நடந்தது என்பதை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளராக அறிவித்தார், ஆனால் அவர் தவறு எதுவும் செய்யாததாக வலியுறுத்தினார். அவர் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தினார். அரசாங்கத்தின் மீது முழு பொறுப்பையும், நாடாளுமன்றத்தை பதவி நீக்கம் செய்வதையும் அறிவித்தார். 1925 முதல் 1929 வரை, பாசிசம் சீராக வளர்ந்தது: எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.



தீவிரமான வெளியுறவுக் கொள்கை

1920-களில் பாசிச இத்தாலி கடுமையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது, இது கிரேக்கத் தீவான கோர்ஃபூ மீதான தாக்குதலை உள்ளடக்கியத. பாசிஸ்டுகள் பால்கன் பகுதியில் இத்தாலிய எல்லையை விரிவுபடுத்த நோக்கம் கொண்டனர், துருக்கி மற்றும் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கான திட்டம் தீட்டினர், யூகோஸ்லாவியாவை உள்நாட்டு யுத்தத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்தனர், மற்றும் இத்தாலியின் தலையீட்டை சட்டபூர்வமாக்குவதற்கு மாசிடோனிய பிரிவினைவாதிகள் மற்றும் அல்பேனியாவை இத்தாலியின் ஒரு உண்மையான பாதுகாப்பாளராக உருவாக்கி, 1927 வாக்கில் இராஜதந்திர வழிமுறைகளால் இவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.

லிபியாவின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக (லிபியா, அந்த காலப்பகுதியில் ஒரு இத்தாலிய காலனி நாடு) பாசிச இத்தாலி, லிபிய உள்ளூர் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் முந்தைய தாராளவாத காலனித்துவக் கொள்கையை கைவிட்டது. அதற்கு பதிலாக, இத்தாலியர்கள் ஆப்பிரிக்க இனங்களை விடவும் ஒரு உயர்ந்த இனம் என்று கூறியது மற்றுமின்றி இதனால் இத்தாலியர்கள் "தாழ்ந்த இனமான" ஆப்பிரிக்கர்களைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சி செய்வதற்கும் உரிமையுண்டு என்றனர். அதற்கு ஏற்ப லிபியாவில் 10 முதல் 15 மில்லியன் இத்தாலியர்கள் குடியேற முற்பட்டனர். இது லிபியாவில் உள்ள பூர்வீக மக்களுக்கு எதிரான லிபிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் ஒரு தீவிரமான இராணுவ நடவடிக்கையில் விளைந்தது. இதில் வெகுஜனக் கொலைகள், சித்திரவதை முகாம்களின் பயன்பாடு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பட்டினியும் அடங்கும்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் உருவான நான்கு வகையான முக்கியமான புதிய மாற்றங்களை அய்ஜாஸ் அஹ்மட் (Aijaz Ahmad) பின்வருமாறு விளக்குகிறார்.





அய்ஜாஸ் அஹ்மட்

முதலாவது வகை மாற்றம்

பாசிசம் என்ற சொல் கடும் விவாதத்திற்குள்ளாகிய பின்னணியில், தங்களைப் பெருமையோடு பாசிசவாதிகள் என அழைத்துக் கொண்டவர்களும் நார்ஸி ஜெர்மனியை ஒரு முன்மாதிரியான தேசமாக மகிழ்ச்சியோடு அங்கீகரித்தவர்களும், பாசிசம் ஆதிக்க நிலையில் இருந்த வரை,அதாவது ஹிட்லரின் தோல்விக்கு முன்பு வரை அவ்வாறு இருந்தார்கள். தற்போது அவ்வாறு இருப்பாதாகக் காட்டிக் கொள்வதை கைவிட்டுத் தங்களைத் தேசியவாதிகள் என மட்டும் அறிவித்துக் கொள்கின்றனர். பிரான்சின் தேசிய முன்ணணி, இத்தாலியின் தேசியக் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனிலும் யூகோஸ்லாவியாவிலும் கொலைவெறித் தன்மையுடைய தேசிய வாதமாகவும் இனத் தூய்மைக்கான இயக்கங்கள், இந்தியாவில் இந்து ராஜ்யமும் இந்து தேசியமும் இன்னும் இவை போலப் பலவாகவும் பாசிசம் உருவெடுத்தது.




