audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, April 7, 2021

கருக்குழாயில் கருவளர்ச்சி பற்றி

Partagé de mes Notes:
🔯 #கருக்குழாய்_கருவளர்ச்சி
#பற்றி

#நாம்_தெரிந்து_கொள்ள 
#வேண்டியவை…❓❓❓

(#Ectopic_Pregnancy)

தாம்பத்ய உறவில் கணவனிடம் இருந்து வெளியாகும் விந்து, பெண் உறுப்புக்குள் வருகிறது. அதில் இருக்கும் உயிரணு மட்டும் நீச்சல் அடித்து கர்ப்பப்பை வாய்வழியாக கருக்குழாய்க்குள் நுழைகிறது. 

சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெடித்து வெளியேறும் சினைமுட்டையும் கருக்குழாய்க்கு வருகிறது. 

4, 5 மணிநேரத்தில் உயிரணு சினை முட்டையை துளைத்து உள்ளே புகுந்து கருவாகி விடுகிறது. மனிதப் பிறப்பின் இந்த அற்புத நிகழ்வு கருக்குழாயில் தான் அரங்கேறுகிறது. 
4, 5 நாட்கள் கருக்குழாயிலே கரு வளர்ந்து சிறிது சிறிதாக கர்ப்பப்பையை நோக்கி நகர்ந்து வரும். 

கர்ப்பப்பை தேவையான மாற்றங்களோடு கருவை உள்வாங்கிக்
கொள்ளும். பின்பு கர்ப்பப்பைக்குள் கரு, சிசுவாக வளர்ந்து குழந்தையாக உருவாகும். கருக்குழாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த நவீன மருத்துவ முறைகளைப் பார்ப்போம்...

#கருக்குழாய்கள்

- இவை பிறப்பில் பெரும்பங்கு வகிக்கும் இனப்பெருக்க உறுப்புகள்.

- கருக்குழாய்கள் சினைப்பையில் தொடங்கி, கர்ப்பப்பையில் நிறைவடைகிறது.

- உற்றுக்கவனித்தால், ஒரு மனிதன் இருகைகளையும் நீட்டி சினைப்பைகளை தாங்கிப் பிடித்தது போல், இந்த கருக்குழாய் கட்டமைப்பு தோன்றும். 
தலா 10 செ.மீ. நீளம் கொண்டவை. நூலிழை போல் ஒன்று முதல் 4 மி.மீட்டர் அகலம் கொண்டவை.

நீங்கள் சோதனைக்குழாய் குழந்தை முறையைப் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள்.
 முதல் #சோதனைக்குழாய்_குழந்தை 
#லூயிஸ்_பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது.

பெண்ணின் உடலுக்குள் கருக்குழாய் இயற்கையாக செய்யும் அதே பணியைத்தான், வெளியே ஆய்வு கூடத்தில் சோதனைக்குழாய் மூலம் செய்கிறார்கள். சினை முட்டையையும், உயிரணுவையும் சோதனைக் குழாயில் சேர்த்து கருவாக்கம் செய்து, பின்பு தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். கருக்குழாயில் பாதிப்பு கொண்ட பெண்களுக்காக சோதனைக் குழாய் முறை உருவாகி இருக்கிறதென்று!

கருக்குழாய்கள் மிகமிகச் சிறியதாகவும்-மிகமிக மென்மையான
தாகவும் இருப்பதால் இது பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். 

தற்போதைய கணக்குப்படி பெண்களின் குழந்தையின்மைக்கு 20 முதல் 25 சதவீதம் கருக்குழாய் பாதிப்புதான் காரணமாக இருக்கிறது.

* திருமணத்திற்கு முன்பு பெண்கள் ஏற்படுத்திக்
கொள்ளும் உடலுறவு மற்றும் அதன் பின் விளைவுகளால் ஏற்படும் நெருக்கடிகள்.

*அதிகமானவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும்போது ஏற்படும் பால்வினைநோய் பாதிப்பு❗ பால்வினை நோய்களில் '#கிளாமைடியா' என்பது #வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இது எந்தவித நோய் அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் உள்ளே இருந்து கருக்குழாய்களை பாதிக்கச் செய்துவிடும்.

