audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

புத்தம் சரணம் கச்சாமி



புத்தம் சரணம் கச்சாமி


நேபாள நாட்டின் தலைநகரான கபிலவஸ்துவில் (தற்போது லும்பிணி என்ற பெயர்) சாக்கிய இனத்தின் தலைவரான சுத்தோதனர் மற்றும் மாயாதேவிக்கு மகனாக புத்தர் அவதரித்தார்.

நேபாள நாட்டின் தலைநகரான கபிலவஸ்துவில் (தற்போது லும்பிணி என்ற பெயர்) சாக்கிய இனத்தின் தலைவரான சுத்தோதனர் மற்றும் மாயாதேவிக்கு மகனாக புத்தர் அவதரித்தார். அவருக்கு தாய் தந்தையர் சூட்டிய பெயர் சித்தார்த்த கெளதமர் . அவர் பிறந்த ஏழாம் நாளில் தாய் மாயாதேவி இறந்ததால் அவரது சிற்றன்னை மகாபிரஜாபதி கெளதம புத்தரை துன்பத்தைக் காட்டாமல் வளர்த்தார். கெளதமர் பிற்காலத்தில் ஒரு மகானாக வருவார் என அவரது குழந்தைப்பருவத்தில் ஒரு ஞானி கூறியதால்; அவரது தந்தை புத்தரை வெளியுலகிலுள்ள கஷ்டம், உழைப்பு, மனஅழுத்தம் போன்றவைகளை காண்பிக்காமல் தன் அரண்மனையிலேயே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து செல்வச்செழிப்போடு வளர்த்து வந்தார். அவரது 16-ஆவது வயதில் யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்து; அதன் பலனாக ராகுலா என்ற மகன் பிறந்தார். ராஜவாழ்க்கை சலித்தது. ஒருமுறை தன் உதவியாளருடன் வெளியில் சென்று பார்த்து வரலாமே என்று சென்றபோது ஒரு வயதான தள்ளாடும் கிழவர், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம் ஆகியவற்றையும் நான்காவதாக ஒரு முனிவரையும் பார்த்தார்.

இவைகளில் முதல் மூன்று நிகழ்வுகள் (மூப்பு, பிணி, மரணம்) மூலம் வாழ்க்கையின் துன்பம் மற்றும் மக்கள் படும் துயர்களை கண்டார். நான்காவதாக அந்த முனிவரை கண்டதும் அவரின் அமைதியினை ரசித்தார். உலகில் ஏதும் நிரந்தரமில்லை; அதனால் அமைதி மட்டுமே தன் பாதை எனத்தெரிந்து கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறினார். அவர் துறவினை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை. வாழ்க்கையின் பொருள் என்னவென்பதை அறியவேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருந்தது. பின்னர் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு கடும் விரதங்களுடன் கூடிய தவத்தினை மேற்கொண்டார். அப்போது அவருக்கு சில சீடர்கள் உருவானார்கள்.

ஒருநாள் ஓர் இசைக்கலைஞன் அவரைக் கடந்து சென்றார். அவரைப்பற்றி தன் சீடனிடம் கேட்டார். பதிலாக அவரது சீடர் “அக்கலைஞன் மீட்டும் யாழின் இசை கேட்பதற்கு மிகவும் இனிமையானது; அதன் தந்தியின் நாணை இழுத்துக்கட்டினால் அது அறுந்து விடும்; அதுபோல் தொய்வாகக்கட்டினால் நாதம் வராது என்றார். இதன் மூலம் ராஜவாழ்க்கை வாழ்ந்து நாம் உடலை வருத்தி தவம் செய்வதால் மனம் ஒரு நிலைப்படாது; அத்துடன் தம் சீடர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படுவதால்; இங்கிருந்து தவம் செய்தால் நமக்கு விடை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். முடிவு தேடி சுமார் 250 கி.மீ. தூரமுள்ள புத்தகயாவிற்கு (இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ளது) கால் நடையாக பயணித்து வந்தடைந்தார்.

