audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

மத அரசியல் -அத்தியாயம் 11:- அத்தியாயம் (12)


மத அரசியல்-11: இந்தியாவில் இஸ்லாம்

By C.P.சரவணன் |








கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture…. என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments என்ற நூலில் எழுதியுள்ளார்.

கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்கு பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.





சேரமான் பெருமாள்

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபு கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.




சேரமான் தர்கா, ஓமன்

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.





சேரமான் ஜும்மா பள்ளிவாசல், கொடுங்கல்லூர், எர்ணாகுளம், கேரளா

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

References:
1. திருக் குர்ஆன்_IFT வெளியீடு
2. இஸ்லாமியத் தத்துவ இயல்_ராகுல் சாங்கிருத்யாயன்
3. இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்_எம்.என்.ராய்
4. தமிழகத்தில் முஸ்லீம்கள்_எஸ்.எம்.கமால்
5. சேரமான் பெருமாள் தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்_CMNசலீம்



தொடரும்...
_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு : 
_____________________________ 

*சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம்*

சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம் (Zarathustra / Zoroaster) என்ற பெயர் இச்சமயத்தை உருவாக்கிய சாரதுராஷ்டிரர் பெயரால் அமைந்ததாகும். இது உருவாகிய நாட்டின் பெயரால் பார்சி சமயம் என்றும் அழைக்கப்படுகிறது.
*சாரதுஷ்டிர முனிவர்*
பாரசீக நாட்டின் ரே அல்லது ரா என்றழைக்கப்படும் நகரில் அந்நாட்டு இளவரசன் பௌருஷஸ்பா என்பவருக்கும் அவர் மனைவி துக்தொவாவாவுக்கும் சாரதுஷ்டிரர் பிறந்தார். இவர் கி.மு 12-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு 10-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்தார் என்பது சிலர் கருத்து. ஸ்பிதமெ என்பதே சாரதுஷ்டிரருக்கு பெற்றோர் சூட்டிய பெயராகும். 

ஸ்பிதமெ பிறக்கும் போதே பாரசீக கொடுங்கோல் மன்னர்கள் அனைவரும் தீய கனவுகளையும் தீய நிமித்தங்களையும் கண்டு மருட்சியடைந்தனர். அதனால் ஸ்பிதமெவைக் கொல்ல திட்டமிட்டனர். அதனைக் கேள்வியுற்ற பௌருஷஸ்பா குழந்தையை அதன் தாயோடு, அவளது தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அந்நாளைய பாரசீக வழக்கப்படி ஸ்பிதமெ தனது பதினைந்தாம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.  ஆனால் அவரது மனம் இறை சிந்தனையை நோக்கியே சென்றது. அவர் துறவியானார்.

இடைவிடாத தியானத்தில் இருந்தார். அப்பொழுது, கெட்ட ஆவிகளை உண்டாக்கக்கூடிய அங்ரமன்யு (அஹ்ஹிமன்) அவருக்கு பல இடையூறுகளைச் செய்தான். அச்சமயத்தில் ஸ்பிதமெவுக்கு முன்னாஅல் அஹூர மஜ்தா தோன்றினார். அஹுந-வர்யு மந்திரத்தையும் கற்பித்தார். 

மேலும் இறைவன் ஸ்பிதமெவுக்கு தங்க ஒளிமயமான இறகுகள் கொண்ட முதியவனும் பறவையும் கலந்த வடிவமாக காட்சியளித்தார். ஸ்பிதமெவையும் அவ்வாறே மாற்றினார், அன்றிலிருந்து சாரதுராஷ்டிர முனிவர் என்று அழைக்கப்பட்டார்.

சாரதுராஷ்டிர முனிவர் பாரசீகம் முழுதும் வீடு வீடாகச் சென்று தனது கொள்கைகளை போதித்தார். அந்நாட்டு மன்னர்களும் சமயத் தலைவர்களும் சாரதுராஷ்டிர முனிவரைக் கடுமையாக எச்சரித்ததோடு, அவரைப் பின்பற்றுவோர் கடுமையான தண்டணைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தனர். அதனால் சாரதுராஷ்டிர முனிவரின் சித்தப்பா ஆராஸ்தி என்பவரின் புதல்வன் மைதியொயிமாங்க என்பவரைத் தவிர யாரும் பின் தொடரவில்லை.