* காச நோயின் அதிக தாக்குதலும் கருக்குழாய்களை பாதிக்கலாம்.

* அறுவை சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பாலும், பிறவியிலே ஏற்படும் குறைபாட்டாலும் கருக்குழாயில் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு.

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடிக்க நவீன மருத்துவ வழிமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட திரவத்தை கர்ப்பப்பை வாய் பகுதியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். அந்த திரவம் செலுத்தப்படும் போது அது கருக்குழாய்களுக்குள் முன்னேறி செல்லும். அப்போது எங்கு தடை ஏற்படுகிறது❓

👉எந்த அளவுக்கு அந்த தடை  உள்ளது❓
என்பதை எல்லாம் கண்டுபிடித்து விடலாம். 

லேப்ராஸ்கோபி முறையில் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியும் நீலநிற திரவத்தை செலுத்தலாம். அந்த திரவம் செல்வதை கேமிராவில் பார்க்கலாம்.

இதன் மூலம் வலது-இடது எந்தபக்க கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து சிகிச்சை செய்யலாம். அழுத்தம் கொடுத்து திரவத்தை செலுத்தும்போதே சிலருக்கு அடைப்பு நீங்கி, பாதை சரியாகிவிடும். அதனால் அவர்கள் விரைவாகவே தாய்மை அடையும் வாய்ப்பு ஏற்படும். நுண் குழாயை உள்ளே செலுத்தி அடைப்பை நீக்கும் முறையும் ஓரளவு பலன்தரும். இந்த முறைகளில் பலன் கிடைக்காதபோது சோதனைக்குழாய் குழந்தை முறை பரிந்துரைக்கப்படும்.

கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதிலே கரு தங்கி வளர்வது உயிருக்கே ஆபத்தானதாகும். 

கருக்குழாயில் வளரும் கருவானது 5-வது நாள் கர்ப்பப்பைக்குள் வந்துவிட வேண்டும். அடைப்பு இருந்தால், கர்ப்பப்பைக்குள் செல்லமுடியாமல் கருக்குழாயிலே தங்கி கரு வளரத் தொடங்கிவிடும். 
அது வளரும் போது கருக்குழாய் வெடித்து, தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இப்படி கரு வளர்வதை '#எக்டோபிக்_பிரக்னன்சி' என்பார்கள். 

முன்பெல்லாம் இத்தகைய புற கர்ப்பம் (எக்டோபிக் பிரக்னன்சி) பாதிப்பால் ஏராளமான #பெண்கள் #இறந்திருக்கிறார்கள். 

தற்போது அதை கண்டுபிடித்து, அந்த கருக்குழாயை அகற்றி, கருவை நீக்கம் செய்து விடுவார்கள். மீதமிருக்கும் இன்னொரு குழாய் மூலம் அடுத்து தாய்மை அடைய முடியும்.

தேவைக்கு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் மீண்டும் தாய்மை அடைவதை தவிர்க்க

 கருத்தடை ஆபரேஷன் செய்து
கொள்வார்கள். 

அப்போது கருக்குழாயை துண்டித்து முடிச்சு போடப்படும். இது '#டியூபெக்டமி' கருத்தடை ஆபரேஷன் ஆகும். இந்த கருத்தடை ஆபரேஷனை செய்து கொண்டவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், 
'#ரீ_கேனலைஷேசன்' செய்து மீண்டும் கருக்குழாய்களை ஆபரேஷன் மூலம் இணைப்பார்கள். 

அதன்பின்பு தாய்மை அடைய வாய்ப்பு உண்டு❗

#புதுமணத்_தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

🔴 தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன❓❓❓❗❗❗

* கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா அல்லது அதைக் கடந்து விட்டேமா❓

* தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்
கிறதா❓

* உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா❓

* கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது❓

* கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்❓

* தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்❓

* உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா❓ அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேணடியது அவசியமா❓

* உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா❓

* பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன❓

* பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா❓

* எப்போது கருத்தரிக்க இயலும்❓

* கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்❓

* கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா❓

* பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி❓

* சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன❓

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
#La médecine traditionnelle

No comments:

Post a Comment