ஆசையை துறந்து அங்குள்ள போதி மரத்தடியில் அமர்ந்து தனியாய் தவத்தில் அமர்ந்தார். ஞானோதயம் கிட்டியது. புத்தர் ஆனார்.புத்தர் தன்னை ஒரு அவதாரம் என்றோ, தேவன் என்றோ ஒருபோதும் சொன்னதில்லை. இப்பூவுலகில் பிறந்த மானிடர் அனைவரும் புத்த நிலையை அடைய முடியும், ஆசையே துன்பத்தின் அடிப்படை; கொல்லாமை, பொய் சொல்லாமை, ஆசையை விட்டொழித்தல் போன்ற அறிவுரைகளை தன் சீடர்களுக்கு போதித்தார். மஹா நிர்வாணம் அவரது சித்தாந்தம் ஆகும். கடவுள் மற்றும் வேதங்களை மறுக்காமலும் எந்த விமர்சனங்களும் சொல்லாமல் அது குறித்து பேசாமல் விட்டுவிட்டார்.

நேபாள நாட்டின் எல்லையில் இந்தியாவின் பக்கம் சுனோலி என்ற ஊரும்; அந்த பக்கம் நேபாள நாட்டின் ஆரம்பம் பைரவா என்ற ஊரும் உள்ளது.ரவாவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் லும்பிணி என்ற புத்தர் பிறந்த ஊர் உள்ளது. அங்கு ஒரு புத்த விகாரம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், புத்தர் பிறந்த இடமாய் உள்ளது. பெளத்தர்களுக்கு இந்த லும்பிணி புனிதமானது. இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங் முதலிய நாடுகளிலிருந்து ஏராளமான புத்தமத அன்பர்கள் வந்து மெளனமாக தரிசித்து பின் வெளியிலுள்ள புல்தரையில் தியானத்தில் அமர்ந்து விடுகிறார்கள். அவர் ஞானம் பெற்ற புத்த கயாவில் பல்வேறு நாட்டினர் தன் நாட்டின் கட்டடக் கலை அம்சத்துடன் கூடிய புத்த விகாரங்களை (கோவில்களை) தன் சொந்த செலவில் நிர்மாணித்துள்ளார்கள்.

இவை அனைத்தின் சிறப்பம்சமாக, புத்தர் ஞானம் பெற்ற 170 அடி உயரம் கொண்ட மகாபோதிக்கோயில் இங்கு உள்ளது. அந்த கோயிலுக்குப் பின்புறம் பெரிய போதி மரம் ஒன்றுள்ளது. அந்த இடத்தை சுற்றி வேலி போட்டு வைத்துள்ளது. இங்கு தான் புத்தருக்கு ஞானம் பிறந்தது. புத்த மதத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு புனிதத்தலங்கள்; லும்பிணி, புத்தகயா, குஷினகர் மற்றும் சாரனாத் ஆகும். இவற்றில் புத்தகயா முதன்மையானதும், மிகவும் பிரசித்தி பெற்றதும் ஆகும். தென் இந்தியாவில் பெளத்த மதம் பரவி இருந்ததால் புத்தரின் உருவத்தை சிற்பமாகவோ, ஓவியமாகவோ, கோயில்களாகவோ இருந்து வந்ததை வரலாறு கூறுகிறது.

பெளத்த மதத்தினருக்குபுத்தம் சரணம் கச்சாமி (புத்தரிடம் சரணாகதி அடைதல்)தர்மம் சரணம் கச்சாமி (தர்மத்திடம் சரணாகதி அடைதல்) சங்கம் சரணம் கச்சாமி (புத்த சங்கத்திடம் சரணாகதி அடைதல்)இந்த மூன்றும் மூல மந்திரம் ஆகும். புத்தரின் பிறந்த நாள் திபெத்திய காலண்டர்படி 8 ஏப்ரல் 563 கி.மு. ஆகும். லீப் வருடங்களை கணக்கில் கொண்டு சில வருடம் ஒரு நாள் முன்/பின் வரும்; அதுபோல் இவ்வருடம் மே மாதம் 7-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்த ஜெயந்தி நன்னாள் அமைகின்றது.

