மத அரசியல்-13: டாவோயிஸம்
By C.P.சரவணன் |
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/6/original/laozi.gif)
டாவோயிஸம் (Taoism)
ஆரம்ப காலத்தில் டாவோ ஒரு மதமாக இருந்தது என சொல்வதை விட ஒரு தத்துவமாக இருந்தது எனச் சொல்லலாம். சீனாவின் பழமையான மதம் டாவோயிஸம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப் பழமையான மதம் இது.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/6/Taoism_1.jpg)
லாவோட் ஸே
லாவோட் ஸே (Laozi) என்றால் ”வயதான எஜமான்” அல்லது வயதானவர் எனப் பொருள்படும். லாவோட்ஸே தன் வாழ்வின் பெரு பகுதியை சௌ பேரரசிலேயே கழித்தார். பேரரசின் வீழ்ச்சியை முன் கூட்டியே அவர் உணர்ந்து அங்கிருந்து விலகி எல்லைப் ப்குதிய்ல் வசித்தார். அங்கிருந்த சுக்கச் சாவடி அதிகாரியான “இன் ஷி’வேண்டுகோளின்படி கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டு டாவோ டே ஜிங் (Tao Te Ching) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இது ஒரு மனிதன் உயர்வை அடைவதற்கும், நல்ல தலைவானாக விளங்குதற்கும் என்ன மாதிரியான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான தத்துவ நூலாகும்.
சொர்க்கத்திற்கும், பூமிக்கும் முன்பாக என்ன இருந்தது அல்லது இருக்கிறது என்பதைப் பற்றிய ஒர் திறன்பெற்ற ஆய்வையும் அதில் விளக்கி இருந்தார். இவரது நூல் சமயம் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் இருந்தது அது பலரையும் ஈர்த்தது. எனினும் டாவோயிஸம் அப்போது நெறி முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கற்ற ரீதியிலேயே பின்பற்றப்பட்டு வந்தது.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/6/Taoism_2.jpg)
ஸாங் டாவோலிங்
ஸாங் டாவோலிங் (Zhang Daoling ) என்பவர் கி.பி.142ஆம் ஆண்டில் டாவோ டே ஜிங் நூலைப் புனித நூலாக விளக்கினார். இது வெறும் தத்துவம் சார்ந்த நூல் மட்டுமல்ல, வானத்து தேவதைகளை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்தும் புனித நூல் என்பதைக் கண்டறிந்தார்.
ஆன்மீகத் தொடர்பினை அழகாகவும், ஆழமாகவும் இதில் விளக்கப்பட்டிருப்பதை நன்றாகப் புரிந்துணர்ந்தார். மேலும் மரணமற்ற நிலையைப் பற்றியும் மனிதர்கள் அறிந்து கொள்ள இது உதவுவதாகவும் கூறி, ஒரு ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட தீதியில் டோவோயிஸம் என்னும் மதத்தை உருவாக்கினார்.
கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இக்லிஷ் இருவரும் டாவோ டே ஜிங் நூலை நவீன மொழிபெயர்ப்பாக்கினர். இதன்பிறகே டாவோயிஸம் சார்ந்த நூல்கள் ஏராளமாக வெளிவந்து மக்கள் மத்தில் பரவலான எழுச்சியை ஏற்படுத்தியது. நிறைய பேர் இம்மத்தில் ஈடுபாடு வைத்து அவனைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர் டாவோயிஸம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் தன் சிறகை விரித்தது என்பது வரலாற்றுச் சுவடுகள் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/6/Taoism_3.jpg)
எட்டு சாவாமையுள்ளவர்கள்
சாங் லிங் அதாவது சாங் தாவோ லிக் என்பவர் மேற்குச் சீனாவில் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தும் இரசவாத முறைய அறிமுகப்படுத்தினார். புத்த மதத்தின் தோற்றத்தினால் வந்த சவாலை சமாளிக்க தன்னை ஒரு மதமாக பிரபலப்படுத்திக் கொண்டது. அதன்பின் சாவாமையுள்ளவர்கள் எட்டு(Eight Immortals) தெய்வங்களை (பா ஷியான்) அடுப்படியின் தெய்வம் (சாஓ ஷென்) நகர தெய்வக:ள் (ஹெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர் வணங்கப்பட்டனர்.
ஒரு கூட்டத்தில் டாவோயிஸம் என்பது தத்துவம் மட்டுமே என்றும், சமயம் மட்டுமே என்றும் இருவேறு கோணத்தில் கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்து அறிவியலாளர்களும் தீவிரமான ஆய்வினை மேற்கொண்டனர். எனினும் முடிவில் இது இயற்கை, மனிதம் மற்றும் தெய்வீகம் ஆகிய அனைத்தையும் வலியுறுத்தி இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மட்டுமன்றி, ஒரு தலைவனாக இருந்து கொண்டு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்னும் அரிய வழிகாட்டுதலையும் இது நமக்கு அருளியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மூட நம்பிக்கைகளால், கி.பி.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் டாவோயிஸம் திட்டமிட்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இந்த மதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மீண்டும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது. அதன் அரிய தத்துவங்கள் அதன் வளத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
இப்போது கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்தவர்களும் டாவோயிஸத்தின் மீது புதிய அக்கறை கொண்டு வருகின்றனர். முக்கியமாமக அவர்கள் இதனை மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்தினை வற்புறுத்தும் தத்துவம் சார்ந்த விஷயமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.
அக்யூபங்சர், மூலிகை, மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இதனை அணுகி வருகிறார்கள். டாவோயிஸம் எனபதில் இம்மாதியான மருத்துவம் ஒரு பகுதி என்பதே உண்மை.
டா என்றால் வழி அல்லது ‘பாதை’ என்று பொருள். இந்த அண்டமானது இயல்பாகவே ஒரு வழியைக் கொண்டிருக்கிறது. அந்த வழியை அறிந்து அதனுடன் மனிதன் ஒன்றிப்போகிறபோது அவன் முழுமையைப் பெறுகிறான். நிறைவை அடைகிறான். இப்படித்தான் போதிக்கிறது டாவோயிஸம்.
டாவோயிஸ நெறிகள் ‘மும்மணிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. கருணை, அடக்கம், பணிவு ஆகியவையே அந்த மும்மணகள். ஐசவ உணவு உண்பதே நல்லது என்றும் இம்மதம் வலியுறுத்துகிறது.
இயற்கையை வணங்குதல், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் போன்றவை டாவோயிஸட்டுகளால் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சீன இரசவாதம், ஜோதிடம், சமையல், போர்க் கலைகள், சீன மரபு வழி மருத்துவம், மூச்சுப்பயிற்சி போன்றவை டாவோயிஸத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது.
இம்மதம், சீனாவைத் தவிர தைவான், புருனே, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 20 கோடிப் பேரால் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் போகர் என்ற சித்தரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். அங்கு இவர் ‘போ யங்’ என்று அழைக்கப்படுகிறார்.
சீனாவில் டாவோயிஸம் உருவாகக் காரணமாக இருந்த லாவோட்ஸேயும், போகரும் ஒருவரே என்றும் சிலர் கூறுகின்றனர். பிறப்பால் இவர் ஒரு சீனர் என்றும் இவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
மத அரசியல்-14: கன்பூசியனிஸம்
By C.P.சரவணன் |
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/13/original/confucianism.jpg)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/13/con_1.jpg)
கன்பூசியஸ் (Confucianism)
சீனாவின் லூ நாட்டில் ஷான்டோங் மாநிலத்தில் சாங்பிங் மாவட்டத்தில் டிஸோ/ கு பூ என்னும் இடத்தில் லூவின் டியூக் ஷியாங்கின் இருபத்து இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.மு. 551ஆம் ஆண்டு செப்டம்பர் 28 கன்பூசியஸ் பிறந்தார். அவர் இயற்பெயர் குங்ஃபூ ட்ஸூ ( K'ung Fu-tzu). அவருடைய தாய் நிச்சியூ மலையில் பிள்ளை வரம் கேட்டு பிராத்தனை செய்ததன் விளைவாக பிறந்தார்.
பிறப்பின் சமயத்தில் அவருடைய தலையில் ஒரு புடைப்பு இருந்தது, அதன் காரணமாக அவர் “சியூ” (குன்று) என்றழைக்கப்பட்டார். கன்பூசியஸ் என்ற வார்த்தை “குவாக்-ஃபூ-ட்ஸே என்ற சீன வார்த்தையின் லத்தீன் எழுத்துப் பெயர்ப்பாகும். இவரது இயற்பெயர் குங்பூஸ. பெரும் தத்துவ மேதையான இவர் அநேகமாகக் கடவுளாகவே வணங்கப் பட்டு வருகிறார் இவரது கருத்துக்கள் ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு ‘கன்பூசியனிஸம்’ என்னும் மதமே உருவாகியது. அவரது நூல் ஆனலெக்ட்ஸ் இம்மதத்தின் புனித நூலாக விளங்கி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளிலும் இம்மதம் விரிந்து பரவி உள்ளது.