இரண்டாவது வகை மாற்றம்

இரண்டாவது உலகப்போரின் முடிவின் பின்னணியில் மிக வேறுபட்ட இரண்டு காரணங்களால், வரலாற்றில் முதலாளித்துவத்தின் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படையான இனவெறியை நேரடிக் கொள்கையாகத் தக்கவைக்க இயலவில்லை. இதற்கு ஒரு காரணம், காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்னணியில் ஐரோப்பிய வகைப்பட்ட இனவெறி தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடியாமலிருந்தது. மறு காரணம், லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவங்கள், பாசிசத்தால் எடுத்து வரப்பட்டு, நார்ஸிகளின் பகுத்தறிவற்ற, மேன்மையான இயந்திரத் தொழில் நுட்பத்தால் லட்சக்கணக்கான யூதர்களை விஷவாயு அறைகளில் அடைத்துக் கொன்றமை பாசிச நடைமுறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. இங்கு, புதிய ஒரு முகத்துடன், வேறுபட்ட வடிவில் தன்னைக் காட்டவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. இந் நிலையில் தேசியம் என்ற பெயரில் பாசிசம் மீண்டும் எவ்வாறு தலைகாட்ட ஆரம்பித் துள்ளதோ, அவ்வாறே, இனவாதமும் மாயமான வடித்தில் ‘கலாச்சாரம்’, ‘தேசிய கலாசாரம்’ என்றவாறான பெயர்களிலும் மறுபடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.



மூன்றாவது வகை மாற்றம்

‘தேசம்’, ‘கலாசாரம்;’ ஆகியவற்றை மதத்தோடு இணைத்துப் பார்க்கிற நிலை உருவானது.ஆனால், பழைய ‘மரபு’க்குத் திரும்புகிற வகையிலல்ல. முப்பரிமாணத்தன்மை வாய்ந்த தேசம், கலாசாரம், மதம் சார்ந்த குடிமக்களாக இருப்பது அவசியம் என்று போதிக்கப்பட்டது. அடிப்படைவாத ஈரானைப் போல் ஒருவகையிலும் மிக நவீனமான இஸ்ரேல் போல இன்னொரு வகையிலும் இருப்பது புனிதமானதாகும். இதன் தொடர்ச்சியாக, வெளிப்படையாக இனவாதம் மதிக்கப்பட்ட நாட்களில் ‘மரபணுவியல்’ வகித்த இடத்தை, இப்போது ‘கலாசாரம்’ வகிக்கிறது.


நான்காவது வகை மாற்றம்

இது வர்க்கம் சார்ந்த கோட்பாட்டோடும் எகாதிபத்தியத்தியத்தோடும் தொடர்புடையது. புரட்சிகரமான காலகட்டத்தில், சோசலிசத் திட்டம் உருவான பின்னணியில் உருவான பழைய வகை பாசிசம், காலனி எதிர்ப்புத் தேசியவாதம் காலனிகளில் உருவான பின்னணியில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒருவகையான தேசபக்த சிந்தனைகளோடு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் குட்டி பூர்ஷ்வாக்களிடமிருந்தும் சிறிய முதலாளிகளிடமிருந்தும் ஒரு வகையான வர்க்கத் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டது. நார்ஸிகள் தங்களைத் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ எனறு அழைத்துக் கொண்டனர். முசோலினி முதலில் சோசலிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக இருந்து, பின்னர் பாசிசத்தின் அமைப்பாளராக மாறி, பாசிச அரசின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவராவார். அடிப்படையில் அதன் ‘தேசியம்’ பெருமளவும் ஏகாதிபத்தியச் சார்புடையது. அதன் வர்க்கத் தீவிரவாதத்திற் பெரும் பகுதி மக்களைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதே. பாசிசம், பின்னர் அவற்றைக் கைவிட்டு, முற்றாக ஏகாதிபத்திய மூலதனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

நியாயமாகச் சிந்தித்துப் பார்த்தால், போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான பாசிசத்தை உலக எதிர்ப் புரட்சியின் ஈர்ப்பு மையம் எனக் கூறலாம். எனினும் அவர்களும் தங்களைப் புரட்சி வாதிகளாகவே கூறிக் கொண்டனர். தீவிர வலதுசாரித் தன்மையோடு இணைந்து ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை, பாசிசத்திற்கெதிராகப் போராடுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் படுவோம். அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சிமுறைகள் தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்கச் சற்றும் தயங்காது.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடிக் காலகட்டத்தில், மிக உச்சமான தொழில் லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. அத்தகைய கொள்கைகட்கு எதிராக மக்கள் தலையிடக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாடொன்றை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினாற்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்ட முனையும். ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வர முற்படும். பாசிசம் என்பது அத்தகைய பெருந்தொழில், பெருவர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, அதிகொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலுமாகும். பாசிசமானது, முதலாளித்துவத்தின் தத்துவார்த்தக் கருவிகளைக் கைக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத எதிர்ப்பையும் தன் பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டது. இத்தாலிய பாசிசம் கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்தியது.

பாசிசத்தால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை. பல காலமாக அது அவற்றை மூடி மறைத்திருந்தது. ஆனால் ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலை தூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டாலும் அணிதிரட்டிய வெகுஜனப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பாசிசத்தைத் தோற்கடிக்க முடியும்.