மெளனம் மற்றும் பொறுமையின் மூலம் தற்போது உலகில் நிலவும் இடர்பாடான சூழ்நிலையில் மனச்சாந்தியடைந்து மீண்டெழ அந்த புண்ணியர் “போதி தந்த புத்தரை வணங்குவோம் நன்மை பெறுவோம். “
புத்தம் சரணம் கச்சாமி!


Buddhs in Ladakh,Kashmir

ச.நாகராஜன்

புத்தம் சரணம் கச்சாமி

ஆரம்ப காலத்தில் புத்தர் ஒரு நிலையான இடத்திலும் தங்கவில்லை. நாடு முழுவதும் சுற்றியவாறே தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் அவர் உபதேசிக்கத் தொடங்கவே அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் அவருடன் அனைத்தையும் துறந்து சென்றனர். மரத்தடியில் படுக்கை, கிடைத்த இடத்தில் பிக்ஷை, இவற்றைக் கொண்டு அவர்கள் புத்தரின் போதனைகளை மனதில் கொண்டு அவற்றைப் பின்பற்றலாயினர்.

புத்தர் அனைவருமே புத்தராகலாம் என்றார். புத்தர் என்பது ஒரு நபரைக் குறிப்பதில்லை. புத்தத்வத்தைக் குறிப்பிடுகிறது. அந்த நிலையை அனைவரும் எய்தலாம் என்பதே புத்தரின் அருளுரை. புத்தரை ஆஸ்ரயமாக அண்டினோர் மூன்றை சரணடைந்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

புத்தம் சரணம் கச்சாமி!

புத்தரை சரணமாக அடைந்தனர்

தம்மம் சரணம் கச்சாமி

புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

சங்கம் சரணம் கச்சாமி

புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.

நாளாக நாளாக துறவிகளாக விரும்புவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகப் பெருகியது. அப்போது உண்மையாக புத்த நெறியில் நடக்க விரும்புபவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கடுமையான சட்ட திட்டங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே அவை இயற்றப்பட்டன.

புத்தரின் மகத்தான இன்னொரு பணி பெண்களைப் பற்றியது.அவர்களும் இறை நிலையை அடைய முடியும் என்ற அவரது உபதேசம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக்ஷுணிகள் ஆக பெண்களும் முன் வந்தனர். கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றனர்.


Picture of Buddha at bamiyan wich was destroyed by the Afgan terrorists.

ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது சுலபம் இல்லை என்ற நிலை உருவாகி அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்றோம், மடத்தினுள் நுழைந்தோம், புத்த துறவியாகி விட்டோம் என்று எவராலும் ஒரு நாளும் சொல்லி விட முடியாது- இன்றளவும் கூட.

குருகுல வித்யா

வேத காலத்தில் குருகுலங்கள் இருந்தன. சிஷ்யர்களை குரு நன்கு பரிசோதிப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் அவருக்கு சிக்ஷ்ருஷை எனப்படும் பணிவிடைகளைச் செய்வர். குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பர். வித்தையும் ஞானமும் அவர்களுக்குத் தானே வரும்!

மஹரிஷி ஆருணியின் வரலாறு

உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

அயோத தௌம்யர் என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு உபமன்யு,ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு நாள் அயோத தௌம்யர் தனது சிஷ்யரான ஆருணியை நோக்கி,”ஆருணி, நீ போய் கழனிக்கு வருகிற வாய்க்கால் உடைப்பை அடை” என்று கட்டளையிட்டார்.