கன்பூசியஸின் தந்தை அவரது 70வது வயதில் மறுமணம் செய்தார். அந்த மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். இவருக்கு நான்கு வயதான போது தந்தை இறந்து போனார்.
தந்தையை இழந்த அந்தக் குடும்பம் வறுமையில் தள்ளாடியது. வாழ வழி தெரியாமல் தத்தளித்த அக்குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு இந்தப் பிஞ்சுச் சிறுவன் தலைமேல் வந்து வழுந்தது. எனவே படிப்பைத் துறந்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பல வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை. சிறு வயது முதலே சிரமங்களை அனுபவித்த காரணத்தை தலையெழுத்து என்றோ, விதி என்றோ சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிடாமல், மனிதனுக்குத் துன்பம் ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் தனது சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டது.
அறியாமை தான் முக்கியக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்ட கன்பூசியஸ், அறியாமைக்கு என்ன காரணம் என்று யோசிக்கத் தொடங்கினார்.
அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வது தான் உண்மையான அறிவு என்ற புதிய தத்துவத்தைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டார். இச்சிந்தனையின் ஊடாக வரலாற்றைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் கட்டடக் கலையிலும் வல்லமை மிகுந்தவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.
முகச் சிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்த கன்பூசியஸ், தனது இருபதாவது வயதில் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார். குழந்தைகளைப் பண்புடனும், நறந்குணத்துடனும் வளர்த்தார்.
குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் சமூக நலனிலேயே அதிக அக்கறை கொண்டவராக இருந்தபோதிலும், குடும்பதம்திற்குத் தேவையான வருமானத்திற்காக வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இவரது அறிவாற்றல் சிறப்பானதாக இருப்பதை உணர்ந்த அரசாங்கம், உணவுப் பொருள் கிட்டங்கியைப் பராமரிக்கும் அதிகாரியாகப் பணிபுரிய வாய்ப்பளித்தது. அந்த வேலையிலும் தனது திறமையைக் காட்டினார். பற்பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இவரது அட்டகாசமான திறமையை அரசும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. மேலும் அரசின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆக்கமிகு கொள்கைகளை வகுத்துக் கொடுக்கவே, கன்பூசியஸின் மதிப்பும், மரியாதையும் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும் பொறுப்பை அரசு அவருக்கு வழங்கியது.
இவ்வாறாக அறிவில் ஈடிணையற்றவராக விளங்கி, பெரும் புகழ் சம்பாதிக்க அவர் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிமானது கல்வி மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்தார். எனவே பிரபல தத்துவஞானி அரிஸ்டாட்டிலைப் போலவே கல்விக் கழகம் ஒன்றை நிறுவினார். அரசு நிர்வாகம், சமூக முன்னேற்றம், ஒழுக்கம், பண்பு போன்றவற்றைப் பாடமாக மாணவர்களுக்குப் போதித்தார். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத் துவத்தை உணர்வதிலும், சுதந்தமிரமாகச் சிந்திக்கும் திறனை வலியுறுத்துவதிலும் கவனம் செலுத்தினார்.
இவரது இப்புதிய முயற்சி பெரும்பாலானவர்களைக் கவர்நதாலும், சிலருக்குக் கசந்தது. அதற்கு முக்கியக் காரணம் என்ன வென்றால், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அவர் பேசிவந்தது தான்.
மக்கள் மதச் சம்பிரதாயங்களில் மூழ்கி, மூடநம்பிக்கையில் உழன்று கிடக்கிறார்கள். மதம் என்பது அவர்களை முட்டாள்களாக்கி இருக்கிறது. அறியாமையின் காரணமாக மதவெறியோடு காணப்படுகிறார்கள். என்றெல்லாம் கன்பூசியஸ் பிரசங்கம் செய்துவந்தார். இவ்வாறு மதத்தின் மீதான தனது வெறுப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படையாக காண்பித்தார். வாழும் காலத்தின் மனிதன் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிப்பணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கன்பூசியஸின் இத்தகையப் போக்கு அரசு அதிகாரிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரைக் குறை கூறத் தொடங்கினர். இதனால் அரசாங்கப் பணியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலையை விட்டு வெளியே வந்த கன்பூசியஸ், பல நாடுகளுக்கும் சென்றார். அங்கெல்லாம் தமது எண்ணத்தையும், கருத்துக்களையும் பரப்பினார்.
அவரது முற்போக்கான கருத்துக்களால் கவரப்பட்ட குறுநில மன்னர்கள் சிலர், அவருக்கு உதவ முன்வந்தபோதும், ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கொடிய வறுமை அவரைப் பலமாக ஆட்கொண்ட போதும், இவ்வாறு உதவிகளை அவர் ஒதுக்கித் தள்ளியது பலரையும் வியப்பில் விழிவிரிய வைத்தது. அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கௌரவிக்க விரும்பியது. ஆனால் அதனையும் ஏற்க மறுத்து விட்டார்.
கடுமையான சிந்தனை, ஓயாத உழைப்பு, வறுமையின் பிணைப்பு போன்ற காரணங்களால் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தனது 70-வது வயதில் ஒய்வெடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தமது சீடர்களுடன் கடைசிக் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். சீடர்களுக்கு உபதேசங்கள் வழங்கிக் கொண்டே வசந்தமும் இலையுதிர்க் காலமும் என்னும் நூல் ஒன்றையும் எழுதினார்.
கன்பூஸியசின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது கருத்துக்கள் இன்னும் அதிக ஆதரவைப் பெற்றது. அவர் மீதான நன்மதிப்பு அதிகமானது. அவரது கொள்கைகள் தத்துவம் என்பதையும் தாண்டி மதமாக உருவெடுத்தது.
அதுவே ‘கன்பூசியனிஸம்’ என்ற பெயரில் அவரது கருத்துக்கள் அனைத்தும் மதமாக மாறியது. உலகில் மக்களிடையே ஏழை, பணக்காரர் என்கிற மாதிரியான எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றார் கன்பூசியஸ். ஆதரவற்றோர், முதியோர், ஏழை எளியவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்பதையும் அவர் வலியுறுதினார். கல்வியை வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்ற கன்பூசியஸ், இளைஞர்கள் சுதந்திரமாக சிந்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/13/con_2.jpg)
கன்பூசியஸ் ஒரு கடவுளாகவே மதிக்கப்படலானார். அவர் பிறந்த கு பூவில் அவருக்குக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோ 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் கன்பூசியஸ் பிறந்த வீடும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்பூசியஸ் கோயில் மற்றும் வீடு அமைந்துள்ள 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான வளாகத்தில், ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்துள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களும் அங்கே காணப்படுகின்றன. கடந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகளாக சீனாவை ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இந்த வளாகத்தைப் பாதுகாத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்பூசியஸ் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனத்தை மா சேதுங் கடைப்பிடித்து வந்தார். எனவே கம்யூனிஸ்ட் சீனாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் கன்பூசியஸ் தத்துவத்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் டமாவோவின் இறப்புக்குப் பின் கன்பூசியஸ் சித்தாந்தம் அரசின் ஆதரவுடன் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
மனித நேயம், நற்பண்பு, சுதந்திரமான செயல்பாடுகள், முழுமையான நிறைவு, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது கன்பூசியஸ் மத நெறி.
கன்பூசியனிஸம் (Confucianism)
இவருடைய தத்துவங்கள் கன்பூசியனிஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்புக்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார். நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.