பாசிசத்தின் பலமுகங்கள்


புதிதாக நடைபெற்ற போர்கள், பெரும் காலனியாதிக்கச் சக்திகள் தங்களுக்கிடையே உலகைப் பங்கிட்டுக் கொண்ட பிறகு, உலகை மீளவும் மறுபங்கிடுவதற்கான போர்களாயிருந்தன. இந்நிலையில், போட்டி என்பது, யாரும் கைப்பற்றாத பகுதிகளைக் கைப்பற்றுவதுடன் அல்லாமல், காலனியாதிக்க சக்திகள் தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த ஏற்றுமதிச் சந்தைகள், முடிவு உற்பத்திப் பொருட்களுக்கான மூலவளங்கள், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றுக்குமாக இருந்தது. ‘உலக மகாயுத்தம்’ என அழைக்கப்பட்ட, உலகின் மிகப் பெரிய சூதாட்டக்களமாக, அவ்வளவு நாடுகள் பங்கேற்ற போர் வரலாற்றில் இதுவரை காணாத ஒன்றான இதன் பின்ணணியிலேயே பாசிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சியின்போது அதற்கெதிராகப் போராடியவர்களில் முக்கியமான ஒருவரான டோளியாட்டி (Togliatti) தனது அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால் அது தவிர்க்க முடியாத வளர்ச்சிக் கட்டமல்ல. பாசிசத்தால் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் முதலாளித்துவ அடிப்படையில் தீர்க்க முடியாது. எனவே அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே. பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது.





எரிக் ஃப்ரோம்

பாசிசத்தை உளவியல் முறையில் ஆராய்ந்த எரிக் ஃப்ரோம் (Eric Fromm) 1941-ல் வெளியிட்ட தனது “விடுதலையிலிருந்து தப்புதல்” (Escape from Freedom ) என்ற தனது நூலில் முதலாளிய சமூகத்தின் விடுதலை உணர்வு மனிதனுக்குச் சில பொறுப்புகளையும் சுமத்துகிறது. முதலாளியத்தால் தனியராக்கப்படும் மனிதர் தனது தேவைகள், நலன்கள் ஆகியவற்றைத் தானாகவேதான் சாதித்துக் கொள்ள வேண்டும். சந்தையின் போட்டி, வெற்றி தோல்விகள் ஆகியவற்றை நேரடியாகத்தான் சந்தித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு, விடுதலை மனிதரைத் தனிமனிதராக்கி விடுகிறது. தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் எதுவுமில்லாதது போன்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஒரு விதமான பாதுகாப்பு உணர்வுக்கு மனிதர்கள் ஏங்குகின்றனர். தலைக்கு மேலே ஒரு பியூரர் (தலைவர்: இங்கு ஹிட்லரைக் குறிக்கும்), காலுக்குக் கீழே ஆரிய ஜெர்மானிய இனம், உடன் நடக்கவும் உரத்துக் கோஷமிடவும் ஒரு பெரிய கூட்டம், இவையெல்லாம் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, ஆதரவைத் தருகின்றன. தனிமையிலிருந்து தப்பித்து விட்டதாக மனிதர் உணர்கின்றனர். இதுதான் பாசிசம் என்று எரிக் ஃப்ரோம் எழுதினார்.




ஹேர்பேட் மார்க்யூஸ்

பாசிசத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர் ஹேர்பேட் மார்க்யூஸ் (Herbert Marcuse) இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான நவமார்க்சியராகக் கொள்ளப்படுபவர். பாசிசத்தின் தோற்றத்திற்கும் ஐரோப்பிய சமூகத்தில், குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றில் நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் உடன்பாட்டுக் கலாசாரத்திற்கும் (Affirmative culture) உட்தொடர்பு உள்ளதாக சொல்லும் மார்க்யூஸ் இடைக்கால ஜெர்மனியில் வழக்கிலிருந்த மேட்டுக்குடிக் கலாசாரத்தைத் தீவிரமாக மறுதலித்து (Negate) விமர்ச்சிக்காமல் அக்கலாசாரத்துடன் உடன்பட்ட நிலையிலேயே நவீன ஜெர்மானிய கலாசாரம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார். எனவே அதனை மார்க்யூஸ் உடன்பாட்டுக் கலாசாரம் என்கிறார். கலாசார வாழ்வில், இடைக்கால மேட்டுக்குடிச் சமூக விழுமியங்கள் ஆன்மீகம் என்ற அடைமொழியுடன் தங்கி நிற்கின்றன. அவை சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும் அவ்வாழ்வின் தேவைகளிலும் அக்கறையின்றி அவற்றை இழிநிலையில் வைத்துப் பார்க்கின்றன.

