audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, April 24, 2023

பல்கேரியா பாபா வங்கா- பாபா வங்கா.

பல்கேரிய பாபா

பல்கேரியாவைச் சேர்ந்தவர் இந்த பாபா வங்கா.
இவர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்துக் கூறுவார். இவருக்கு பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு..

இவர் தனது 12 வயது வரை எல்லோரையும் போலத்தான் வாழ்ந்து வந்தார்.

ஆனால் அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது

. 12 வயதில் இவருக்கு கண் பார்வை பறி போனது.
மிகப் பெரிய சூறாவளியால் இவரு பார்வை பறி போனதாக சொல்கிறார்கள்.

ஆனால் இவருக்குப் பார்வை எப்படிப் பறி போனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை  சூறாவளி இவரது ஊரை சின்னாபின்னமாக்கி விட்டது.

குடும்பமே பிரிந்து போனது. பல நாட்களுக்குப் பிறகுதான் வெஞ்செலியாவை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

அப்போது இவரது கண்கள் மூடி சீல் வைக்கப்பட்டது போல இருந்தது.

எதிர்காலத்தைக் கணித்துக் கூற ஆரம்பித்தார்.என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கூற ஆரம்பித்தார்.இது பலருக்கு வியப்பளித்தது.

பலரின் பிரச்சினைகளையும் அருள் வாக்கு கூறி தீர்த்து வைத்தார் வெஞ்செலியா.

இவருக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போரின்போது பல்கேரிய ஜார் மன்னர் 3ம் போரிஸ் இவரைப் பார்த்து அருள் வாக்கு கேட்டதாக சொல்கிறார்கள்.

மனிதர்கள் உங்களுக்கு எப்படி எதிர்காலத்தைக் கணித்துக் கூற முடிகிறது என்று இவரிடம் கேட்டால், உருவம் இல்லாத சில மனிதர்கள் தனக்குத் தகவல் தருவதாகவும் அதை வைத்தே தான் கணித்துக் கூறுவதாகவும் கூறியுள்ளார்

இவர். சுனாமியைக் கணித்தவர் இவர் 2004ம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமியை முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம்.

மேலும் உலக வெப்பமயமாதல் குறித்தும் இவர் கூறியுள்ளாராம்.

அதேபோல நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலையும் இவர் முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம்.

இரும்புப் பறவைகள் வந்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும். அப்பாவி ரத்தங்கள் மண்ணில் சிந்தும் என்று அவர் கூறியுள்ளாராம்.

ஒபாமா குறித்தும் இவர் அமெரிக்காவின் 44வது அதிபராக ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் பதவியேற்பார் என்று கணித்துக் கூறியுள்ளார்.
அதன்படியே ஒபாமா அதிபரானார்.

.
மனிதன் 2130ம் ஆண்டு வாக்கில் மனிதர்கள் தண்ணீருக்கு அடியில் வசிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் இவர் கணித்துள்ளார்.

இதற்கு வேற்றுகிரகவாசிகள் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

3005ம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்தில் பெரிய போர் வெடிக்கும் என்றும் இவர் கணித்துள்ளார்.

இதுதான் பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவர் கடந்த 1996ம் ஆண்டே மறைந்து விட்டார்.

இன்னும் இவர் வாழ்ந்த காலம் முதல்  5079 வருடம் வரை கணித்து கூறிவுள்ளார்

தொடர் நல்ல செய்திகளோடு.

No comments:

Post a Comment