ஐந்து இலக்கியங்கள்
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/13/con_3.jpg)
1. ஷி ஜிங் (பாடல் நூல்)
சௌ காலத்தின் தினசரி வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் 305 பாடல்கள்
2. ஷூ ஜிங் (வரலாற்று நூல்)
பேரரசு காலத்திலிருந்து சீனர்களுன் 17 நூற்றாண்டு கால வரலாறு
3. ஈ ஜிங் ( மாற்றங்களின் நூல்)
ஆறு முழுமையான நேர்க்கோடுகளின் சேர்க்கையால் உருவாகக் கூடிய 64 சேர்மானங்களின் விளக்கங்கள் அடிப்படையிலான நூல்
4. லி ஜி (சடங்குகளின் நூல்)
சடங்குகள், சம்பிரதாயங்கள் பேரில் விதிமுறைகள் அடங்கிய நூல்
5. சுன்சியூ (இளவேனிற்கால நிகழ்ச்சிகள் நூல்)
கன்பூசியசின் சொந்த் ஊரான லூவின் வரலாறு
லி, சென்
சமுதாயத்தில் சீர்மிகுலைந்து போயிருந்த ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்ட அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே கடைபிடிக்க வேண்டிய கடமைகளை உணர்ந்ந்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். லி என்றால் ஒரு சமூகத்தில் மனிதன் ஒருவன் எவ்வாறு முறையாகச் செயல்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். இக்கோட்பாடுகளே “லி’ எனப்படும்.”சென்” ஐ கடை பிடித்தால் அனைவரையும் கனிவோடு நடத்த முடியும். ரென், இயி, இலி என்று இதன் அடிப்படை நெறிகளைச் சொல்வார்கள். ரென் என்றால் பிறர் மீதான மனிதநேயம் மற்றும் பொதுநலம் சார்ந்த கடமை உணர்வு என்று பொருள். இயி என்றால் நியாயத்தை நிலைநிறுத்த முயற்சித்தல், நன்மை செய்ய விழைதல் மற்றும் ஒழுக்க மனப்பான்மை ஆகியனவாகும்.
‘ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் முக்கியமான அறப்பண்புகளைக் காப்பதற்காக ஒருவன் தன் உயிரையும் தர வேண்டும் என்று கன்பூசியஸ் நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் சீனத்து பழமையான மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர் என்றாலும் கன்பூசியஸ் நெறியானது மனிதநேயம் சார்ந்ததாகவும், இறைசாரா நம்பிக்கை உடையதாகவுமே இருக்கிறது. கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாகக் காண்பதற்குப் பதிலாக பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறி என்று கூறுவோரும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியனிஸத்தை ஒரு சமயமாக அடையாளப்படுத்தி உள்ளது.
சீடர்கள்
இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான் (Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.
கன்பூசியஸின் நான்கு புத்தகங்கள்
1. தா ஷூஹ் (மஹா கல்வி)
கண்ணியவானின் கல்விக்கு அடிப்படைப் புத்தகம்
2. சுக் யுங் (நடுநிலைக் கோட்பாடு)
நடுநிலையோடிருந்து மனித இயல்பை முன்னேற்றுவிப்பதன் பேரில் ஆய்வு நூல்
3. லூன் யூ (இலக்கிய தொகுப்பு)
கன்பூசியசின் உபதேசங்கள் அடக்கிய ஒரு தொகுப்பு
4.மெங்-ட்ஸே (மென்ஸியசின் புத்தகம்
கன்பூசியசின் முக்கிய சீடரான மெங்-ட்ஸே என்பவரின் கருத்துகள் அடங்கிய நூல்
இறப்பு
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/13/con_4.jpg)
Cemetery of Confucius, Qufu, Kina
கி.மு. 479-ஆம் ஆண்டு தமது 71-வது வயதில் கன்பூசியஸ் மரணத்தைத் தழுவினார். தனது மரணத்துக்குப் பிறகு சீடர்கள் தவிக்காமல் இருப்பதற்காக சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு என்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
மத அரசியல்-15: ஷின்டோயிஸம்
By C.P.சரவணன் | Published on : 17th September 2018 04:15 PM | அ+அ அ- | |
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/17/original/shinto.jpg)
ஷின்டோ (Shinto)
ஷின்டோ என்பது ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். ஜப்பானியர்களின் தாய் மதமாக இருந்தது ஷிண்டோ மதம் ஆகும். ஷிண்டோயிசம் என்னும் இம்மதம் இயற்கை வழி என்றும், கலாச்சார வழி என்றும் இருபிரிவுகளாகக் காணப்படுகிறது. ஜப்பானின் மக்கள் தொகையில் முக்கால் பாகம் அதாவது 9,10,00,000-க்கு அதிகமானோர் அன்று சொல்லப்பட்டாலும், 3 சதவீதத்தினரே நம்பிக்கை வைத்திருப்பதாக சுற்றாய்வு காண்பிக்கிறது. நன்செய் நிலத்தில் நெல்பயிர் செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்தே, விவசாய சடங்குகள் என ஷின்டோ மதம் தோன்ற ஆரம்பித்தது என கொடன்ஷா என்சைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. உடலை விட்டு பிரிந்து போகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால், அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளைச் செய்தனர், பின்னாளில் இது மூதாதையர்கள் வழிபாடாக மாறியது.
வழிபாடு
அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக நம்பினர். முன்னொரு காலத்தில் ”இசனாகி” என்றொரு தெய்வம் இருப்பதாக ஷின்டோ புராணக் கதை கூறுகிறது. இப்பெயர் ஈசன் என்ற பெயர் போல விளங்குகிறது.
இயற்கை வழி என்பது சூரியன் மற்றும் சந்திர வழிபட்டை வலியுறுத்துகிறது. குறிப்பாக சூரியனையே இப்பிரிவினர் முழு முதற் கடவுளாக வணங்கினர். உலகின் உயிர் சூரியன் தான் என்றும் சூரியனின் அசைவைப் பொறுத்தே உலகில் ஆக்கமும், அழிவும் நடப்பதாகவும் இப்பிரிவினர் நம்புகின்றனர். சூரியனால் விளையும் தானியப் பயிர்களை வணங்கியதோடு, அதனை சூரியனுக்குப் படைத்தும் வந்தனர். சூரிய சக்தியால் விளையும் பயிர்களைப் பயன்படுத்துவதே மனிதனின் முக்கியக் கடமை என்று நினைத்து அதற்கு அதிக முன்னுரிமை வழங்கி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த இயற்கை வழிப் பிரிவு என்ன காரணத்தினாலோ மங்கி, மறைந்து போய்விட்டது. கலாச்சார வழிப் பிரிவு மட்டுமே தற்போது ஜப்பானில் உயிரோடு இருந்து வருகிறது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது ’யாயோரோசு-நோ-காமி” என்ற சொற்றொட்ரை உருவாக்கினர், அதன் பொருள் எண்பது லட்சம் தெய்வங்கள் என்பதாகும்.
புனிதமாக்கல்
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_1.jpg)
ஷிண்டோ மதத்தில் புனிதம் என்பதே மிகமுக்கியமானதாக விளங்குகிறது. நன்மை செய்வது புனிதம் என்றும், தீமை செய்வது அருவறுக்கத்தக்கது என்றும் இம்மதம் கூறுகிறது. தீமைகளையும், தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்றும் ஷிண்டோயிசம் உபதேசிக்கிறது.
புனிதம் என்பதும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகப்புனிதம் மற்றொன்று புறப்புனிதம். அகப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைவது. அப்போது தான் கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும். புறப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைய வேண்டுமென்றால் உடலும், செயலும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். இதற்கு மேல் இன்னொன்றையும் இம்மதம் உபதேசிக்கிறது. அதாவது நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்திற்கு ஈடானவன் என்கிறது. தனை வலுவூட்ட “கோசிகி” மற்றும் “நிஹான்’ என்ற நூல்கள் தொகுக்கப்பட்டன.
புனிதமாக்கும் ஒனுசா
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_2.jpg)
இதனை ஒரு தேசியக் கோட்பாடாகவே ஜப்பானியர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஷிண்டோ தர்மத்தின் படியே மன்னர்கள் வாழ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றளவிலும் ஜப்பானிய மன்னர் குடும்பத்தினர் ஷிண்டோ மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறினால் அவர்கள் தங்கள் அரச வம்சத்தையே இழந்துவிடுகிறார்கள்.
கோட்பாடுகள்
சகிப்புத் தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரத்துவம், உயர்வு தாழ்வற்ற சமூகம் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் ஷிண்டோ மதத்தில் இருந்து வருகின்றன. பிறப்பு, இறப்பு என்பவை விதிப்படி நடப்பவை என்பதை உறுதியாக நம்புகிறது. முன்னோர்களை அவமதிக்காமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கொள்கை இதில் காணப்படுகிறது. கருணையைக் கடவுள் வடிவமாகப் போற்றுகிறது. நீதியை நிலைநாட்டத் தவறுபவனை கோழை என்று இகழ்கிறது. அன்பு காட்டுபவன் இல்லத்துக்கு அழைக்காமலேயே செல்லும் உயரிய வழக்கத்தை ஷிண்டோ மதம் கொண்டுள்ளது. வானத்தை உங்கள் தந்தையாகக் கருதுங்கள், பூமியை உங்கள் தாயாக நேசியுங்கள், மற்ற அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளாக நினையுங்கள். அப்போது துவேஷம், துன்பம் போன்றவற்றில் இருந்து இன்பம் என்னும் மோட்சத்தை அடைய முடியும் என்று போதிக்கிறது இம்மதம்.
தமிழர்கள் மதத்தைப் போலவே மனிதனும் தெய்வமாகலாம் என்று ஷிண்டோ மதமும் உபதேசிக்கிறது. அற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் பட்டியலிடுகிறது.