சமூக முரண்பாடுகளையும் மக்கள் பிரச்சினை களையும் இவ்வகைக் கலாசாரம் ஆன்மீகம் என்ற திரை போட்டு மறைக்கிறது. வாழ்க்கைத் தளத்தில் அல்லாது ஆன்மீகத் தளத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக அது பம்மாத்துச் செய்கிறது. உடல், உணர்ச்சிகள், சுய நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஓர் உலகுக்குள் வருமாறு அது சகலரையும் அழைக்கிறது. சாதாரண மக்களுக்கு அது சாத்தியப்படாமற் போவதே சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அது கூறுகிறது. ஆன்மீகக் கலாச்சாரம் அமைதியையும் நிம்மதியையும் சாந்தியையும் வழங்கும் என அது பிரச்சாரம் செய்கிறது. ஆன்மாவும் ஆன்மீகமும் உலகியல் ஈடுபாடற்ற, கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் புராதன வடிவங்கள். எந்தவிதக் கேள்விக்கும் இடமின்றிச் சகலவற்றையும் ஆன்மா தனக்கு அடிமையாக்கும். பிரத்தியட்ச வாழ்க்கைக்கு அருகில் வரப் பிடிவாதமாக மறுத்து, வாழ்வால் ஒவ்வொரு கணமும் தீண்டப்படும் மனம், அறிவு ஆகியவற்றை ஏற்க மறுக்கும் ஆன்மீகத் தத்துவங்களைச் சிலாகித்துப் பாராட்டும் நாடுகளில் பாசிசத்திற்கு வாய்ப்புண்டு என்றும் ஆன்மீகமயப்பட்ட சமூகத்தில் தனி மனிதர்கள் சர்வாதிகாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளுவர் என்றும் மார்க்யூஸ் கூறுவார். எனவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளைச் சமூக வரலாற்று யதார்த்தத்தோடும் சமூக மாற்ற நோக்கங்களோடும் இணைக்காமல் போகும் போது அவை பாசிசமாக உருவெடுக்கும் என்று மார்க்யூஸ் குறிப்பிடுகிறார்.

பாசிசம் இன்று புதிய முகங்களைத் தேடியபடி முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு முகம் ஜனநாயகம் என்றால் அதன் மற்ற முகம் பாசிசம் ஆகும். ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அடக்குமுறையை வெளிப்படையாகக் கையாளும் நிர்ப்பந்தம் முதலாளித்துவத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அது தனது ஜனநாயகப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியான முதலாளித்துவ இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது.

தீவிர தேசியவாத உணர்வுகளைத் தூண்டுதல், சர்வாதிகாரம், அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, ஜனநாயக உரிமை மறுப்பு போன்றன அதன் பொதுவான இயல்புகளாகும். முகங்கள் மாறினாலும் இப் பண்புகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காணலாம். முக்கியமாக எல்லா வேளைகளிலும் பாசிச அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும். பாசிசம் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட வழிகள் மூலம் அதிகாரத்திற்கு வந்தாலும் இப் பண்புகள் மாறாமல் அப்படியே இருக்கும். இதைப் பழைய இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் முதலாக 1960 முதல் 1980 வரை நீடித்த மூன்றாம் உலகின் பாசிசவாத ஆட்சிகளைக் கொண்டிருந்த சிலி, இந்தோனீசியா, தென் கொரியா, ஆர்ஜென்டீனா போன்ற பல நாடுகளிலும் காணலாம். அவற்றையொத்த தன்மைகளையுடைய பல “ஜனநாயக” நாடுகளை இன்றைய உலக ஒழுங்கிற் காணலாம்.

இன்று பாசிசம் ஜனநாயக முகமூடியை அணிந்தபடி வெற்றிகரமாக வலம் வருகிறது. கெடுபிடிப் போர்க் காலப்பகுதியிலும் அதைத் தொடர்ந்த ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் இயங்கிய பாசிச ஆட்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு எப்போதுமே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் தனது தேவைகளுக்கு ஆதரவானதாக பாசிச ஆட்சி இருக்குமிடத்து அதற்கு ஆதரவு வழங்கப் பின்னிற்பதில்லை. அதே வேளை ஒரு நாட்டில் பாசிசவாத ராணுவ ஆட்சியை உருவாக்குவதன் மூலமே தனது நலன்களைக் காக்க முடியும் என்ற நிலையில் அவ்வாறன ஆட்சியை உருவாக்கவோ வழிநடத்தவோ ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய உலக ஒழுங்கிலும் இந்நிலையே தொடர்கிறது.

அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம், தலைமை இல்லாமை, முற்போக்கு சக்திகளிடையே ஐக்கியமின்மை ஆகியன மக்கள் நடுவே தோற்றுவிக்கும் விரக்தி உணர்வு பாசிசவாதிகட்கு மிகவும் பயன்படுகிறது. இதை எவரையும் விடச் சரியாகப் பாசிசவாதிகளே பயன்படுத்துகிறார்கள். ஒரு சமூகமாக ஒவ்வொரு சமூகமும் கவனத்தில் எடுக்கவேண்டிய அம்சம். அவ்வாறான பாசிசப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத்தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பல அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பலமுறை உணர்த்தியிருக்கிறது.