ஆருணியும் தனது ஆசார்யரின் கட்டளையை சிரமேற்கொண்டு கழனியை நோக்கிச் சென்றார்.அங்கே அவரால் உடைப்பை சாதாரண வழிகளின் மூலம் அடைக்க முடியவில்லை. குருவின் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆதங்கமும் ஆர்வமும் சிரத்தையும் அவரை உந்தவே என்ன செய்வது என்று யோசிக்கலானார். கடைசியில் அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது.

உடைப்பு இருந்த இடத்தில் தன் உடலை அடைத்து இப்படியே இருப்பேன் உடைப்பு அடைபட்டுப் போயிற்று என்று சொல்லி அப்படியே இருக்கலானார்.

இதனால் தண்ணீர் வெளியேறாமல் மடை அடைபட்டது.

நேரம் சென்றது. அயோத தௌம்யருக்கு ஆருணியின் நினைவு வரவே, ஆருணி எங்கே என்று தன் சிஷ்யர்களை நோக்கிக் கேட்டார். அவர்கள், “குருவே! நீங்கள் தான் அவரை கழனியில் வாய்க்கால் உடைப்பை நிறுத்தும்படி அனுப்பி இருக்கிறீர்கள்” என்று கூறினர்.

தௌம்யருக்கு ஆருணியை அனுப்பியது ஞாபகத்திற்கு வரவே, “வாருங்கள், ஆருணி இருக்கும் இடத்திற்குப் போவோம்” என்று சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார். அங்கே சென்றதும் தௌம்யர், ‘குழந்தாய்,ஆருணி! நீ எங்கே இருக்கிறாய்’? இங்கே வா!”என்று கூவினார்,

“இதோ இங்கே இருக்கிறேன்” என்று பதில் சொன்ன ஆருணி மடையிலிருந்து வெளியே வந்தார்.”இதோ இந்த வாய்க்கால் உடைப்பை அடைப்பதற்காக இங்கே இருந்தேன். வேறு எந்த உபாயமும் எனக்குத் தெரியாததால் இங்கேயே இதில் பிரவேசித்து உடைப்பை அடைத்தேன்” என்றார் ஆருணி.

நடந்ததைப் புரிந்து கொண்ட அயோத தௌம்யர் ஆருணியை நோக்கி, “ நீ இவ்வாறு எழுந்ததிலிருந்து மடை திறக்கப்பட்டபடியால் உனக்கு இனிமேல் பிளக்கிறவன் என்ற பொருள் உடைய உத்தாலகர் என்ற பெயர் உண்டாகக் கடவது! அந்தப் பெயர் குருவாகிய என்னுடைய அனுக்ரஹத்தைப் பறை சாற்றும் ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்று மனமகிழ்ந்து கூறினார். மேலும்,” நீ என்னுடைய கட்டளையை சிரமேற்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறபடியால் சர்வ மங்களத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் அனைத்து சாஸ்திரங்களும் உன்னிடம் பிரகாசித்து விளங்கும்” என்று ஆசீர்வதித்தார்.

ஆருணி தவத்திலும் ஞானத்திலும் சிறந்த பெரும் மஹரிஷியானார்.

இது போன்ற குரு அனுக்ரஹத்தால் உயர்ந்த சிஷ்யர்களை வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.

இதே குரு – சிஷ்ய உறவு புத்தமதத்திலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இன்றளவும் தொடர்கிறது.

உதாரணத்திற்கு இன்று புத்தமதத்தில் தலை சிறந்து விளங்கும் ஒருவரது வரலாற்றைப் பார்ப்போம்.

இது அவராலேயே தீர்க்கமாக எழுதப்பட்ட ஒன்று. ஆர்வத்தைத் தூண்டி விழிகளை வியப்பால் விரிய வைக்கும் ஒன்று!
சின்ன உண்மைபௌத்தர்கள் கோவிலுக்குத் தங்களால் முடிந்த எந்த நேரத்திலும் போகலாம். பௌர்ணமியில் சென்று வழிபடுவதைச் சிறப்பாகக் கொள்கின்றனர்.