சாரதுராஷ்டிர சமயம் முதலில் வீஷ்தாஸ்ப மன்னனின் நாட்டில் பரவி, பாரசீகம் மற்றும் அண்டை நாடுகளில் பரவ ஆரம்பித்தது.

*அஹூர மஜ்தா (Ahura Mazda)*

நக்ஷ்-எ-ரஸ்டம் (Naqsh-e Rustam) என்பது பெர்சோபொலிஸின் (Persepolis) வடமேற்கில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஒரு பழங்கால கல்லறை அமைப்பு ஆகும்.

சாரதுராஷ்டிரர்களின் கடவுள் அஹூர மஜ்தா ஆவார். இவரே பூமியையும் மற்ற அனைத்தையும் படைத்தவர்.


*பார்சி இன மக்கள் புலப் பெயர்வு*

பாரசீகத்தை கி.பி. 651-ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இஸ்லாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குஜராத்து கடற்கரை பகுதிகளில் 775-ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். 

பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்

*இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள்*

இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள் அவர்களின் தாய் நாடான பாரசீகத்தின் பெயரால் பார்சிக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சௌராஷ்டிரர் சமயத்தினர், தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், அம்ரேலி மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், போடாட் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.

1024-1025 இல் கஜினி முகமது சௌராஷ்டிர தேசத்தினையும், சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலையும் சூறையாடிய பின், அங்கு வாழ்ந்த சௌராஷ்டிரர்களின் பெரும் பகுதியினர், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் தலைமையகமான காம்பாலியம் நகரத்தில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பின், தற்போதைய மகாராஷ்டிரத்தில் உள்ள தேவகிரியில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் கபூர் தேவகிரியை 1307ல் கைப்பற்றியபின்பு, இந்துக்களின் புகழிடமாக விளங்கிய விஜயநகரப் பேரரசில் 1312ல் குடியேறினர். விஜயநகரப் பேரரசு, பாமினி சுல்தான்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர் சௌராட்டிர சமூக மக்கள் 1575-க்குப் பின்பு தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ்நாட்டின், மதுரை, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், பரமக்குடி போன்ற பகுதிகளில் குடியேறினர்.

அலாவுதீன் கில்ஜி மற்றும் கஜினி முகமது போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் கொலை வெறியாட்டத்திற்கும், கட்டாய இஸ்லாமிய மத மாற்றத்திற்கு அஞ்சியும், சௌராஷ்டிர தேசத்து சௌராஷ்டிரர்கள் கி.பி. 1025 முதல் புலம்பெயர்ந்து, பல்லாண்டுகள் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியாகத் தமிழகத்தை தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர்.

*சௌராஷ்டிர மொழி*

இவர்கள் பேசும் மொழி, சமஸ்கிருதத்தின் பேச்சு மொழியான பிராகிருதம் என்ற குடும்ப மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழியான ’சௌரஸேனி’ மொழியாகும். இந்த ‘சௌரஸேனி’ மொழியைத் தான் சௌராட்டிரர்கள் தேசத்தில் இருந்தபோது பேசினர். இந்த மொழி குறித்து 1861 மற்றும் 1907 ஆகிய ஆண்டுகளில் டாக்டர். ராண்டேல் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியவர்கள் ஆய்வு செய்து, தமிழ்நாட்டு சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி ‘சௌரஸேனி” என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழியிலிருந்து வளர்ந்தவைகள்தான், ”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’, மற்றும் ’மஹராஷ்ட்ரீ’ மொழிகள். ’சௌரஸேனி’ மொழியிலிருந்து வளர்ந்தவைகள்  இன்றைய குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மொழிகள்” என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி சௌராஷ்டிரம் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் சௌராஷ்டிர மொழி எழுத்து வடிவத்தை மதுரை போராசிரியர் தொ.மு. இராமராய் (1852-1913) என்ற சௌராஷ்டிர மொழி அறிஞர், வட மொழி பேராசிரியரான சதுர்வேதி இலக்குமணாச்சாரியர் என்பவரின் உதவியுடன், சௌராட்டிர மொழி எழுத்துக்களை சீர்திருத்தி, புதிய வடிவில் சௌராஷ்டிரா மொழியில் பல பாடநூல்கள் அச்சிட்டு வெளிட்டுள்ளார். இம்மொழிக்கான இலக்கணத்தை மதுரை, தொ. மு. இராமராய் மற்றும் சேலம், புட்டா. ந. அழகரய்யர் ஆகியவர்கள் செம்மைப்படுத்தி புதிய இலக்கண நூல்கள் அச்சிட்டு வெளியிட்டனர்.