ஐரோப்பிய பாசிசம் பற்றிய அனுபவம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் மோசமாகும்போது, பாசிச சக்திகள் தலையெடுக்கின்றன. குறிப்பாக ஜரோப்பாவில் உள்மறைந்திருந்த பாசிசக் கூறுகள் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும் வந்தேறுகுடிகளுக்கு (குறிப்பாக ஆசியர்களுக்கு) எதிராகவும் வெளிப்பட்டதை பார்க்க முடியும்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். காலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியாகப், பணிந்துபோகும் மனப்பாங்கு தலைமுறைகள் தாண்டியும் விதைக்கப் பட்டிருப்பதால் அடிப்படையான உரிமை மறுப்பும் அடக்குமுறையும் பாரிய எல்லையை எட்டும் வரை, அவை மக்களுக்குப் பிரச்சனைகளாகத் தெரிவதில்லை. அவை பிரச்சனைகளாகத் தெரியத் தொடங்கும் போது பாசிசம் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கும். இந்நிலையில் மிகச் சிறிய எதிர்ப்போ மாற்றுக் கருத்தோ சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நிறைவாக பாசிசம் என்பது முதலாளிய சமூகத்தின் மிக உக்கிரமான வடிவம். ஆரம்பகால முதலாளியம் தனிமனித, சிறுமுதலாளியப் போட்டிகட்குத் தனக்குள் இடமளித்தது. ஆனால் பாசிசமோ ஏகபோக நிதிமூலதன முதலாளியம். அது உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ (totalitarian) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக முழுமையின் “ஒழுங்கைக்” காப்பதற்காகத் தனி மனித சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாசிசம் ஒடுக்குகிறது. அறிவையும் சமூக இலட்சியங்களையும் பொய்யென அறிவித்து இன உணர்ச்சிகளை மட்டும் மனிதர்களின் மரபு என்றும் சொந்த இருப்பு என்றும் பாசிசம் கூறுகிறது. கற்பனாவாத (utopian) உறுதி மொழிகள் சிலவற்றை அது வழங்குகிறது. இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிசம் இக்கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு (cultural synthesis) உட்படுத்துகிறது. இப்பண்பாட்டு இணைவாக்கம் பாசிசக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது. இந்த ஆதரவு பாசிச ஆட்சி தன்னை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுகிறது.

எதிர்ப்புகள் பாசிசத்தால் மிகக் கவனமாக் கட்டுப்படுத்தப்படுகின்றன. நெருக்கடிகளும் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தேசியத்தை, நாட்டைப் பலவீனப் படுத்துவதாக பாசிசம் கூறுகிறது. எனவே பலம் கொண்ட நாடாக உருவாவதற்கு சர்வதேசப் பொருளாதார, ராணுவப் போட்டியில் நாடு வெற்றி பெறுவதற்கு இது அவசியம் என பாசிசம் பிரச்சாரம் செய்கிறது. இதன் அடிப்படையில் பாசிசம் இன்றும் உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சுகிறது. அதற்கெதிராக போராடுவது அவசியமாகிறது. அப்போராட்டம் பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தின் மூலம் மட்டுமே இயலும்.



விமர்சனம்

பாசிசத்தினை ஒரு தத்துவமாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. ஒரு தத்துவம் எனக் கூறுவதை விட அரசியல் சந்தர்ப்பவாதம் எனக்கூறுவதே பொருத்தமானதாகும். அதிகார வெறிபிடித்த தலைமைத்துவம் தனது அமைப்பின் நலனை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது. இதன் மூலம் ஜனநாயக தத்துவம் செயலிழக்கச் செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம், எதிர்கருத்துக்கள் சுதந்திரமான நீதித்துறை செயற்பாடு என்பன தடை செய்யப்பட்டன. தேர்தல்கள் என்பதற்கோ மக்கள் அபிப்பிராயத்திற்கோ இங்கு இடமளிக்கப்படுவதில்லை. தாராண்மைவாத தத்துவம் ஜனநாயகம் தனிமனிதவாதம் என்பவற்றை பாதுகாக்க எதேச்சாதிகாரம் வரம்பற்ற ஆட்சி என்பவற்றை பாசிசம் பாதுகாக்கிறது. பாசிசம் சோசலிசத்திற்கும் எதிரானதாகும். தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை ஒடுக்கும். அதே நேரம் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்க முற்படுகின்றது. சர்வதேசியத்தினையும் பாசிசம் நிராகரிக்கிறது. அதே நேரம் ஆக்கிரமிப்பு தேசிய வாதத்தினை முழுமையாக அங்கீகரிக்கின்றது. யுத்தம் என்பதை அங்கீகரிக்கின்ற அதே நேரம் சமாதானத்தினை இழிவுபடுத்துகிறது. இன மேலாதிக்க கற்பனையினை ஏற்றுக் கொண்டு ஏனைய இனங்களையும் தேசியங்களையும் இழிவுபடுத்தி அழிக்க பாசிசம் முற்படுகிறது. ஆயினும் குறிப்பிட்ட காலம் பாசிசம் ஒரு தத்துவமாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் வரலாற்றுப் நிகழ்வினை தீர்மானித்ததில் குறிப்பிடக் கூடியளவிற்கு பங்காற்றியது. இதன் மூலம் வரலாற்றில் பாசிசம் தனக்கென ஓரிடத்தை ஒதுக்கி வைத்துள்ளது.