இது புத்த மதம் தொடர்பான கட்டுரைகளில் நாலாவது கட்டுரை. ஏற்கனவே 3 பகுதிகள் வெளியாகின. நிலாசாரல்.காம்– இல் வெளியானது.
புத்தம் சரணம் கச்சாமி!


Buddhs in Ladakh,Kashmir

ச.நாகராஜன்

புத்தம் சரணம் கச்சாமி

ஆரம்ப காலத்தில் புத்தர் ஒரு நிலையான இடத்திலும் தங்கவில்லை. நாடு முழுவதும் சுற்றியவாறே தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் அவர் உபதேசிக்கத் தொடங்கவே அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் அவருடன் அனைத்தையும் துறந்து சென்றனர். மரத்தடியில் படுக்கை, கிடைத்த இடத்தில் பிக்ஷை, இவற்றைக் கொண்டு அவர்கள் புத்தரின் போதனைகளை மனதில் கொண்டு அவற்றைப் பின்பற்றலாயினர்.

புத்தர் அனைவருமே புத்தராகலாம் என்றார். புத்தர் என்பது ஒரு நபரைக் குறிப்பதில்லை. புத்தத்வத்தைக் குறிப்பிடுகிறது. அந்த நிலையை அனைவரும் எய்தலாம் என்பதே புத்தரின் அருளுரை. புத்தரை ஆஸ்ரயமாக அண்டினோர் மூன்றை சரணடைந்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

புத்தம் சரணம் கச்சாமி!

புத்தரை சரணமாக அடைந்தனர்

தம்மம் சரணம் கச்சாமி

புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

சங்கம் சரணம் கச்சாமி

புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.

நாளாக நாளாக துறவிகளாக விரும்புவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகப் பெருகியது. அப்போது உண்மையாக புத்த நெறியில் நடக்க விரும்புபவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கடுமையான சட்ட திட்டங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே அவை இயற்றப்பட்டன.

புத்தரின் மகத்தான இன்னொரு பணி பெண்களைப் பற்றியது.அவர்களும் இறை நிலையை அடைய முடியும் என்ற அவரது உபதேசம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக்ஷுணிகள் ஆக பெண்களும் முன் வந்தனர். கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றனர்.

Picture of Buddha at bamiyan wich was destroyed by the Afgan terrorists.

ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது சுலபம் இல்லை என்ற நிலை உருவாகி அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்றோம், மடத்தினுள் நுழைந்தோம், புத்த துறவியாகி விட்டோம் என்று எவராலும் ஒரு நாளும் சொல்லி விட முடியாது- இன்றளவும் கூட.

குருகுல வித்யா

வேத காலத்தில் குருகுலங்கள் இருந்தன. சிஷ்யர்களை குரு நன்கு பரிசோதிப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் அவருக்கு சிக்ஷ்ருஷை எனப்படும் பணிவிடைகளைச் செய்வர். குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பர். வித்தையும் ஞானமும் அவர்களுக்குத் தானே வரும்!

மஹரிஷி ஆருணியின் வரலாறு

உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

அயோத தௌம்யர் என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு உபமன்யு,ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு நாள் அயோத தௌம்யர் தனது சிஷ்யரான ஆருணியை நோக்கி,”ஆருணி, நீ போய் கழனிக்கு வருகிற வாய்க்கால் உடைப்பை அடை” என்று கட்டளையிட்டார்.

ஆருணியும் தனது ஆசார்யரின் கட்டளையை சிரமேற்கொண்டு கழனியை நோக்கிச் சென்றார்.அங்கே அவரால் உடைப்பை சாதாரண வழிகளின் மூலம் அடைக்க முடியவில்லை. குருவின் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆதங்கமும் ஆர்வமும் சிரத்தையும் அவரை உந்தவே என்ன செய்வது என்று யோசிக்கலானார். கடைசியில் அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது.

