audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, July 6, 2021

அந்த நாள் பாடசாலை பருவ நினைவுகளிலிருந்து

கோவாலு மேய்ச்சலுக்காக தனது மாட்டை அருகிலுள்ள வளவு ஒன்றினுள் கட்டி வைப்பது வழக்கம். தினமும் குறித்த வளவில் காலையில் மாட்டை கட்டி வைத்துவிட்டு மாலையில் அவிழ்த்து விடுவார். இவ்வாறாக ஒரு நாள் பொழுது சாய்ந்ததும் மாட்டை அவிழ்ப்பதற்கு சென்ற கோவாலுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மாட்டை கட்டி வைத்த கட்டையில் அறுந்து போன கயிறு மட்டுமே இருந்தது, மாட்டை காணவில்லை. வீடு திரும்பிய நம் கோவாலு நடந்த விடயங்களை தன் மனைவியிடம் கூற...
"இஞ்சருங்களன், பேசாம 119க்கு கோள் ஒண்டு அடிச்சி கேளுங்களன்.."
கோவாலு தன் நோக்கியா 1100 போன் பட்டன்களிலுள்ள அழிந்து போன நம்பர்களை ஒருவாறாக தேடுப்பிடித்து 119க்கு கோள் அடிக்கிறார். கோவாலு சுழற்றிய இலக்கம் தவறானதால்..
"கருணாகர பசுவ அமத்தன்ன.." என்ற பதில் வந்தது.
"அடியேய்.. பக்கத்து வீட்டு கருணாகரன் தான் மாட்ட அமத்திட்டானாம்டி.. ஒரு பொலிசுகார பொம்புள கதைக்காள்.."
எனவே முறைப்பாடு செய்வதற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சிட்டாக பறந்தார் நம் கோவாலு. பொலிஸ் நிலையத்தில் இருக்கும் சிங்கள காவலருக்கு மருந்திற்கும் தமிழ் தெரியாது. நம்ம கோவாலுக்கு சுட்டு போட்டாலும் சிங்களம் வராது. இருவரும் எவ்வாறு பேசிக்கொள்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
"சேர்.. சேர்.. ச்ச.. ச்ச.. மாத்தையா மாத்தையா, எண்ட மாட்ட காணல மாத்தையா..."
"மொக்கத??"
"மொக்கு கட்டையில தான் மாத்தையா கட்டி போட்ட நான்.. இப்ப பாத்தன் காணல... கருணாகரன் தான் களவெடுத்து போய்ட்டான் மாத்தையா.."
"கவுத..??"
"நல்ல நைலோன் கவுத்துல தான் மாத்தையா கட்டி போட்ட நான்.."
"பிசுத..??"
"ஓம் மாத்தையா... கவுத்த பிச்சிட்டு தான் போயிருக்கு.."
**

No comments:

Post a Comment