1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களின் சொற்படிக் கேட்டு நடக்க வேண்டும்.
2. விவேகத்துடன் மட்டும் இல்லாமல் விவுவாசத்தோடும் பணியாற்ற வேண்டும்.
3. எப்போதும், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மை தவறவே கூடாது.
4. பொய்மையை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்.
5. நன்றாகக் கற்று அறிவைப் பெருக்கி ஞானத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
6. தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.
இவற்றைக் கடைப்பிடித்தால் கடவுள் அம்சத்தை அடைந்து தெய்வத்திற்கு நிகராக மாற முடியும் என்கிறது ஷிண்டோயிசம்.
பண்டைய காலத்தில் இது அரசர்களால் அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய மதமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை ஜப்பானின் முதன்மை பெற்ற மதமாக விளங்கிய இது பின்னர் தனது செல்வாக்கை இழந்துவிட்டது. சிவலிங்கத் திருவுருவத்திற்கு பெருமதிப்புத் தரும் இம்மதத்தை சுமார் ஐந்தே கால் கோடிப் பேர் பின்பற்றி வருகின்றனர். இம்மதம் இந்து மதத்தைப் போலவே பல கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. கடவுள்களை இவர்கள் ‘காமி” என்கின்றனர். நாம் தமிழில் ‘சாமி’ என்று அழைப்பதை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இறந்த பின்னர் மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘சாமி’ ஆகிவிடுகிறார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. மிருகங்களை கடவுளின் தூதர்களாக நம்பும் இவர்கள், மலை, காற்று, உணவு போன்ற அனைத்தையுமே கடவுள் என்கின்றனர். இயற்கையைக் கடவுள் என்று வழிபடும் இவர்கள் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்று நம்புகிறது. இந்துக்கள், கடவுள் தூணிலும் உருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவதை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம். ஜப்பானில் பரவலாக ஷிண்டோ கோயில்கள் காணப்படுகின்றன. அதன் நுழைவாயிலில் வித்தியாசமான தோரி என்று அழைக்கப்படும் ஒரு விதமான கதவு உள்ளது.
கடவுளும், பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதான் நம்பிக்கை ஜப்பானியரிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்து ஆவிகளை வணங்கி இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். தங்கள் மூதாதையர்கள், மன்னர்களை கடவுகளுக்கு இணையாக வணங்கிப் போற்றுவது உண்டு. அதாவது இவர்களை ‘சாமி’ என்றே வழிபடுகின்றனர். ஷின்டோக்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுத்தம், தூய்மை. எனவே எப்போதும் இவர்களின் கோயில்கள் சுத்தமாகவே இருக்கும். இங்கு செல்லும் போது கைகளையும், வாயையும் நன்றாகக் கழுவிய பிறகே செல்ல வேண்டும்.
இதற்காகக் கோயிலின் முகப்பில் ஒரு தொட்டி நிறைய நீர் நீரப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள தொண்டி மூலம் கை, கால்களை கழுவிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். ஷின்டோ கோயில்களில் சிறப்பான ‘சாமிக்கள் நிறைய காணப்படுகின்றனர். புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது இவர்களின் வழக்கம். அதேபோல சங்கடமான துன்பச் சூழல் ஏற்படும் காலக்கட்டங்கலும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள்.
பண்டிகைகள்
ஷின்டோ பண்டிகைகள் மதம். இவர்கள் வருடம் முழுதும் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்,
• ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை-ஜனவரி 1-3
• செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக் கொண்டே வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் விதைகளை வீசுவது-பிப்ரவரி 3
• ஹினா மட்சுரி, மார்ச்-3, சிறுமிகளுக்கான பொம்மைப் பண்டிகை
• கோய்-நோபோரி-கெண்டை மீன் கொடிகளை பறக்கவிடும் பண்டிகை மே-5
• ட்சுகிமி-நிலவினை ரசித்துக் கொண்டு, சிறிய வட்ட வடிவிலான பலகாரங்களை காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் சாகுபடியை அரசர் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• நிய்யிணமி-புதிதாக விளைந்த நெல்லை அரச குடும்பம் ருசி பார்க்கும் பண்டிகை நவம்பர்
• ஷிச்சி-கோ-சான், இதன் பொருள் ஏழு-ஐந்து-மூன்று, வண்ண வண்ண ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்கின்றனர் நவம்பர்-15
புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் மாலையில் இருந்தே மக்கள் கோயில்களுக்கு வந்துவிடுகின்றனர். கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக உள்ளே செல்ல அனுமதிக்ப்படுகின்றனர். கோயிலுக்குள் சென்ற பிறகு வேண்டிய அளவு அங்கேயே இருந்து இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சந்நதிக்கு நேர் எதிரே நெருப்புக் குண்டம் காணப்படுகிறது. அதிலிருந்து வரும் புகையை கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர். கோயிலுக்குள் நிறைந்த அமைதி நிலவும் மதக் குருக்கள் ஒதும், அலய மணியோசை ஒலிக்கும் குரல் மட்டுமே கோயிலுக்குள் கேட்கின்றன. பிறப்பின்போதும், திருமணம் போன்ற முக்கிய விசேட நிகழ்வின்போதும் சடங்குகள் செய்வது ஷின்டோக்களின் வழக்கம். இந்து மதத்திலும் இத்தகைய சடங்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
யூடாடேஷின்ஜி சடக்கு (Yutateshinji ceremony)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_3.jpg)
பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும் காமிகளுக்குப் படையல் செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகள் மூலமும் கெட்ட ஆவிகளை விலக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பழமையான மதங்களுக்கே உரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோ மதத்தில் நிறைய உள்ளன.
நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம், கல்வி, வெற்றிகரமான வியாபாரம் போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்ற பொருட்கள் இவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தங்கள் இல்லங்களில் மாடங்களை அமைத்து வழிபடுவது இவர்களின் வழக்கம். சகுனம் பார்ப்பதும் உண்டு. முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அமர்ந்திருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகின்றனர்.
ஷின்டோ மதத்தை யாரும் உருவாக்கியதாக அறியப்பட வில்லை. இதற்கென வழிகாட்டும் புனித நூல் எதுவும் கிடையாது நேர்மறை சிந்தனை கொண்ட மதமாக விளங்கும் இது, அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்றும், கெட்ட ஆவிகளால்தான் தீயவை நடப்பதாகவும் நம்புகின்றனர்.
கோயில்களில் சீட்டுக்கட்டி விடுவது, பொம்பை செய்து வைப்பது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் தமிழர்களிடம் இருப்பதைப் போலவே ஷின்டோ மதத்திலும் உள்ளது. திருஷ்டிப் பூசணி வடிவில் சிகப்பு நிறத்தாலான சிறிய மற்றும் ஆளுயரத்திலான பெரிய பொம்மைகள் விற்பனை ஜப்பானில் பிரசித்தம். கண்கள் மட்டும் வரையப்படாத இந்தப் பொம்மைகளை வாங்கி வந்து, விருப்பத்தை மனதில் நினைத்து, பொம்மைக்குக் கண்களை வரைகிறார்கள். பின்னர் அதைத் தங்கள் வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் வரும் புத்தாண்டுக்குள் நிறைவேறியதும் இந்தப் பொம்மையை கோயிலில் கொண்டுவந்து வைத்துவிடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள்கிழமை அன்று ‘செஜின் நோ’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருபது வயதான ஆண்களும், பெண்களும் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் விழா இது. அன்றைய தினத்தில் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையான கிமோனோவிலும், ஆண்கள் புத்தம் புதிய சூட், கோட் சகிதமாகவும் கோயிலுககுச் செல்வது வழக்கம். ஜப்பானில் உள்ள புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
ஷிண்டோக்களின் கடவுளான காமிகளை புத்தரின் வடிவாகவும் கருதுகின்றனர். ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் புத்தர் கோயிலுகளிலும் நடைபெறுகின்றன. அதேபோன்று புத்த மதம் சார்ந்த திருவிழாக்கள் ஷின்டோ ஆலயங்களிலும் நடை பெறுகின்றன.
தேவைக்கேற்ப மாறுகிறது
பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பண்டிகைகளயும், சடங்குகளையும் அவர்கள் மறந்துவிடவில்லை.