உடைப்பு இருந்த இடத்தில் தன் உடலை அடைத்து இப்படியே இருப்பேன் உடைப்பு அடைபட்டுப் போயிற்று என்று சொல்லி அப்படியே இருக்கலானார்.

இதனால் தண்ணீர் வெளியேறாமல் மடை அடைபட்டது.

நேரம் சென்றது. அயோத தௌம்யருக்கு ஆருணியின் நினைவு வரவே, ஆருணி எங்கே என்று தன் சிஷ்யர்களை நோக்கிக் கேட்டார். அவர்கள், “குருவே! நீங்கள் தான் அவரை கழனியில் வாய்க்கால் உடைப்பை நிறுத்தும்படி அனுப்பி இருக்கிறீர்கள்” என்று கூறினர்.

தௌம்யருக்கு ஆருணியை அனுப்பியது ஞாபகத்திற்கு வரவே, “வாருங்கள், ஆருணி இருக்கும் இடத்திற்குப் போவோம்” என்று சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார். அங்கே சென்றதும் தௌம்யர், ‘குழந்தாய்,ஆருணி! நீ எங்கே இருக்கிறாய்’? இங்கே வா!”என்று கூவினார்,

“இதோ இங்கே இருக்கிறேன்” என்று பதில் சொன்ன ஆருணி மடையிலிருந்து வெளியே வந்தார்.”இதோ இந்த வாய்க்கால் உடைப்பை அடைப்பதற்காக இங்கே இருந்தேன். வேறு எந்த உபாயமும் எனக்குத் தெரியாததால் இங்கேயே இதில் பிரவேசித்து உடைப்பை அடைத்தேன்” என்றார் ஆருணி.

நடந்ததைப் புரிந்து கொண்ட அயோத தௌம்யர் ஆருணியை நோக்கி, “ நீ இவ்வாறு எழுந்ததிலிருந்து மடை திறக்கப்பட்டபடியால் உனக்கு இனிமேல் பிளக்கிறவன் என்ற பொருள் உடைய உத்தாலகர் என்ற பெயர் உண்டாகக் கடவது! அந்தப் பெயர் குருவாகிய என்னுடைய அனுக்ரஹத்தைப் பறை சாற்றும் ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்று மனமகிழ்ந்து கூறினார். மேலும்,” நீ என்னுடைய கட்டளையை சிரமேற்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறபடியால் சர்வ மங்களத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் அனைத்து சாஸ்திரங்களும் உன்னிடம் பிரகாசித்து விளங்கும்” என்று ஆசீர்வதித்தார்.

ஆருணி தவத்திலும் ஞானத்திலும் சிறந்த பெரும் மஹரிஷியானார்.

இது போன்ற குரு அனுக்ரஹத்தால் உயர்ந்த சிஷ்யர்களை வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.

இதே குரு – சிஷ்ய உறவு புத்தமதத்திலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இன்றளவும் தொடர்கிறது.

உதாரணத்திற்கு இன்று புத்தமதத்தில் தலை சிறந்து விளங்கும் ஒருவரது வரலாற்றைப் பார்ப்போம்.

இது அவராலேயே தீர்க்கமாக எழுதப்பட்ட ஒன்று. ஆர்வத்தைத் தூண்டி விழிகளை வியப்பால் விரிய வைக்கும் ஒன்று!
சின்ன உண்மைபௌத்தர்கள் கோவிலுக்குத் தங்களால் முடிந்த எந்த நேரத்திலும் போகலாம். பௌர்ணமியில் சென்று வழிபடுவதைச் சிறப்பாகக் கொள்கின்றனர்.


இது புத்த மதம் தொடர்பான கட்டுரைகளில் நாலாவது கட்டுரை. ஏற்கனவே 3 பகுதிகள் வெளியாகின. நிலாசாரல்.காம்– இல் வெளியானது.

தொடரும்

No comments:

Post a Comment