audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Saturday, August 20, 2022

"உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

டாக்டர் "ஜோஸப் மார்பி" எழுதிய "ஆழ் மனதின் அற்புத சக்தி" என்னும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஒரு வரி... "உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

ஆம்! உண்மை தான்!!
பெரும்பாலும் உறவினர்கள் ஆலோசனை ஒருதலை பட்சமாக தான் இருக்குமே தவிர ஒரு போதும் தீர்வுகளை நோக்கி இருக்காது.!

அதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் மூன்றாம் நபரிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்களே தீர்வுகள் எடுக்க முடியும் என்பதை நம்புங்கள்!

உங்களை விட வேறு யாரும் உங்களை நேசிக்க முடியாது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் மேல் நலன் இருக்காது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்காது!
....என்னும் உண்மையை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு உங்கள் மனம் சொல்லும் தீர்வையே சரி என்று எடுங்கள்!


No comments:

Post a Comment