ஜின்குஜி
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_4.jpg)
புத்த மதப் பரவலில் இரு மதங்களும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதோடு ஜின்குஜி (Jinguji) என்ற கோயில்கள் கட்டப்படுவதற்கு வழி நடத்தியது.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
மத அரசியல்-15: ஷின்டோயிஸம்
By C.P.சரவணன் |
ஷின்டோ (Shinto)
ஷின்டோ என்பது ஜப்பானில் மட்டுமே காணப்படுகிற ஒரு மதமாகும். ஜப்பானியர்களின் தாய் மதமாக இருந்தது ஷிண்டோ மதம் ஆகும். ஷிண்டோயிசம் என்னும் இம்மதம் இயற்கை வழி என்றும், கலாச்சார வழி என்றும் இருபிரிவுகளாகக் காணப்படுகிறது. ஜப்பானின் மக்கள் தொகையில் முக்கால் பாகம் அதாவது 9,10,00,000-க்கு அதிகமானோர் அன்று சொல்லப்பட்டாலும், 3 சதவீதத்தினரே நம்பிக்கை வைத்திருப்பதாக சுற்றாய்வு காண்பிக்கிறது. நன்செய் நிலத்தில் நெல்பயிர் செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்தே, விவசாய சடங்குகள் என ஷின்டோ மதம் தோன்ற ஆரம்பித்தது என கொடன்ஷா என்சைக்ளோபீடியா ஆப் ஜப்பான் விளக்குகிறது. உடலை விட்டு பிரிந்து போகும் ஆத்மாக்களுக்கு அவர்கள் பயப்பட்டதால், அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு சடங்குகளைச் செய்தனர், பின்னாளில் இது மூதாதையர்கள் வழிபாடாக மாறியது.
வழிபாடு
அவர்கள் வழிபட்ட மரங்கள், கற்கள், கண்ணாடிகள், வாள்கள் போன்றவற்றின் மீது இத்தெய்வங்கள் வந்து தற்காலிகமாய் தங்கியதாக நம்பினர். முன்னொரு காலத்தில் ”இசனாகி” என்றொரு தெய்வம் இருப்பதாக ஷின்டோ புராணக் கதை கூறுகிறது. இப்பெயர் ஈசன் என்ற பெயர் போல விளங்குகிறது.
இயற்கை வழி என்பது சூரியன் மற்றும் சந்திர வழிபட்டை வலியுறுத்துகிறது. குறிப்பாக சூரியனையே இப்பிரிவினர் முழு முதற் கடவுளாக வணங்கினர். உலகின் உயிர் சூரியன் தான் என்றும் சூரியனின் அசைவைப் பொறுத்தே உலகில் ஆக்கமும், அழிவும் நடப்பதாகவும் இப்பிரிவினர் நம்புகின்றனர். சூரியனால் விளையும் தானியப் பயிர்களை வணங்கியதோடு, அதனை சூரியனுக்குப் படைத்தும் வந்தனர். சூரிய சக்தியால் விளையும் பயிர்களைப் பயன்படுத்துவதே மனிதனின் முக்கியக் கடமை என்று நினைத்து அதற்கு அதிக முன்னுரிமை வழங்கி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த இயற்கை வழிப் பிரிவு என்ன காரணத்தினாலோ மங்கி, மறைந்து போய்விட்டது. கலாச்சார வழிப் பிரிவு மட்டுமே தற்போது ஜப்பானில் உயிரோடு இருந்து வருகிறது. காலப்போக்கில் ஜப்பானியர் லட்சக்கணக்கில் தெய்வங்களை வழிபட ஆரம்பித்தபோது ’யாயோரோசு-நோ-காமி” என்ற சொற்றொட்ரை உருவாக்கினர், அதன் பொருள் எண்பது லட்சம் தெய்வங்கள் என்பதாகும்.
புனிதமாக்கல்
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_1.jpg)
ஷிண்டோ மதத்தில் புனிதம் என்பதே மிகமுக்கியமானதாக விளங்குகிறது. நன்மை செய்வது புனிதம் என்றும், தீமை செய்வது அருவறுக்கத்தக்கது என்றும் இம்மதம் கூறுகிறது. தீமைகளையும், தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்றும் ஷிண்டோயிசம் உபதேசிக்கிறது.
புனிதம் என்பதும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகப்புனிதம் மற்றொன்று புறப்புனிதம். அகப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைவது. அப்போது தான் கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும். புறப்புனிதம் என்பது ஆத்மா புனிதமடைய வேண்டுமென்றால் உடலும், செயலும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதாகும். இதற்கு மேல் இன்னொன்றையும் இம்மதம் உபதேசிக்கிறது. அதாவது நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்திற்கு ஈடானவன் என்கிறது. தனை வலுவூட்ட “கோசிகி” மற்றும் “நிஹான்’ என்ற நூல்கள் தொகுக்கப்பட்டன.
புனிதமாக்கும் ஒனுசா
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_2.jpg)
இதனை ஒரு தேசியக் கோட்பாடாகவே ஜப்பானியர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஷிண்டோ தர்மத்தின் படியே மன்னர்கள் வாழ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றளவிலும் ஜப்பானிய மன்னர் குடும்பத்தினர் ஷிண்டோ மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறினால் அவர்கள் தங்கள் அரச வம்சத்தையே இழந்துவிடுகிறார்கள்.
கோட்பாடுகள்
சகிப்புத் தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரத்துவம், உயர்வு தாழ்வற்ற சமூகம் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் ஷிண்டோ மதத்தில் இருந்து வருகின்றன. பிறப்பு, இறப்பு என்பவை விதிப்படி நடப்பவை என்பதை உறுதியாக நம்புகிறது. முன்னோர்களை அவமதிக்காமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கொள்கை இதில் காணப்படுகிறது. கருணையைக் கடவுள் வடிவமாகப் போற்றுகிறது. நீதியை நிலைநாட்டத் தவறுபவனை கோழை என்று இகழ்கிறது. அன்பு காட்டுபவன் இல்லத்துக்கு அழைக்காமலேயே செல்லும் உயரிய வழக்கத்தை ஷிண்டோ மதம் கொண்டுள்ளது. வானத்தை உங்கள் தந்தையாகக் கருதுங்கள், பூமியை உங்கள் தாயாக நேசியுங்கள், மற்ற அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளாக நினையுங்கள். அப்போது துவேஷம், துன்பம் போன்றவற்றில் இருந்து இன்பம் என்னும் மோட்சத்தை அடைய முடியும் என்று போதிக்கிறது இம்மதம்.
தமிழர்கள் மதத்தைப் போலவே மனிதனும் தெய்வமாகலாம் என்று ஷிண்டோ மதமும் உபதேசிக்கிறது. அற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் பட்டியலிடுகிறது.
1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களின் சொற்படிக் கேட்டு நடக்க வேண்டும்.
2. விவேகத்துடன் மட்டும் இல்லாமல் விவுவாசத்தோடும் பணியாற்ற வேண்டும்.
3. எப்போதும், எந்த இக்கட்டான நிலையிலும் நேர்மை தவறவே கூடாது.
4. பொய்மையை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும்.
5. நன்றாகக் கற்று அறிவைப் பெருக்கி ஞானத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
6. தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.
இவற்றைக் கடைப்பிடித்தால் கடவுள் அம்சத்தை அடைந்து தெய்வத்திற்கு நிகராக மாற முடியும் என்கிறது ஷிண்டோயிசம்.
பண்டைய காலத்தில் இது அரசர்களால் அங்கீகாரம் பெற்ற மிகப் பெரிய மதமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை ஜப்பானின் முதன்மை பெற்ற மதமாக விளங்கிய இது பின்னர் தனது செல்வாக்கை இழந்துவிட்டது. சிவலிங்கத் திருவுருவத்திற்கு பெருமதிப்புத் தரும் இம்மதத்தை சுமார் ஐந்தே கால் கோடிப் பேர் பின்பற்றி வருகின்றனர். இம்மதம் இந்து மதத்தைப் போலவே பல கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. கடவுள்களை இவர்கள் ‘காமி” என்கின்றனர். நாம் தமிழில் ‘சாமி’ என்று அழைப்பதை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இறந்த பின்னர் மனிதர்கள் ஒவ்வொருவரும் ‘சாமி’ ஆகிவிடுகிறார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. மிருகங்களை கடவுளின் தூதர்களாக நம்பும் இவர்கள், மலை, காற்று, உணவு போன்ற அனைத்தையுமே கடவுள் என்கின்றனர். இயற்கையைக் கடவுள் என்று வழிபடும் இவர்கள் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்று நம்புகிறது. இந்துக்கள், கடவுள் தூணிலும் உருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவதை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம். ஜப்பானில் பரவலாக ஷிண்டோ கோயில்கள் காணப்படுகின்றன. அதன் நுழைவாயிலில் வித்தியாசமான தோரி என்று அழைக்கப்படும் ஒரு விதமான கதவு உள்ளது.