இரண்டாம் உலகப் போர்

பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லர் இருவரும் 1930 - 1940 களில் பிராந்திய விரிவாக்க மற்றும் வெளியுறவு கொள்கை தலையீட்டுவாத நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்தனர். இத்திட்டங்களின் மூலம் இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.

முசோலினி இத்தாலிய கோரிக்கைகள் மீட்கப்பட வேண்டும், மத்தியதரைக் கடலின் இத்தாலிய மேலாதிக்கத்தை நிறுவுதல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இத்தாலிய அணுகளைப் பெறுதல், மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலில் உள்ள இத்தாலிய ஸ்பேசியோ வைடால் ("முக்கிய இடம்") ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று கோரினார். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான ஜெர்மனியர்களால் காலனித்துவப்படுத்தப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மன் லெபென்ஸ்ராம் "வாழும் இடம்" உருவாக்கப்பட வேண்டும் என்று ஹிட்லர் கோரினார்.

1935 முதல் 1939 வரையான காலப்பகுதியில், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் தங்கள் கோரிக்கைகளை பிராந்திய கூற்றுக்கள் மற்றும் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை அதிகப்படுத்தியது. 1936-இல் ஜெர்மனி தொழில்துறை ரைன்லேண்ட் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. வெர்சாய் உடன்படிக்கையால் இந்த பிராந்தியத்தை தளர்த்தப்பட்டது. 1938-ம் ஆண்டு ஜெர்மனியை சுடபென்லாந்துக்கு வழங்கிய முனிச் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் செக்கோஸ்லோவாக்கியா மீது பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடியை தீர்ப்பதில் ஜேர்மனிக்கு உதவிய ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகியவை ஜெர்மனிக்கு உதவியதுடன், அந்த நேரத்தில் ஒரு ஐரோப்பிய போரைத் தடுத்தது. இரண்டாம் உலகப் போரின் போது, நாசி ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பாவில் உள்ள ஆக்சஸ் அதிகாரங்கள் மில்லியன் கணக்கான போலந்து, யூதர்கள், ஜிப்சீஸ் மற்றும் இதர இனப்படுகொலைகள் ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்டன.

1942-க்குப் பிறகு, அச்சுப் படைகள் புதையுண்டன. இத்தாலியில் பல இராணுவத் தோல்விகளை எதிர்கொண்ட பின்னர், இத்தாலியின் நேச நாடுகள் படையெடுப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச அவமானம், முசோலினி அரசாங்கத்தின் தலைவராக அகற்றப்பட்டு, கிங் விக்டர் இம்மானுவல்-III இன் கட்டளையால் கைது செய்யப்பட்டார். அவர் பாசிச அரசை அகற்றுவதற்காகவும், கூட்டணி படைக்கு விசுவாசத்தை நிலைநிறுத்தியது.

முசோலினி கைது செய்யப்பட்டு ஜெர்மன் படைகளால் காப்பாற்றப்பட்டு 1943 முதல் 1945 வரை ஜேர்மனிய அரசான இத்தாலிய சமூகக் குடியரசை வழிநடத்தினார். 1943 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனி பல இழப்புக்கள் மற்றும் நிலையான சோவியத் மற்றும் மேற்கத்திய நட்புரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டது.ஏப்ரல் 28, 1945 அன்று, முசோலினி இத்தாலிய கம்யூனிஸ்ட் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 30 ஏப்ரல் 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில், ‘பாசிசம்' என்ற சித்தாந்தத்தில் பெனிட்டோ முசோலினிக்கு நிரந்தர இடம் உண்டு. 1922 முதல் 1943 வரை இத்தாலியை ஆண்ட முசோலினி, ஹிட்லருடன் இணைந்து இரண்டாவது உலகப் போரில் இறங்கியவர். வட மத்திய இத்தாலியின் பிரிடாபியோ பகுதியில் 1883 ஜூலை 29-ல் பிறந்தார் முசோலினி. அவரது தந்தை அலெசாந்த்ரோ முசோலினி, சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டவர். மெக்ஸிகோ அதிபர் பெனிடோ யுவரோஸ், இத்தாலிய சோஷலிஸ்டுகளான ஆமில்கேர் சிப்ரியானி, ஆண்ட்ரியா கோஸ்டா ஆகியோரின் பெயர்களை இணைத்துத் தனது மகனுக்கு ‘பெனிடோ ஆமில்கேர் ஆண்ட்ரியா முசோலினி' என்று பெயர் சூட்டினார்.