*(தொடரும்)*
[07/07, 11:22 p.m.] +91 99413 30202: *மத அரசியல் - அத்தியாயம் (13)*
______________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : ராமகிருஷ்ணன்
______________________________

*டாவோயிஸம் (Taoism)*
ஆரம்ப காலத்தில் டாவோ ஒரு மதமாக இருந்தது என சொல்வதை விட ஒரு தத்துவமாக இருந்தது எனச் சொல்லலாம். சீனாவின் பழமையான மதம் டாவோயிஸம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப் பழமையான மதம் இது.

*லாவோட் ஸே*

லாவோட் ஸே (Laozi) என்றால் ”வயதான எஜமான்” அல்லது வயதானவர் எனப் பொருள்படும். லாவோட்ஸே தன் வாழ்வின் பெரும் பகுதியை சௌ பேரரசிலேயே கழித்தார். பேரரசின் வீழ்ச்சியை முன் கூட்டியே அவர் உணர்ந்து அங்கிருந்து விலகி எல்லைப்பகுதியில் வசித்தார். அங்கிருந்த சுக்கச் சாவடி அதிகாரியான “இன் ஷி’வேண்டுகோளின்படி கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டு டாவோ டே ஜிங் (Tao Te Ching) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இது ஒரு மனிதன் உயர்வை அடைவதற்கும், நல்ல தலைவானாக விளங்குதற்கும் என்ன மாதிரியான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான தத்துவ நூலாகும்.

சொர்க்கத்திற்கும், பூமிக்கும் முன்பாக என்ன இருந்தது அல்லது இருக்கிறது என்பதைப் பற்றிய ஒர் திறன்பெற்ற ஆய்வையும் அதில் விளக்கி இருந்தார். இவரது நூல் சமயம் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் இருந்தது அது பலரையும் ஈர்த்தது.  எனினும் டாவோயிஸம் அப்போது நெறி முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கற்ற ரீதியிலேயே பின்பற்றப்பட்டு வந்தது.

*ஸாங் டாவோலிங்*

ஸாங் டாவோலிங் (Zhang Daoling ) என்பவர் கி.பி.142ஆம் ஆண்டில் டாவோ டே ஜிங்  நூலைப் புனித நூலாக விளக்கினார்.  இது வெறும் தத்துவம் சார்ந்த நூல் மட்டுமல்ல, வானத்து தேவதைகளை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்தும் புனித நூல் என்பதைக் கண்டறிந்தார்.

ஆன்மீகத் தொடர்பினை அழகாகவும், ஆழமாகவும் இதில் விளக்கப்பட்டிருப்பதை நன்றாகப் புரிந்துணர்ந்தார். மேலும் மரணமற்ற நிலையைப் பற்றியும் மனிதர்கள் அறிந்து கொள்ள இது உதவுவதாகவும் கூறி, ஒரு ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட தீதியில் டாவோயிஸம் என்னும் மதத்தை உருவாக்கினார்.

கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இக்லிஷ் இருவரும் டாவோ டே ஜிங்  நூலை நவீன மொழிபெயர்ப்பாக்கினர். இதன்பிறகே டாவோயிஸம் சார்ந்த நூல்கள் ஏராளமாக வெளிவந்து மக்கள் மத்தியில் பரவலான எழுச்சியை ஏற்படுத்தியது. நிறைய பேர் இம்மத்தில் ஈடுபாடு வைத்து அவனைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர் டாவோயிஸம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் தன் சிறகை விரித்தது என்பது வரலாற்றுச் சுவடுகள் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

*எட்டு சாவாமையுள்ளவர்கள்*

சாங் லிங் அதாவது சாங் தாவோ லிக் என்பவர் மேற்குச் சீனாவில் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தும் இரசவாத முறையை அறிமுகப்படுத்தினார். புத்த மதத்தின் தோற்றத்தினால் வந்த சவாலை சமாளிக்க தன்னை ஒரு மதமாக பிரபலப்படுத்திக் கொண்டது. அதன்பின் சாவாமையுள்ளவர்கள் எட்டு(Eight Immortals) தெய்வங்களை (பா ஷியான்) அடுப்படியின் தெய்வம் (சாஓ ஷென்) நகர தெய்வகள் (ஹெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர் வணங்கப்பட்டனர்.

ஒரு கூட்டத்தில் டாவோயிஸம் என்பது தத்துவம் மட்டுமே என்றும், சமயம் மட்டுமே என்றும் இருவேறு கோணத்தில் கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்து அறிவியலாளர்களும் தீவிரமான ஆய்வினை மேற்கொண்டனர். எனினும் முடிவில் இது இயற்கை, மனிதம் மற்றும் தெய்வீகம் ஆகிய அனைத்தையும் வலியுறுத்தி இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மட்டுமன்றி, ஒரு தலைவனாக இருந்து கொண்டு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்னும் அரிய வழிகாட்டுதலையும் இது நமக்கு அருளியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மூட நம்பிக்கைகளால், கி.பி.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் டாவோயிஸம் திட்டமிட்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இந்த மதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மீண்டும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது.  அதன் அரிய தத்துவங்கள் அதன் வளத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இப்போது கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்தவர்களும் டாவோயிஸத்தின் மீது புதிய அக்கறை கொண்டு வருகின்றனர். முக்கியமாக அவர்கள் இதனை மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்தினை வற்புறுத்தும் தத்துவம் சார்ந்த விஷயமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.

அக்யூபங்சர், மூலிகை, மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இதனை அணுகி வருகிறார்கள்.  டாவோயிஸம் எனபதில் இம்மாதியான மருத்துவம் ஒரு பகுதி என்பதே உண்மை.

டா என்றால் வழி அல்லது ‘பாதை’ என்று பொருள். இந்த அண்டமானது இயல்பாகவே ஒரு வழியைக் கொண்டிருக்கிறது.  அந்த வழியை அறிந்து அதனுடன் மனிதன் ஒன்றிப்போகிறபோது அவன் முழுமையைப் பெறுகிறான்.  நிறைவை அடைகிறான். இப்படித்தான் போதிக்கிறது டாவோயிஸம்.

டாவோயிஸ நெறிகள் ‘மும்மணிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.  கருணை, அடக்கம், பணிவு ஆகியவையே அந்த மும்மணிகள். சைவ உணவு உண்பதே நல்லது என்றும் இம்மதம் வலியுறுத்துகிறது.

இயற்கையை வணங்குதல், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் போன்றவை டாவோயிஸட்டுகளால் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சீன இரசவாதம், ஜோதிடம், சமையல், போர்க் கலைகள், சீன மரபு வழி மருத்துவம், மூச்சுப்பயிற்சி போன்றவை டாவோயிஸத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது.

இம்மதம், சீனாவைத் தவிர தைவான், புருனே, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 20 கோடிப் பேரால் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் போகர் என்ற சித்தரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இவர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்.  அங்கு இவர் ‘போ யங்’ என்று அழைக்கப்படுகிறார்.

சீனாவில் டாவோயிஸம் உருவாகக் காரணமாக இருந்த லாவோட்ஸேயும், போகரும் ஒருவரே என்றும் சிலர் கூறுகின்றனர். பிறப்பால் இவர் ஒரு சீனர் என்றும் இவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

*(தொடரும்)*

No comments:

Post a Comment