கடவுளும், பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதான் நம்பிக்கை ஜப்பானியரிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்து ஆவிகளை வணங்கி இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். தங்கள் மூதாதையர்கள், மன்னர்களை கடவுகளுக்கு இணையாக வணங்கிப் போற்றுவது உண்டு. அதாவது இவர்களை ‘சாமி’ என்றே வழிபடுகின்றனர். ஷின்டோக்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுத்தம், தூய்மை. எனவே எப்போதும் இவர்களின் கோயில்கள் சுத்தமாகவே இருக்கும். இங்கு செல்லும் போது கைகளையும், வாயையும் நன்றாகக் கழுவிய பிறகே செல்ல வேண்டும்.
இதற்காகக் கோயிலின் முகப்பில் ஒரு தொட்டி நிறைய நீர் நீரப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள தொண்டி மூலம் கை, கால்களை கழுவிக் கொள்கின்றனர். பின்னர் அந்த நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். ஷின்டோ கோயில்களில் சிறப்பான ‘சாமிக்கள் நிறைய காணப்படுகின்றனர். புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது இவர்களின் வழக்கம். அதேபோல சங்கடமான துன்பச் சூழல் ஏற்படும் காலக்கட்டங்கலும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள்.
பண்டிகைகள்
ஷின்டோ பண்டிகைகள் மதம். இவர்கள் வருடம் முழுதும் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்,
• ஷோ-கட்சு, அதாவது புத்தாண்டு பண்டிகை-ஜனவரி 1-3
• செட்சுபன், “பிசாசுகளே வெளியே போ, அதிர்ஷ்டமே உள்ளே வா” என்று கூவிக் கொண்டே வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் விதைகளை வீசுவது-பிப்ரவரி 3
• ஹினா மட்சுரி, மார்ச்-3, சிறுமிகளுக்கான பொம்மைப் பண்டிகை
• கோய்-நோபோரி-கெண்டை மீன் கொடிகளை பறக்கவிடும் பண்டிகை மே-5
• ட்சுகிமி-நிலவினை ரசித்துக் கொண்டு, சிறிய வட்ட வடிவிலான பலகாரங்களை காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• கண்ணமி-சாய், அக்டோபரில் விளைச்சலின் சாகுபடியை அரசர் காணிக்கையாக செலுத்தும் பண்டிகை
• நிய்யிணமி-புதிதாக விளைந்த நெல்லை அரச குடும்பம் ருசி பார்க்கும் பண்டிகை நவம்பர்
• ஷிச்சி-கோ-சான், இதன் பொருள் ஏழு-ஐந்து-மூன்று, வண்ண வண்ண ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்கின்றனர் நவம்பர்-15
புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் மாலையில் இருந்தே மக்கள் கோயில்களுக்கு வந்துவிடுகின்றனர். கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக உள்ளே செல்ல அனுமதிக்ப்படுகின்றனர். கோயிலுக்குள் சென்ற பிறகு வேண்டிய அளவு அங்கேயே இருந்து இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சந்நதிக்கு நேர் எதிரே நெருப்புக் குண்டம் காணப்படுகிறது. அதிலிருந்து வரும் புகையை கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர். கோயிலுக்குள் நிறைந்த அமைதி நிலவும் மதக் குருக்கள் ஒதும், அலய மணியோசை ஒலிக்கும் குரல் மட்டுமே கோயிலுக்குள் கேட்கின்றன. பிறப்பின்போதும், திருமணம் போன்ற முக்கிய விசேட நிகழ்வின்போதும் சடங்குகள் செய்வது ஷின்டோக்களின் வழக்கம். இந்து மதத்திலும் இத்தகைய சடங்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
யூடாடேஷின்ஜி சடக்கு (Yutateshinji ceremony)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_3.jpg)
பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும் காமிகளுக்குப் படையல் செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகள் மூலமும் கெட்ட ஆவிகளை விலக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பழமையான மதங்களுக்கே உரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோ மதத்தில் நிறைய உள்ளன.
நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம், கல்வி, வெற்றிகரமான வியாபாரம் போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்ற பொருட்கள் இவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தங்கள் இல்லங்களில் மாடங்களை அமைத்து வழிபடுவது இவர்களின் வழக்கம். சகுனம் பார்ப்பதும் உண்டு. முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அமர்ந்திருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகின்றனர்.
ஷின்டோ மதத்தை யாரும் உருவாக்கியதாக அறியப்பட வில்லை. இதற்கென வழிகாட்டும் புனித நூல் எதுவும் கிடையாது நேர்மறை சிந்தனை கொண்ட மதமாக விளங்கும் இது, அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே என்றும், கெட்ட ஆவிகளால்தான் தீயவை நடப்பதாகவும் நம்புகின்றனர்.
கோயில்களில் சீட்டுக்கட்டி விடுவது, பொம்பை செய்து வைப்பது போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகள் தமிழர்களிடம் இருப்பதைப் போலவே ஷின்டோ மதத்திலும் உள்ளது. திருஷ்டிப் பூசணி வடிவில் சிகப்பு நிறத்தாலான சிறிய மற்றும் ஆளுயரத்திலான பெரிய பொம்மைகள் விற்பனை ஜப்பானில் பிரசித்தம். கண்கள் மட்டும் வரையப்படாத இந்தப் பொம்மைகளை வாங்கி வந்து, விருப்பத்தை மனதில் நினைத்து, பொம்மைக்குக் கண்களை வரைகிறார்கள். பின்னர் அதைத் தங்கள் வீட்டில் வைத்தால் நினைத்த காரியம் வரும் புத்தாண்டுக்குள் நிறைவேறியதும் இந்தப் பொம்மையை கோயிலில் கொண்டுவந்து வைத்துவிடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள்கிழமை அன்று ‘செஜின் நோ’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இருபது வயதான ஆண்களும், பெண்களும் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் விழா இது. அன்றைய தினத்தில் பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையான கிமோனோவிலும், ஆண்கள் புத்தம் புதிய சூட், கோட் சகிதமாகவும் கோயிலுககுச் செல்வது வழக்கம். ஜப்பானில் உள்ள புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
ஷிண்டோக்களின் கடவுளான காமிகளை புத்தரின் வடிவாகவும் கருதுகின்றனர். ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் புத்தர் கோயிலுகளிலும் நடைபெறுகின்றன. அதேபோன்று புத்த மதம் சார்ந்த திருவிழாக்கள் ஷின்டோ ஆலயங்களிலும் நடை பெறுகின்றன.
தேவைக்கேற்ப மாறுகிறது
பல ஆண்டுகளாக ஷின்டோ மதத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் பண்டிகைகளயும், சடங்குகளையும் அவர்கள் மறந்துவிடவில்லை.
ஜின்குஜி
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/17/Shinto_4.jpg)
புத்த மதப் பரவலில் இரு மதங்களும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதோடு ஜின்குஜி (Jinguji) என்ற கோயில்கள் கட்டப்படுவதற்கு வழி நடத்தியது.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
மத அரசியல்-16: பார்சி மதம்
By C.P.சரவணன் |
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/20/original/parsi_5.jpg)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/20/parsi_god.jpg)
பார்சி மதம் (PARSI)
சொராஸ்டிரியம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக உருவானது என்பர். 17-ஆம் நூற்றாண்டு வரை இந்திய ஜோரோஸ்ட்ரிய உரைகளில் "பார்சி" என்ற சொல் சேர்க்கப்படவில்லை. அச்சமயம் வரையில் அதைப் போன்ற வார்த்தைகளுக்கு நிலையாக ஜர்தோஸ்தி (Zarthoshti), "ஜோரோஸ்ட்ரியன்" (Zoroastrian) அல்லது பெஹ்தின் (Behdin) என்ற இரண்டினுள் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு முறையே "நல்ல இயல்புடைய" அல்லது "நல்ல பிரதேசமுடைய" என்பது பொருளாகும்.
12 ஆம் நூற்றாண்டின் பதினாறு சுலோகங்களில் (Sixteen Shlokas) சமஸ்கிருத வார்த்தையில் பாரிசியர்களைப் பற்றிய வாக்கியங்களும் பின்னர் இந்துக்கள் மூலமாக தெளிவாக எழுதப்பட்டதே (பார்சி புராணக்கதையான cf. Paymaster 1954, p. 8 இல் ஜோரோஸ்ட்ரிய அர்ச்சர்கர்களுக்கு தவறான உரையைக் கற்பிக்கிறது) பண்டைய கால இந்திய ஜோரோஸ்ட்ரியர்களுக்கான அடையாளச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேர்மை, வாய்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறான் இந்த இறைவன் என்பது அம்மதத்தினரின் நம்பிக்கை. உலகில் நல்ல சக்தி என்றும், தீயசக்தி என்று இரு வேறு சக்திகள் இருப்பதாக சொராஸ்டர்கள் நம்புகின்றனர். இவ்விரு சக்திகளுமே இணையான பலம் பொருந்தியவை என்றும், எனினும் தங்களின் நீண்டகால அனுபவத்தில் நல்லசக்தியே இறுதி வெற்றியைப் பெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். தீயசக்தியை ‘அங்ரா மைன்யூ’ என்று அழைக்கின்றனர். நன்மையை ஆதரிப்பதோ, தீமையை ஆதரிப்பதோ அவரவர் விருப்பம் என்று பரிபூர்ண ஜனநாயகத்தைப் பறைசாற்றுகிறது இச்சமயம். மறுவாழ்வு உண்டு என்பதை சொராஸ்டிரியமும் நிச்சயமாக நம்புகிறது.