கோர முடிவு

லிபியாவையும் அபிசீனியாவையும் மீட்ட நேச நாடுகள், 1943-ல் இத்தாலி மீது படையெடுத்தன. ரோம் நகரின் மீது குண்டுகளை வீசின. அந்த ஆண்டு ஜூலை 25-ல் மன்னர் விக்டர் இம்மானுவேல், முசோலினியைக் கைது செய்து பல்வேறு ஊர்களில் சிறை வைத்தார். ஜெர்மானிய கமாண்டோக்கள் அவரை மீட்டுத் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வடக்கு இத்தாலியில் தங்க வைத்தனர். அங்கிருந்துகொண்டு பொம்மை (இத்தாலிய) அரசின் அதிபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார் முசோலினி. 1945 ஏப்ரல் 27-ல் ஜெர்மானிய ராணுவ அதிகாரியைப் போல மாறுவேடமிட்டு, சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றபோது, இத்தாலியைச் சேர்ந்த அரசு எதிர்ப்புப் படை வீரர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டார்.

அடுத்த நாளே மிலன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.

முசோலினிக்கு ஏற்பட்ட இந்தக் கதி ஹிட்லரின் காதுகளை எட்டியது. பெர்லின் நகருக்குள் சோவியத் துருப்புகள் நுழைந்துவிட்டன என்று கேள்விப்பட்டதும் மனைவி ஈவா பிரௌனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, விஷம் குடித்ததுடன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார் ஹிட்லர். இரு சர்வாதிகாரிகளின் வாழ்வும் இப்படியாக முடிவுக்கு வந்தது.​



தொடரும்...


நாசிசம்



By C.P.சரவணன் | 








நாசிசம் (Nazism)

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள் (racial hierarchy), ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது; மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை (Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை செய்தது.





ஜோசப் ஆர்தர் டி கொபின்யூ

ஜோசப் ஆர்தர் டி கொபின்யூ (Joseph Arthur de Gobineau) என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபு, ஆரிய இன’ கொள்கைக்கு வித்திட்டவருள் முக்கியமானவர். இக்கொள்கைகளை தன் “An Essay on the Inequality of the Human Races’ என்ற 1400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் விளக்கியுள்ளார்.





நாசி ஜெர்மனி, ஸ்வஸ்திக் கூடிய புதிய கொடி







ஸ்வஸ்திக் என்பது ஒன்றையொன்று அவற்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள், அவற்றின் எல்லா நுனிப்பகுதிகளும் ஒரே திசையில் வளைந்து இருக்குமாறு அமைந்த ஒரு வடிவத்தைக் குறிக்கும். இது நுனிகள் வலப்பக்கம் வளைந்தவையாகவோ (卐), இடப்பக்கம் வளைந்தவையாகவோ (卍) இருக்கலாம்.

இந்த வடிவம் பண்டை இந்தியாவின், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இது இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாகப் பயன்பட்டது.

மேற்கத்திய பண்பாட்டில் குறுகிய காலம் இவ்வடிவம் பெரு வழக்கில் இருந்ததைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டில் தேசிய சமூகவுடமைச் ஜெர்மன் தொழிலாளர் கட்சியினர் (நாசிக் கட்சி) இவ்வடிவத்தைத் தமது சின்னமாக ஆக்கினர். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் செருமனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், ஸ்வஸ்திக் நாசி செருமனியில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது.

1935 ஆம் ஆண்டில் ஸ்வஸ்திகாவைக் கொண்டிருந்த நாசிக் கட்சியின் கொடி, செருமனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனால் 1930களில், சுவசுத்திக்காவை நாசிசம், பாசிசம், வெள்ளையின உயர்வுக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகவே மேற்குலகம் பார்த்தது. தற்காலத்தில் மேற்கு நாடுகளில் இது இகழ்ச்சிக்கு உரிய ஒரு சின்னமாகவே உள்ளது. நாசிசத்தின் சின்னமாக இது பயன்படுத்தப்படுவதை செருமனி தடை செய்துள்ளது. நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பல தற்கால தீவிரவாத அரசியல் கட்சிகள் சற்று மாற்றியமைக்கப்பட்ட சுவசுத்திக்காவைத் தமது சின்னமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பாவுக்கு இவர்கள் குடிபெயர்ந்த "ரோமா' பழங்குடிகள் பயன்படுத்திய "ஸ்வஸ்திக்' சின்னத்தை தான் நாசி கட்சியினர் பயன்படுத்தி கொண்டதாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.





அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)

ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்

தொழிலாளர் கட்சியானது (ஜெர்மன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei NSDAP), 1929 ல் பெரும் பொருளாதார மந்தநிலையுடன் ஏற்பட்ட சமூக மற்றும் நிதி எழுச்சிகளின் போது, ​​அது ஒரு வலதுசாரி அரசியல் கட்சியாக இருந்தது. நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது; மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை செய்தது.

ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Concept) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி ஈவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. அடால்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விவரிக்கப்பட்டுள்ளது.





ஆல்பிரட் ரோசன்பெர்க் (Alfred Ernst Rosenberg)

ஆல்பிரட் ரோசன்பெர்க் பால்டிக் ஜெர்மானியக் கோட்பாட்டாளரும் ஜெர்மன் நாசிக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாவார். டீட்ரிக் எக்கார்ட் என்னும் தேசிய ஜெர்மன் தொழிலாளர் கட்சித் தலைவர் இவரை ஹிட்லரிடம் அறிமுகம் செய்தார். அது முதல் நாசி அரசாங்கத்தின் செயல் வடிவங்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். இனவெறிக்கொள்கை, யூதப்பகைமை, வெர்செய்ல் ஒப்பந்தங்களை மீறுதல் போன்ற செயல்களில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது. கிருஸ்த்துவத்தை வெறுத்த ரோசன்பெர்க், கிருஸ்த்துவத்தை நடைமுறைக்குகந்த சமயமாக (Positive Christianity) மாற்ற முனைந்தார். இவருக்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமைக்கப்பட்ட நியூரம்பெர்க் விசாரணை ஆணையத்தினால் போர் விதிமீறல் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அக்டோபர் 16, 1946 இல் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்





ஹெர்மன் வில்லெம் கோரிங் (Hermann Wilhelm Goring)

ஹெர்மன் வில்லெம் கோரிங் ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது தண்டனை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்து இறந்தார்.





பால் ஜோசப் கோயபெல்ஸ் (Paul Joseph Goebbels)

கோயபெல்ஸ் ஜெர்மனியின் மிக முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவர். அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்:

இவரின் சித்தாந்தம் “"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது." என்பதாகும்.

அடால்ப் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் ஜெர்மானிய ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவரின் யூதப்பகைமைக்குச் சான்றாக கிரிஸ்டல் நைட் (Crystal Night) கொடூரநிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இவர் பல புதினங்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் பொதுவுடமைவாதிகளையும், சோசலிசவாதிகளையும் எதிர்ப்பதாகவும், ஸ்ட்ரோமப்டேலுங் எஸ் ஏ அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தன. 1923இல் நாசி அரசியலில் நுழைந்த இவர் 1928களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் 1933இல் ஹிட்லர் அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கை பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர் பலரை போரில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1943ஆம் ஆண்டில் அச்சு நாடுகளுக்கு எதிராக உலகநாடுகள் திரும்புகையில் அவற்றுக்கு எதிராக ஜெர்மானியர் திரும்புமாறு தன் பரப்புரை மூலம் ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. கோயபெல்ஸ், ஹிட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தார். ஹிட்லர் இவரைத் தனக்குப் பின்வரும் அதிகாரப்பூர்வ வேந்தராக அறிவித்துவிட்டு இறந்தார். ஹிட்லர் இறந்தபின் கோயபெல்ஸ் 1 மே, 1945 அன்று தன் மனைவி மகதா, ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது.





ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் (Heinrich Himmler)

ஹிம்லர் நாசி ஜெர்மன் அரசியலில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். இவர் உடன் இருந்த மற்ற அரசியல் தலைவர்களுட்ன ஒப்பிடுகையில் இவர் அதிக அரசியல் பலம் கொண்டவர் ஹிட்லரின் மதிப்புக்குரியவர். எஸ் எஸ் படைப்பிரிவின் தளபதியாக, ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஆக பதவி வகித்தவர். இவர் ஆளுமையின் கீழ்தான் ஜெர்மனியின் அனைத்து நாசிச் சிறைச்சாலைகளும் இயங்கின. இவர் ரோமானியர்களையும், யூதர்களையும் கொன்று குவித்ததின் எண்ணிக்கை 2 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை நீள்கிறது. அது மட்டுமில்லாமல் போர்க் கைதிகளையும், பொதுவுடமைவாதிகளையும், புரட்சியாளர்களையும், ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களையும், மன நலம் குன்றியவர்கள் என்று இவர் கொன்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சமாகும். உலகப்போரின் முடிவில் இவர் மீதுள்ள குற்றங்களை கைவிடுவதென்றால் சரணடைவதாக நேசநாட்டுப் படையினருக்கு நிபந்தனை விதித்தார் . பின்னர் பிரிட்டீஷ் படையினரால் கைது செய்யப்பட்டு மே 23, 1945 ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டார் அங்கு ஆணையத்திற்கு பதிலளிக்குமுன் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்தார்.

நாசி தலைவர்களின் அனைவரின் இறுதி முடிவை காணும்போதே, நாசி கொள்கையை பற்றி நாம் புரிந்து கொள்ளலாம்.



தொடரும்...