துறவறம், மணத்துறவு ஆகிய இரண்டையும் இம்மதம் கண்டிக்கிறது. அதற்கு ஆதரவு இங்கே இல்லை. இம்மதப் போதனையைப் பரப்பியபோது சொராஸ்டருக்கு எதிர்பபு அதிகமாக இருந்தது. எனினும் தமது நாற்பதாவது வயதில் போதனையைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க வெற்றி அவருக்குக் கிட்டியது. ஈரான் தேசத்தின் இரு மண்டலத்து மன்னரான விஷ்டபா எனபவரைத் தமது சமயத்திற்கு மாற்றினார். இதன்பின்னர் இம்மன்னர் சொராஸ்டரின் மிக நெருங்கிய நண்பராக மாறினார். ஆத்துடன் சொரியாஸ்டிரிய மதத்தின் பாதுகாவலராக இருந்து மத வளர்ச்சிக்குப் பாடுபட்டர்.
எனினும் இம்மதம் அன்றைய காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பரவியதாக வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சொராஸ்டர் மறைவுக்குப் பிறகு இவர் வாழ்ந்த வடக்கு ஈரான் பகுதிகள் பாரசீகப் பேரரசில் த கிரேட் சைரஸால் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் இம்மதம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினர்கள். எனவே இது அங்கு கொடி கட்டிப் பறந்தது என்றே சொல்லலாம். கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளில் அலெக்சாண்டர் இப்பகுதியை வெற்றி கொண்டதை அடுத்து, இம்மதம் மோசமான வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட அழியும் நிலையை அது அடைந்தது என்பதே உண்மை.
1000 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் 'பார்சி'களின் நெருப்புக் கோயில்
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/20/parsi_1.jpg)
இந்தியாவில் பார்சீக்கள்
1728 ஆம் ஆண்டில் நவ்ரோஸ் (நவ்ரோஜி) பம்பாய் பார்சி பஞ்சாயத்தை நிறுவினார். இதன் மூலம் பார்சியர்களுக்கு புதிதாய் வரும் சமயம், சமூகம், சட்ட மற்றும் நிதி விசயங்களுக்கு உதவியளிக்கப்பட்டன. 18வது நூற்றாண்டின் மத்தியில் மெனெக் செத் குடும்பம் அவர்களது மிகப்பெரிய மூலங்களைப் பயன்படுத்தி அவர்களது நேரம், சக்தி மற்றும் பார்சி சமுதாயத்திற்கு நிதிசார்ந்த மூலங்களின் முக்கியமற்ற தன்மையை கொடுத்தது பார்சியர்களுக்கு பஞ்சாயத்தின் மேல் உள்ள நம்பிக்கையை வளர்த்தது. நகர்சார்ந்த வாழ்க்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சமுதாயத்தின் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் கருவியாகவும் இந்த பஞ்சாயத் அங்கீகரிக்கப்பட்டது.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பார்சியர்கள் "கல்வி, தொழில்துறை மற்றும் சமுதாயம் போன்ற விசயங்களில் இந்தியாவில் முதன்மையாக விளங்கும் மக்களாக இருந்தனர். இயக்கத்தின் வளர்ச்சி, பெருமளவில் திரட்டப்பட்ட அதிர்ஷ்டங்கள் மற்றும் தாராள பண்பு ஆகியவற்றுடன் வந்தது அறப்பணியில் மிகப்பெரிய தொகைகளை அளிக்க வைத்தது". 19 ஆம் நூற்றாண்டிற்கு அருகில் குடியேற்ற இந்தியாவில் உள்ள பார்சியர்களின் எண்ணிக்கை 85,397 ஆகும். அதில் பம்பாயில் மட்டும் 48,507 வசித்தனர். நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் இது 6% ஆகும் .
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/20/parsi_2.jpg)
நவ்ஜோட் சடங்கு
ஒரு நபர் ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் மாறுவதால் மட்டும் பார்சி இனத்தவராக மாறிவிட முடியாது "பார்சி இனத்தவர் பின்வரும் நிலைகளைப் பெற்றிருக்க வேண்டும்:
a) உண்மையான பெர்சிய குடியானவர்களிடம் இருந்து மரபைப் பார்சிகள் பெற்றிருக்க வேண்டும், ஜோரோஸ்ட்ரிய பெற்றோர்கள் இருவருக்கும் பிறந்திருக்க வேண்டும் மற்றும் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றிருக்க வேண்டும்;
b) பெர்சியாவில் உள்ள ஈரானியர்கள் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றுள்ளனர்;
c) வேற்றினத் தாய்க்கும் பார்சி தந்தைக்கும் பிறக்கும் குழந்தை சரியான முறையில் சமயத்தினுள் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்"
ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் ஏற்றுக்கொள்வதற்கான சடங்கு நவ்ஜோட் சடங்கு ஆகும்.
கலாச்சாரம்
இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.
பார்சி நாட்காட்டி
1745 ஆம் ஆண்டில் சூரத்தை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த பார்சியர்கள் அவர்களது மதகுருக்களின் பரிந்துரையின் பேரில் கட்மி அல்லது கடிமி நாட்காட்டிக்கு மாறினர். பண்டைய காலத்தில் 'தாயகத்தில்' பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியே சரியானது என அவர்கள் தங்களது மக்களை நம்பவைத்தனர். மேலும் அவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியை "முடியரசுக் கோட்பாடு சார்ந்திருப்பதாக" பேசினர்.
1906 ஆம் ஆண்டில் இரண்டு வகைகளையும் ஒன்றாக மூன்றாவதாக ஒரு நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் முயற்சி நடந்தது: ஃபாஸிலி , அல்லது பாஸ்லி நாட்காட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் வரும் மிகுந்த நாட்களைக் கொண்டிருந்தது. மேலும் இளவேனிற் புள்ளியுடைய தினத்தில் புத்தாண்டும் அனுசரிக்கப்பட்டது. பருவங்களுடன் இணக்கமான நாட்காட்டியாக எப்போதும் இது மட்டுமே இருந்தாலும் பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் இதை புறக்கணித்தனர். இது ஜோரோஸ்ட்ரிய மரபை கட்டளைகளுடன் வெளிப்படுத்துவதாக இருந்தது.
இன்று பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியின் பார்சி பதிப்பையே கடைபிடிக்கின்றனர். சூரத் மற்றும் பவுரச்சில் வாழும் பல பார்சி சமுதாயத்தினர் கட்மி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றனர். ஃபாஸ்லி நாட்காட்டி பார்சி இனத்தவர்கள் பலருள் முக்கிய இடம் பிடிக்கவில்லை. ஆனால் தரத்தில் பாஸ்தானி நாட்காட்டியை (பாஸ்லி நாட்காட்டியாக அதே சிறப்புடைய ஈரானிய உருவாக்கம்) ஒப்பிடுகையில் ஈரானின் ஜோரோஸ்ட்ரியர்கள் பலருள் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜாஷன் சடங்கு ( jashan or jashne Ceremony)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/20/parsi_3.jpg)
இச்சடங்கால் இல்லம் தூய்மையாகிறது என்று பார்சீக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இலிம்-இ-ஷ்னோம் (Ilm-e-Kshnoom)
இலிம்-இ-ஷ்னோம் என்பது 'பரவச அறிவியல்' அல்லது 'பேரின்பம்' பொருளாகும். இதுசமயம் சார்ந்த நூல்களின் பொருள் விளக்கத்தைக் காட்டிலும் இரகசியம் மற்றும் மறைபொருளாகக் கற்பவை சார்ந்த பார்சி-ஜோரோஸ்ட்ரிய தத்துவப் பள்ளியாகும். சமய உட்பிரிவு ஆதரவாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாஹேப்-இ-திலான் அதாவது 'இதயத்தின் குருக்கள்' என அழைக்கப்படும் 2000 தனிநபர்களின் இனம் மூலமாக காக்கப்பட்ட ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையின் ஆதரவாளர்கள் ஆவர். அவர்கள் காகசஸின் (Caucasus) மலைகள் நிறைந்த சரிவுகளில் முழுவது தனித்து வாழ்பவர்கள் ஆவர் பார்சியர்கள் ஷ்னோமைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம் என்று சில தெளிவான குறிப்புகளும் உள்ளன. குஸ்தி இறைவழிபாடுகள் பாஸாலி கள் மூலம் பயன்படுபவை போன்றே இருந்தாலும் பார்சி சமுதாயத்தில் எஞ்சியவர்கள் ஷ்னோம் ஆதரவாளர்கள் என அவர்கள் அனுசரிக்கும் நாட்காட்டியுடன் தொடர்புபடுத்தி பிரித்தரியப்படுகின்றனர். நீண்ட இறைவழிபாடுகளில் சில பிரிவுகளை மீண்டும் கூறுதல் போன்ற பொது வழிபாட்டுமுறையில் அவர்களது ஒப்புவித்தலில் சிறிது மாறுபாடுகளும் உள்ளன. எனினும் ஷ்னோம் அவர்களது கொள்கையில் மிகவும் பழமையானதாக உள்ளது. மேலும் பிற பார்சியர்களுக்கு தொடர்புபடுத்துவதுடன் தனித்திருத்தலையும் தெரிவிக்கிறது.
பம்பாயின் புறநகர் பகுதியான ஜோகேஷ்வரியில் ஷ்னோம்களின் ஆதரவாளர்களின் மிகப்பெரிய சமுதாயம் வாழ்கின்றனர். அங்கு அவர்களுக்கு என சொந்தமாக தீ கோவிலும் (பெஹ்ராம்ஷா நவ்ரோஜி ஷெரோஃப் தாரேமெஹர்), குடியிருப்பு வசதிகளும் (பெஹ்ரம் பாக்), செய்தித்தாளும் (பார்சி புக்கர் ) உள்ளன. சூரத்தில் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இங்கு சமய உட்பிரிவு நிறுவப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தல்
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/20/parsi_4.jpg)
கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி
இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன. பருந்துகளைப் பார்க்கவே முடிவதில்லை. அருகிப் போய் விட்டது. இதனால் உடல்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர் பார்சி சமூகத்தினர்.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
மத அரசியல்-17: பஹாய் மதம்
By C.P.சரவணன் |
![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/24/original/bahai.jpg)
1844-ஆம் ஆண்டு பாரசீக நாட்டில் உதித்த பஹாய் மதம் இன்றைய அளவில் வேறு சில நாடுகளிலும் பரவியிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இதை பின்பற்றி வருகின்றனர்.
பகாவுல்லா (Bahá'u'lláh)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/24/bahai_1.jpg)
பகாவுல்லா
பகாவுல்லா, நவம்பர் 12, 1817 அன்று பிறந்தவர். பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் “மிர்சா உசேய்ன் அலி”. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்துல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.
முறையாகக் கல்வியறிவு பெறவில்லை என்றாலும், சமயப் பெருமக்களின் வழியாக இறையறிவை நிரம்பப் பெற்றார். பதினெட்டு வயதில் திருமணம் நடந்து, பல குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். 1844ஆம் ஆண்டு ஷிராஸ் நகரில் சயீத் அலி முகமது என்றும், பாப் என்றும் அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தன்னை கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். தமக்குப் பின்னால் வரப்போகும் இறைத்தூதரின் வருகையை அறிவிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்தார். இந்த பாப் என்பாரை பஹாவுல்லா தாமே முதலில் அறிந்து ஏற்றுக்கொண்டார்.
இதனால் அங்கு மிகப் பெரிய கிளர்ச்சிகள் நடைபெற்று 750 ராணுவ வீரர்களால் பாப் மரண தண்டனையை அடைந்தார். இவர்களுடன் சேர்ந்து பஹாவுல்லாவும் கைது செய்யப்பட்டு டெஹ்ரான் நகரில் பிரசித்தி பெற்ற சிய்யாச்சால் என்னும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளானார்.
அச்சிறையில் பஹாவுல்லாவிற்கு அவருடைய உயர்ந்த ஸ்தானத்தை இறைவன் அறிவித்தார். இறைவனைப் பல நேரங்களில் பலவிதமாகவும் உணர்ந்தார். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பஹாவுல்லா பாக்தாத் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்தும் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட அவர், இறுதியில் தற்போதைய பாலஸ்தீனத்திலேயே பெரும்பாலான நாட்களைக் கழித்தார்.
1863-ஆம் ஆண்டு துருக்கிக்குச் செல்லும் வழியில் டைகிரிஸ் நதிக் கரையில் ரித்வான் என்னும் பூங்காவில் பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் முதன்முதலாகத் தன்னை இறைவனின் அவதாரம் என்று பகிரங்கமாக அறிவித்தார். உலகில் இனி கடவுளின் ஆட்சியே நடக்கும் என்றும் நம்பிக்கையோடு அழுத்தமாகத் தெரிவித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் பஹாவுல்லாவின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. ‘உலக ஒற்றுமைக்காக உழைக்குமாறும், மக்கள் தங்கள் இஷ்டம்போல் நடந்தால் அழிவும் அராஜகமுமே மிஞ்சும் என்றும் எச்சரித்தார். நிறைய எழுதினார் போதித்தார். இவற்றை அனைத்தும் தொகுத்தால் நூறு நூல்கள் கிடைக்கும். பெரும்பாலானவை மொழியாக்கம் செய்யாமல் இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
பஹாய் நம்பிக்கை
உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையைவிட இனிமையான ஒன்று வேறெதுவும் இல்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நிஐலதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்னை என்பது இறைவனுடன் உரையாடல் செய்வதாகும். மிக உயர்ந்த நிஐலயை அடையவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவதுதான். அது ஆன்மீகத்தை தோற்றுவிக்கிறது. தெய்வீக உணர்வுகளையும் விழிப்புணர்ச்சியையும் தோன்றுவிக்கிறது. மேலுலக ராஜ்யத்தின் புதிய கவர்ச்சியை பெற்றுத்தருகிறது. சிறந்த மதிநுட்பத்தை நமக்கு மிகவும் எளிதில் ஏற்படுத்துகிறது.
கடவுளின் நாமம் மொழியப்பட்டு அவரது புகழ் பாடப்படும் ஸ்தலமும், இல்லமும் இடமும், நகரமும், இதயமும், மலையும் புகலிடமும், குகையும், பள்ளத்தாக்கும், தேசமும், கடலும், தீவும், புள்வெளியும் ஆசிபெற்றதாகும்.
பஹாய் புனித நூல்
பஹாய் சமயத்தின் புனித நூலாக கித்தாப்-இ-அக்தாஸ் (Kitab-i-Aqdas) விளங்குகிறது.
பாலஸ்தீனத்தின் கடற்கரை நசகரமான ஆக்கோ சிறையில் அடைக்கப்பட்ட பஹாவுல்லா, பின்னர் அங்குள்ள மாஸ்ராயே என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்க்பட்டார். அங்கேயே தனது கடைசி காலம் வரைக் கழித்தார். 1892-ஆம் ஆண்மு மே மாதம் 29-ஆம் தேதி அன்று அதிகாலை பஹாவுல்லா இறைவனடி சேர்ந்தார்.
அதன்பிறகு பஹாவுல்லாவின் விருப்பமத்திற்கு இணங்க அவரது மகன் அப்துல் பஹா இச்சமயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் பஹாய் மதம் இரண்டாவது பெரிய மதமாக இன்றளவும் இருந்தது வருகிறது.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/24/bahai_2.jpg)
பஹாய் தலைமையகம்,இஸ்ரேல்
மனித ஒற்றுமை, உண்மையை தனித்துவமாக ஆய்வு செய்தல், சமயங்கள் அனைத்தும் ஒன்றே, சமயமும், அறிவியலும் ஒன்றோடொன்று ஒத்துழைத்து இயக்க வேண்டும், ஆண் - பெண் சமத்துவம் அவசியம், துவேஷங்களை நீக்க வேண்டும், உலகளவில் கட்டாயக் கல்வி அவசியம் என்பன போன்ற சமூக நியதிகளை உள்ளடக்கியதாக பரிமளிக்கிறது பஹாய் மதம்.
தாமரைக் கோயில் (Lotus temple)
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/24/bahai_3.jpg)
தாமரைக் கோயில் என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய் கோயிலாக கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் உலக அமைதியைக் கண்டிப்பாக வலியுறுத்துகிறது இம்மதம்.
![](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/9/24/bahai_4.jpg)
பகாவுல்லா நினைவாலயம், இஸ்ரேல்
பஹா ஹுல்லா பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மே 29, 1892 அன்று மறைந்தார்.
தொடரும்...
C.P. சரவணன், வழக்கறிஞர் 9840052475
No comments:
Post a Comment